ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 25, 2017

“நோய் நீக்கும் பயிற்சி...”

நம் வாழ்க்கையில் நம்மை அறியாது எத்தனையோ வகையான வேதனைப்பட்டிருப்போம் சங்கடப்பட்டிருப்போம்.

அதிகமாக “வேதனை...வேதனை...” என்று வாழ்க்கையில் எண்ணிக் கொண்டிருந்தால் அது நம் உடலில் கேன்சர் நோயாக மாறுகின்றது.

“வேதனை...சலிப்பு வேதனை...சலிப்பு...” என்று எண்ணிக் கொண்டிருந்தால் வாத நோய்கள் உருவாகி கை கால்கள் வராது ஆக்கிவிடுகின்றது.

“வேதனை...வேதனை என்று கோபமும்...கடு...கடுத்த நிலையும்...” கொண்டு வாழ்ந்தால் முடக்கு வாதம் கீழ் வாதம் சரவாங்கி நோய் போன்றவைகள் வந்துவிடுகின்றது.

“வேதனையும் அதிக சலிப்பும்...” எடுத்தால் உப்புச் சத்து கூடுகின்றது. டி.பி. போன்ற நோய்கள் உருவாகிவிடுகின்றது.

அடிக்கடி “சலிப்பு...சலிப்பு சஞ்சலம்...” என்று எடுத்தால் ஆஸ்த்மா போன்ற நோய்கள் வரக் காரணமாகிவிடுகின்றது.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று பண்பும் அன்பும் கொண்டு பரிவுடன் கேட்டறிந்தாலும் நம்மை அறியாது நுகர்ந்தறிந்த அவர்கள் வேதனைகளை நம் உயிர் ம் நமசிவாய என்று உருவாக்கிவிடுகின்றது.

அவர் உடலில் விளைந்த நோய்களை நம் உடலிலும் உருவாக்கத் தொடங்கிவிடுகின்றது. இதைப் போன்று நம் உடலில் பலவிதமான உணர்வுகள் கலவையாகி ஒவ்வொரு உடலிலும் பலவிதமான நோய்களை உருவாக்கும் அணுக்களை உருவாக்கிவிடுகின்றது.

ஆகவே இதற்கு முன் நம் உடலில் அறியாது சேர்த்துக் கொண்ட நிலைகளால் நம் உடலில் அந்த அணுக்களின் பெருக்கமாகி எத்தனையோ வகையான நோய்கள் உண்டு.

மகரிஷிகளின் அருள் ஆற்றலைப் பெற்று அறியாமல் வந்த இதைப் போன்ற நோய்களிலிருந்து நாம் விடுபட முடியும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும்
எங்கள் இரத்த நாளங்களில் கலந்து
எங்கள் உடல் முழுவதும் படர்ந்து
எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற்று
எங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த
சாப வினைகளால் தீய வினைகளால் விளைந்த
சர்வ நோய்களும் சர்வ ரோகங்களும் நீங்கி
சர்வ ரோகங்களையும் நீக்கிடும் அருள் சக்தி பெற்று
எங்கள் உடல் நலம் பெற்று வளம் பெற்று வாழ்ந்திட
அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களை மூடி
புருவ மத்தியில் நினைவினைச் செலுத்தி
அந்தப் பேரருளை உங்கள் உடலுக்குள் செலுத்தி
பேரொளி என்ற நிலை உருப்பெறத் தியானியுங்கள்.

ஒரு நாளைக்கு உங்களால் எத்தனை முறை இதைப் போன்று எண்ணித் தியானிக்க முடியுமோ இதைச் சுவாசியுங்கள்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி என் உடல் முழுவதும் படர்கின்றது
2.”எனக்கு நோய் இல்லை” என்று எண்ணிப் பாருங்கள்.

இப்படி எடுக்கும் இந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகள் உங்கள் இரத்தங்களில் அணுக்கருக்களாகி விளையத் தொடங்கும் பொழுது நோயின் வீரியம் குறையும். உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய நல்ல அணுக்கள் உற்சாகம் அடையும்.

நல்ல அணுக்கள் பெருகப் பெருக நோயை அகற்றிடும் சக்தியை நீங்களே பெறுகின்றீர்கள். உங்கள் உடலில் நல்ல இரத்தங்கள் உருவாகும். கணையங்கள் இருதயம் சிறுநீரகம் மற்ற எல்லா உறுப்புகளும் சீராக இயங்கத் தொடங்கும்.

சலிப்பு சஞ்சலம் வேதனை கோபம் சோர்வு ஆத்திரம் பயம் இதைப் போன்ற உணர்வுகளால் விளைந்த நஞ்சான நிலைகளை அகற்றிடும் சக்திவாய்ந்த உறுப்புகளாக மாறும்.

அதே சமயத்தில் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமையானவற்றைக் காணுகின்றீர்களோ நுகர்கின்றீர்களோ அடுத்த கணம் அது உடலுக்குள் சேராவண்ணம் ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொண்டால் எத்தகைய நோயாக இருந்தாலும் கட்டுப்படுத்த முடியும். நோய் வராது தடுக்கவும் முடியும்.
1.உங்கள் எண்ணத்தால் வந்த நோய்களை
2.உங்கள் எண்ணத்தாலேயே மாற்றியமைக்க முடியும்.

ஆகவே மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் ஆற்றலைப் பெறுங்கள். “பேரானந்த நிலை” அடையுங்கள்.