ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 3, 2017

கர்ப்பமாக இருக்கும் தாய் “அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது” – கர்ப்பமாக இருக்கும்போது அறியாமல் பேசும் உணர்வுகள் குழந்தையை எப்படித் தவறு செய்யக்கூடியவனாக மாற்றுகிறது?

கர்ப்பமாக இருக்கும் பொழுது முதல் ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் தாய் உற்றுப் பார்த்து நுகரும் உணர்வுகள் குழந்தைக்குப் “பூர்வ புண்ணியமாக” அமைகிறது.

பிறர் தவறு செய்வதைப் பார்த்து நியாயத்தைப் பேசியிருப்போம். நுகர்ந்த அந்த உணர்வு இரத்தத்தில் கலந்து கருவிலிருக்கும் குழந்தைக்குப் போய்விடுகின்றது.

அப்படிப் பிறந்த குழந்தைகளைப் பாருங்கள். எந்தத் தவறைச் செய்தாலும் அந்தத் தவறை நுகர்ந்தாலும் அதே தவறான நிலைக்கே போகும்.

ஒருவன் திருடனாக இருப்பான். ஏண்டா… இப்படி இருக்கின்றாய்…? என்று கேட்போம். கேட்கவில்லை என்றாலும்
1.அவன் செயலைப் பார்த்தவுடன் கருவிலே விளைகிறது.
2.ஏனென்றால் இந்தக் “காந்தம்” இதை இழுத்துக் கொண்டே இருக்கும்.
3.உணர்வை நுகரச் செய்கிறது.
4.அப்படியே கருவிலிருக்கும் குழந்தைக்குள் விளைகிறது.

அது பிறந்தபின் என்ன செய்கிறது? நாம் பிறருக்கு நியாயத்தைச் சொன்னோம். அதே மாதிரித் தவறு செய்ய ஆரம்பித்துவிடும். உங்கள் குழந்தை இந்த மாதிரித் தவறு செய்கிறது என்று யாரிடமும் நீங்கள் சொல்ல முடியாது.

காரணம் (திருடனைப் பார்த்து) நாம் கேட்ட உணர்வுகள் தான்.

ஆகவே “கர்ப்பம்” என்று தெரிந்தால் எப்படி இருக்க வேண்டும்? எதை எண்ண வேண்டும்?

அன்றைய காலங்களில் ஞானிகள் தெய்வ குணங்களை உருவம் அமைத்து அதன் நிலைகளைக் காட்டியிருப்பார்கள். நாம் அந்தத் தெய்வப் படங்களை வீட்டிலும் மாட்டியிருக்கின்றோம்.

“மகாலக்ஷ்மி” போல் என் குழந்தை இருக்க வேண்டும் அழகாக இருக்க வேண்டும். “மகா சரஸ்வதி” போல் என் குழந்தை நல்ல ஞானத்தைப் பெறவேண்டும்.

மிருக நிலையிலிருந்து மனிதனாகத் தோன்றிய “வினைகளுக்கெல்லாம் நாயகனான… அந்த விநாயகன்” முழு முதல் கடவுளாக இருக்கின்றான். அதே மாதிரி என் குழந்தை நல்லதை உருவாக்கக்கூடிய சக்தி பெறவேண்டும்.

ஞானிகள் சொன்ன இந்த முறைப்படி யாராவது நாம் நினைக்கின்றோமா...!

கற்பூர ஆராதனை செய்கிறோம். அடுத்து என் பையன்… “இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கின்றானே…” என்று குறைபாடுகளை எண்ணித்தான் அழுகின்றோம்.

ஞானிகள் எத்தனையோ வழிகளில் திருத்துவதற்கு வழி கொடுத்திருக்கின்றார்கள். அதன் வழிகளில் போவதில்லை. நாம் வேதனையான உணர்வுகளைத்தான் கவர்கின்றோம்.

தீபாராதனை கொடுக்கும்போது கூட குழந்தைக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… பெறவேண்டும்… என்று எண்ண முடியவில்லை.

காரணம் இதையெல்லாம் மறைத்துவிட்டார்கள். அதனால் எடுக்க முடியவில்லை.

எல்லாம் நன்றாக இருப்பார்கள். ஆனால், “என் குழந்தை இப்படி இருக்கிறதே என்ற உணர்வுகளை எண்ணி எடுப்பார்கள்.

இது போன்ற நிலைகளை நீக்க வேண்டுமென்றால் உங்களுடைய குடும்பமே ஒரு தெய்வீகக் குடும்பமாக மாற வேண்டும். கர்ப்பமுற்ற பெண்களை அருள்ஞான நூல்களைப் படிக்கச் செய்யுங்கள்.

பிறரைப் படிக்கச் சொல்லி செவி கொடுத்துக் கேட்கச் செய்யுங்கள். அருள் ஞானவழி வயிற்றில் வளரும் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதனால், பிறக்கும் குழந்தை அருள்ஞானக்  குழந்தையாகப் பிறக்கும்.

குடும்பத்தில் சாப அலைகளை நீக்கும் அருள் சக்தியும் உலகத்தை ஞானத்தின் வழி அழைத்துச் செல்லும் நிலையும் குடும்பத்தில் தொழில் வளத்தைப் பெருகச் செய்யும் நிலையும் கருவில் உள்ள குழந்தைப் பெற்று அருள் ஞானியாக உருவாவான்.

அனைத்து மக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியைப் பெற்றுத் தம்முள் அறியாது சேர்த்த இருளை அகற்றி நஞ்சினை வென்று பேரருள் உணர்வுகளை உங்களுக்குள் பெருக்கி மெய்ப்பொருள் காணும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள்ஞானம் நீங்கள் பெற்று
2.பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள்சக்தி பெற்று
3.பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள் வாழ்க்கை அமைந்து

இவ்வாழ்க்கையில் பேரின்ப பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.