ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 24, 2017

நுகரும் உணர்வுக்கொப்ப உறுப்புகள் மாறி அதற்கொப்பத்தான் “நம் அடுத்த உடல்” என்பதை மெய்ஞானி அன்றே சொன்னான் - விஞ்ஞானிகள் மனித உருவையே மாற்றி இன்று அதை நிரூபித்துக் காட்டுகின்றனர்

இன்று விஞ்ஞான அறிவிலே பெண்ணை ஆணாக மாற்றுகின்றனர். ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றனர்.

அதே மாதிரி பெண்கள் மீது அதிக மோகம் கொண்டவர்கள் இருந்தால் இந்த உணர்வுகள் மாற்றப்பட்டு அந்த உணர்வுகள் ஜெயித்தாலும் இந்த உடலுக்குப்பின் எந்த ரூபம் பெற்றாலும்... பெண்ணாகத்தான் மாற்றும்”.

விஞ்ஞானிகள் இயற்கையில் இயற்கையில் மனித உடலில் உருவாக்கப்பட்ட தன்மையை எடுத்து அதை அமிலமாக மாற்றி இன்னொரு உடலிலே பாய்ச்சப்படும் பொழுது அந்த அமிலங்களைப் பெருக்கும் தன்மை வருகின்றது.

அப்பொழுது பெண் ஆணாகவே மாறுகின்றது. அதற்குத்தக்க உறுப்புகளை உருப்பெறச் செய்கிறார்கள். நரம்பு மண்டலங்களை இணைக்கின்றனர். இன்று விஞ்ஞானிகள் செய்கிறார்கள் அல்லவா...!

இதைப் போன்ற (பெண்களைப் பற்றிய) உணர்வுகளை அதிகமாக எடுத்தால் இன்று ஆணாக இருக்கலாம். நாளை பெண்ணாக இருப்போம்.

இதே உணர்வுகள் வரப்படும் பொழுது மற்ற உயிரினங்களைப் பார்க்கலாம். பெண்ணாகப் பிறக்கக்கூடிய ஆடு மாடு எல்லாம் எத்தனை அவஸ்தைப்படுகின்றது?

குழந்தையை ஈன்றெடுக்கும் பொழுது அவஸ்தைப்பட்டாலும் குழந்தை பிறந்த பின் பாசத்துடன் காக்கின்றது. பாசம் இருப்பதால் வேதனையை மறக்கின்றது.

தாய்க்கு வேதனை இருந்தாலும் பிள்ளை மேல் உள்ள பாசத்தால் தன் வேதனையை மறந்து பிள்ளை சாப்பிட்டதா...” என்று எண்ணுகின்றது. தாயின் பாச உணர்வு இவ்வாறு செயல்படுத்துகின்றது.

இதைப் போலத்தான் நாம் நுகரக்கூடிய உணர்வுகள் உறுப்புக்களையே மாற்றக்கூடிய சக்தியாக வருகின்றது.

அப்பொழுது ஒருவனின் தீமை செய்யும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அணுக்களை மாற்றியவுடன்
1.உடல்களில் உறுப்புக்களை மாற்றிவிடுகின்றது.
2.உறுப்புகள் மாறியவுடன் அதற்கேற்ப எண்ணங்கள் மாறும். செயல் மாறுகின்றது.
3.வெறுப்பென்ற உணர்வுகள் வருகின்றது. இவ்வளவும் நடக்கின்றது.

நல்ல திடகாத்திரமாக இருப்பவர்கள் பலருடன் பழகப்படும் பொழுது சில உணர்வுகளை எடுத்தவுடன் இந்த அணுக்கள் மாற்றம் அடைந்த பின் உறுப்புகளே சுருங்கிப் போய்விடுகின்றது... எண்ணங்கள் சுருங்கி விடுகின்றது”.

இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஆகவே நம் உடலுக்குள் பிறரின் தீமை செய்யும் உணர்வுகள் புகாமல் தடுக்க வேண்டுமல்லவா...!

அதற்குத்தான் ஆத்ம சுத்திஎன்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்தில் எந்த நிலையாக இருந்தாலும் அடுத்த நிமிடம் அந்தத் தீமை நம்மை இயக்காமல் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

இல்லை என்றால் நம் உடலில் உள்ள கெட்ட அணுக்கள் சாப்பாடு அதிகம் எடுத்துவிடும். அதற்கு சக்திவாய்ந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் எடுத்து அதைத் தடைப்படுத்த வேண்டும்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு விஞ்ஞான அறிவின் ரூபத்தில் இதையெல்லாம் இன்று நிரூபித்துக் காட்டுகின்றனர்.

ஆனால் மெய் ஞானிகளோ
1.நாம் நுகரும் உணர்வுகளால் நம் உடலின் உணர்வின் மாற்றமும்
2.அடுத்த பிறவியின் ரூபங்கள் எப்படி மாறுகின்றது என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார்கள்.

1.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இன்று மனிதனாக இருக்கும் நாம்
2.நாளை எதுவாக ஆக வேண்டும்...? என்பதைத்தான் கோவிலில் தெய்வங்களைப் படைத்து
3.நீ அந்தத் தெய்வ குணத்தை வளர்த்து “அதனின் ரூபமாக ஆக வேண்டும்” என்று காட்டினர் ஞானிகள்.

நேற்றைய செயல் இன்றைய சரீரம்... இன்றைய செயல் நாளைய சரீரம்