ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 8, 2017

ஊசி மருந்தைச் செலுத்திச் செலுத்தி மனிதனை “1500 வருடம்” வாழ வைக்கலாம் என்று விஞ்ஞானம் சொல்கிறது...!

கை கால் வலி மூட்டு வலி உடல் வலி நெஞ்சு வலி என்று இவையெல்லாம் வருவது எதனால்...!

சந்தர்ப்பவசத்தால் நாம் நஞ்சான உணர்வுகளை சலிப்பு சஞ்சலம் கோபம் வேதனை ஆத்திரம் நுகர்ந்துவிடுகிறோம். அந்த நஞ்சான உணர்வுகள் நம் உடலில் சேர்ந்தவுடன் நம்மை மனிதராக உருவாக்கிய அனைத்தும் மாறுகின்றன.

இதனால் அங்கங்கே வலி நுரையீரல் வீக்கம் போன்றவை வருகின்றன.

இதற்கு விஞ்ஞானிகள் (டாக்டர்கள்) என்ன செய்கிறார்கள்? மற்ற உடலின் உறுப்புகளை இரசமாக்கி நோய்வாய்ப்பட்ட உடலுக்குள் செலுத்திப் பலவீனமான உறுப்புக்களை வலிமையாக்குகின்றனர்.

இதற்குண்டான உபாயங்களைச் செய்து நோயின் வேகத்தைத் தணித்தாலும் நாம் எத்தனை காலம் வாழ்கின்றோம்?

ஆடு மாடு போன்றவைகளின் உணர்வுகளை நுரையீரல்களில் செலுத்துகின்றனர். ஆனால் ஆடு மாடுகள் தங்கள் உடலில் “விஷத்தை ஏற்றுக் கொண்டவைகள்”.

அதனின் உணர்வின் தன்மையினை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.விஷத்தின் தன்மை கொண்டு நோயின் அணுக்கள் வராது. 
2.அப்பொழுது அடுத்து மனிதருக்கு எந்தக் குணம் வரும்?
3.மிருகக் குணம் தான் வரும்.

இதே போன்று மற்ற உணர்வின் செல்களை எடுத்து மாற்றி மாற்றி 1500 ஆண்டுகள் வாழக்கூடிய மனிதனை உருவாக்க முடியும் என்று முயற்சிக்கின்றார்கள்.

1500 ஆண்டுகள் வாழ்ந்தாலும் தனது குழந்தைகள் மற்ற உறவினர்கள் மீது பாசம் இல்லாமல் இருக்க முடியுமா?

வாலிபராக ரோட்டில் நடந்து செல்லலாம். விபத்து ஒன்றை நேரிடையாகவே காண்கிறோம். அல்லது இன்று டி.வி. இன்டெர்னெட்டில் நேரிடையாகவே விபத்தின் கொடுமைகளைக் காட்டுகின்றார்கள்.

அதையும் நாம் உற்றுப் பார்க்கின்றோம்.

எந்த அலைவரிசையில் வைக்கின்றோமோ அந்த அலைவரிசையில் உள்ளதை டி.வி இன்டெர்னெட் கவர்ந்து நமக்குக் காட்டுகின்றது.

இதைப் போன்று தான் நாம் எந்த உணர்வைப் பதிவு செய்கின்றோமோ நுகர்ந்த உணர்வு பதிவான பின் அதே உணர்வை நம்மை நுகரும்படிச் செய்கின்றது.

நம் கண்களே நமக்கு ஆண்டென்னா. விபத்து ஒன்றைக் காணும் பொழுது அதிர்ச்சி என்ற உணர்வை உடலில் பரவச் செய்கின்றது.

ஒரு பக்கம் இழுத்தால் ஒரு பக்கம் வளர்கின்றது. மற்றொன்றின் நிலைகள் வரப்படும் பொழுது “போராடுகின்றது”. அதன் பிறகு
1.1500 வருடமும் போராடிப்… போராடி…
2.ஊசி மருந்தைச் செலுத்திச் செலுத்தி…. வாழ்க்கைக் காலத்தை ஓட்டலாம்.

வாலிபத்தைப் பெருக்க இறந்த குழந்தையின் மூளையிலிருந்து திசுக்களை எடுக்கின்றனர். இதனை இன்னொரு உடலில் சேர்க்கப்படும் பொழுது முதுமை இளமையாகின்றது விஞ்ஞான அறிவு.

முதுமையாக இருக்கும் மனிதனை இளமையானவனாக மாற்றுகின்றார்கள். “இவ்வளவும் செய்து…” உடலுக்காக வாழ்ந்தாலும் உடலை விட்டுப் பிரிந்தால் எங்கே செல்ல முடியும்?

கெமிக்கல் கலந்த உணர்வுகள் நம் உயிராத்மாவில் பெருகி மீண்டும் மனித உடல் பெறாத நிலைகள் விஷத் தன்மை கொண்ட உயிரினங்களாகப் பிறக்கச் செய்துவிடும் உயிர்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மனிதர்கள் நாம் மீள வேண்டுமா இல்லையா…!

1.நம் உயிரில் நஞ்சு கலக்காதபடி பாதுகாக்கும் நிலைக்குத்தான்
2.நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரும்படிச் செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் நான் உடல் நலம் பெறவேண்டும் நோய் நீக்கிடும் ஆற்றல் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

மருந்து மாத்திரை உட்கொள்ளும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எண்ணிவிட்டு எடுத்துக் கொண்டால் அந்தக் கெமிக்கல் கலந்த நஞ்சு நம் உயிராத்மாவில் சேராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

ஆகவே உடல் நலமும் பெறுகின்றோம். நஞ்சு நமக்குள் சேராதபடியும் தடுத்துக் கொள்கின்றோம்.

எவ்வளவு பணம் செலவழித்தாலும் இந்த உடலை நம்மால் காக்க முடியாது. உடலை விட்டு ஒரு நாள் போய்த்தான் ஆக வேண்டும்.

ஆனால் அந்தக் குறுகிய காலத்தில் அருள் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்துக் கொண்டால் அத்தகைய சந்தர்ப்பமாக மாற்றிக் கொண்டால் நம் உயிராத்மா அழியா ஒளியின் சரீரம் பெறும்.

இனி பிறவியில்லை என்ற நிலையில் என்றுமே அழியா ஒளி உடலாக ஒளிச்சுடராக வாழ முடியும். அதைத்தான் குருநாதர் எமக்குக் காட்டினார்.