
இன்று நல்ல நினைவு இருக்கும் போதே அருள் உணர்வை வளர்க்கும் பருவத்திற்கு நாம் வர வேண்டும்
இந்த மனித உடலில் நாம் வாழும் இந்தச் சிறிது காலத்திற்குள்ளேயே நாம் ஒளியான நிலைகள் பெற வேண்டும். ஏனென்றால் இந்த உடலில் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது தெரிகின்றது.
அதற்குள் எத்தனையோ நிலைகளில் நாம் ஆசை வைக்கிறோம். எல்லாவற்றையும் செலவழிக்கின்றோம்... ஆடம்பரத்திற்கும் செலவழிக்கின்றோம்.
1.ஆனால் எதுவும் நிற்கின்றதா…?
2.செல்வத்தைச் சம்பாரித்து அழகாக வீட்டைக் கட்டி உடலையும் அழகு படுத்தினாலும்
3.நோய் என்ற நிலை வந்து விட்டால் அது எல்லாவற்றையும் தூக்கி எறி…! என்று சொல்கின்றோம்.
4.அந்த நேரத்தில் நல்லதை எல்லாம் வேண்டாம் என்று சொல்கிறோம் அல்லவா.
இன்று நன்றாக மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். யாராவது ஒரு சொல் தவறாகக் கேவலமாக சொல்லிவிட்டால் உடனே மனது சோர்வடைந்து விடுகின்றது.
என்னைக் கேவலமாகப் பேசினார்கள்... கேவலமாகப் பேசினார்கள்…! என்று வேதனை வருகின்றது. இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் அவர் மீது வெறுப்பும்... அவர் என்னென்ன சொன்னார்களோ அதை எல்லாம் எடுத்து இந்த உடலில் விளைய வைக்கத் தொடங்குகின்றோம்.
அதாவது… கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்பது போல் அவர்கள் உணர்வு இங்கே உருவாகிறது.
1.அவர்கள் சொன்னால் சொல்லிவிட்டுப் போகின்றார்கள்
2.மகரிஷிகள் அருள் சக்தியால் அவர்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று சொன்னால் அந்த உணர்வு நம்மை இயக்காது.
இப்படிப்பட்ட உணர்வை எடுத்து நாம் அதைத் தடுத்துப் பழக வேண்டும். அதனால்தான் ஆறாவது அறிவைச் சேனாதிபதி என்று சொல்கின்றோம்.
அதைத் தடுக்கக்கூடிய வல்லமை எப்படிப் பெற வேண்டும்…?
மகரிஷிகளின் அருள் சக்திகளை... அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கப்படும் பொழுது அது பாதுகாப்பாக வரும்.
1.அந்த மகரிஷியின் உணர்வுகளைப் புருவ மத்தியில் நம் உயிருடன் இணைக்கப் பழக வேண்டும்.
2.அங்கே உருவாக்கும் திறனாக அது அமையும்... அது தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்.
3.அருள் ஒளியின் உணர்வை அணுக்களாக நமக்குள் பெருக்கினால் அது நம்மைக் காக்கின்றது.
வேதனையான உணர்வை நுகர்ந்து விட்டாலோ தீமையின் விளைவாகவே நம்மை மாற்றிவிடும்.
இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு அருள் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிப் பெருக்கிக் கொண்டு பெரிய தத்துவ ஞானியாக வளர வேண்டும். எல்லோரையும் காத்திடும் சக்திகளாக நாம் வரவேண்டும்.
பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்குள் இந்த உணர்வைப் பதிவு செய்ய வேண்டும்.
ஏனென்றால் நான் படிக்காதவன் தான் இத்தனையும் பேசுகின்றேன். படித்துக் கொண்டிருப்பவர்கள் ஆழமாகப் பதிவாக்கி இந்த ஆற்றலை நீங்கள் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.
எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் பார்வை இருளை அகற்றும் உயர்ந்த சக்தியாக வளரட்டும்.
1.அருள் ஞானத்தைப் பெறும் கருவின் தன்மை உருவாக்க வேண்டும்.
2.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெற வேண்டும்.