ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 19, 2017

உபதேசங்களைப் பதிவாக்கி வளர்த்துக் கொண்டால் உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு “அந்த ஞானிகளின் உணர்வு தோன்றும்”

இனி வரும் காலங்களில் நாம் எந்த நிலைகளில் இருப்போம் என்றே சொல்ல முடியாது. பக்கத்தில் நெருங்கிக் கொண்டேதான் இருக்கிறது. அதற்குள் நீங்கள் தைரியத்தைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் அணுகுண்டுகளையும் ஹைட்ரஜன் குண்டுகளையும் கெமிக்கல் கலந்த குண்டுகளையும் எல்லாம் மண்ணுக்குள்ளும் கடலுக்குள்ளும் போட்டு வைத்திருக்கிறார்கள்.

இன்று அவர்கள் மோப்பம் (SENSORS) பிடிப்பது போல் அளந்தறிந்து வைத்துள்ளார்கள். அங்கிருந்து தட்டிவிட்டால் போதும். எங்கேயாவது இரண்டு ஊர் கடலுக்குள் போய்விடும்.

அணுகுண்டை கடலுக்குள் போட்டு வைத்திருக்கிறார்கள். மோப்பம் பிடித்து ஏதாவது லேசரை (LASER) அழுத்தம் கொடுத்தால் கம்ப்யூட்டரெல்லாம் தாறுமாறாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

இப்பொழுது கம்ப்யூட்டரில்தான் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். ஒரு பாயிண்ட் தட்டினால் என்னவாகும் என்று லேசரை ஏவி வைத்திருக்கிறான். இந்த மாதிரிக் கண்டுபிடித்து பூமிக்குள் ஒளித்து வைத்திருக்கிறான்.

1.நம் எண்ணங்கள் எப்படிப் பாய்கிறதோ இதே மாதிரி
2.மோப்ப நிலைகளில் ஊடுருவி
3.இதிலிருக்கக்கூடிய லேசர் கதிரியக்கத்தில் பாய்வது போல இருக்கிறது.

அதை இவன் அழிப்பதற்கும் வழியில்லை. கடலுக்குள் போட்டாலும், ஆவியாக வந்து சேர்ந்து விடுகிறது. “என்னடா பண்ணுவது…!” என்கிற வகையில் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அளவில் நாம் இருக்கப்படும்போது சுலபமான முறையில் செயல்படுத்த முயற்சிக்கிறான்.

அணுகுண்டில் பல வகைகள் இருக்கிறது. அதனின் வெப்பத்தால் கடல் அலைகளாகப் பொங்கி வரும். “கடலோரத்தில் இருக்கும் ரொம்ப ஊர்கள் கடலுக்குள் போய்விடும்”.

இனி நடக்கப்போகிறது. அங்கே வெடிக்கிறது தண்ணீருக்குள் போகப்போகிறார்கள், இறந்துவிடுவார்கள். அது மேட்டிலிருந்து நாம் இந்த நிலைக்கு வந்தால் பிட்ஸ் வந்து ஜன்னி வந்துவிடும். எடுத்துத் தண்ணீர் கொடுப்பதற்குக் கூட ஆள் இருக்காது.

தென்னாப்பிரிக்காவில் என்ன செய்தார்கள்…! செய்கிறார்கள் தெரியுமா?

கெமிக்கல் விஷத்தைத் தூவி செடி கொடிகளெல்லாம் அங்கே வளரவிடாதபடி செய்து வைத்துவிட்டு “அங்கு சாப்பாட்டிற்கு இல்லாமல்… கஷ்டப்படுகிறார்கள்” என்கிறார்கள்.

எந்தச் செடியும் வளராது சாப்பாட்டிற்கு இல்லாதபடி கஷ்டப்படுகின்றார்கள் என்று உலகம் முழுவதும் தெரிந்தபின் “இவன் பிழைப்பான்… பிழைக்கமாட்டான்…” என்ற நிலைகளில் இவன் சாப்பாட்டிற்குக்கூட மார்க் போட்டுக் கொடுத்தார்கள்.

இவ்வாறு கொடுத்தாலும் 4,5 நாட்கள்தான் காப்பாற்ற முடியும் என்று வரிசைப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். உலகம் முழுவதும் போட்டோ எடுத்துக் இன்றும் காட்டிக் கொண்ருக்கின்றார்கள்.

அந்த மாதிரி இன்றும் நமக்கு(ம்) மார்க் போடும் நிலை வந்துவிட்டது.

1.இதில் யார் யார் மிஞ்சுவார்கள்…!
2.அடுத்தாக மார்க் போட்டு நீ இப்படிப்போ… நீ அப்படிப்போ…” என்று சொல்லும் நிலை வந்துவிட்டது.

இதிலிருந்தெல்லாம் நாம் தப்புவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்? ஏதாவது வழி வேண்டுமா இல்லையா…!

1.நீங்கள் இந்த “ரிமோட் சுவிட்சை” (REMOTE SWITCH)
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று
3.உங்களுக்குள் அதைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

1.யாம் சொல்லும் முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்றால்
2.உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு “உங்களுக்குள் அந்த உணர்வு தோன்றும்”.
3.அந்த நிமிடத்தில் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

உலக மாற்றங்கள் குறித்து இனி விஞ்ஞானிகள் “நாள்… நேரம்… இத்தனை நொடி…” என்று கூடச் சொல்வார்கள். அதற்குள் பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.