ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 4, 2017

“ஈசன் நமக்குள் இருக்கும்போது… அவனை மதித்துப் பழகுங்கள்”

விஞ்ஞானி எத்தனையோ வகையில் இன்று நிரூபிக்கின்றான்.

முப்பது நாற்பது வருடத்திற்கு முன்பே 2000 சூரியக் குடும்பங்கள் இருக்கிறது. ஒரு வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளது என்று சொன்னோம். இப்பொழுது ஒரு சூரியக் குடும்பம் இருக்கின்றது என்று விஞ்ஞானிகள் கண்டு கொண்டுள்ளார்கள்.

அதிலே நம் பிரபஞ்சத்திலிருப்பது போல் வியாழன் கோள் இருக்கிறது இதே மாதிரி ஒன்பது கோள்கள் சுற்றிக் கொண்டு வருகிறது என்று இப்பொழுது தான் கண்டுபிடிக்கின்றார்கள்.

அங்கே என்னென்ன நடக்கின்றது?

சில சூரியக் குடும்பங்களில் மொட்டைத் தலையுடன் இருக்கின்றார்கள். சில சூரியக் குடும்பங்களில் நம்மைக் காட்டிலும் வீரிய உணர்வுடன் இருக்கின்றார்கள்.

ஆனால் நம் சூரியக் குடும்பத்தில் மற்ற எட்டுக் கோள்களில் கிருமிகள் உண்டு. செவ்வாய்க் கோளில் நீர் சக்தி இருக்கிறது என்கிறார்கள். அது முழுமை கிடையாது.

உணர்வின் நாதங்களை இயக்கி அந்த நாதத்திற்குத் தக்க அணுக்கள் உருவாகி அணுக்கள் மடிந்து பிரபஞ்சத்திற்கு வந்து இந்தப் பூமியில் தாவர இனங்களில் படுகின்றது.

அப்படிப் படும்போது “பிரணவம்” ஒரு இயக்கச் சக்தியின் உணர்வை எடுத்து இதற்குள் இதைக் கடந்து இங்கே வளர்த்தாலும் இங்கே மனிதனுக்குள் அணுத்தன்மை வளர்க்கும் வருகின்றது.

ஆனால் இந்தக் கோள்கள் உருவாக்கக்கூடிய கிருமிகள் அது மீண்டும் உமிழ்த்திக் கக்கி வரப்படும்பொழுது நம் பூமி கருப்பையான நிலைகளில் அதைக் கவர்ந்து அதை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

ஒன்பது கோள்களின் உணர்வு 27 நட்சத்திரத்தின் உணர்வுகள் பெற்றது.

அதிலே எதிர் நிலையாகி நெகடிவ் பாசிடிவ் என்ற நிலைகளில் புலனறிவு ஐந்து.
1.ஐந்து நட்சத்திரங்கள் சேர்ந்து ஒன்று
2.ஆறு நட்சத்திரங்கள் சேர்ந்து ஒன்று
3.”ஏழு நட்சத்திரங்கள்…” சேர்ந்து ஒரு உணர்வின் தன்மை ஆகும் பொழுது “ஒளியின் உணர்வு” வருகின்றது.
4.மனித உடலில் ஏழு நட்சத்திரத்தின் உணர்வை ஒலி எழுப்பி இதனின் தன்மை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றது.

மனித உடலில் எப்படிக் கருப்பை இருக்கின்றதோ அதே போல் நம் பிரபஞ்சத்தில் நம் பூமி ஒரு “கருப்பை” கொண்டது என்பதை உணர வேண்டும்.

யாம் சொல்வதை எல்லாம் அடுத்தாற் போன்று விஞ்ஞானி சொல்வான். இப்பொழுது ஒரு சூரியன் தான் என்று சொல்கிறான். அடுத்து 2000 சூரியன் இருக்கின்றது என்று சொல்வானா...! என்றால் முடியாது.

அவன் இருப்பானா...? நாம் இருப்போமா...! தெரியாது. எழுதி வைத்ததை மீண்டும் அடுத்துக் கண்டுபிடிப்பார்கள். இதையெல்லாம் உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களை நம்புங்கள். உங்கள் அம்மா அப்பாவைக் கடவுளாக மதியுங்கள். உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள். அவன் வீற்றிருக்கும் ஆலயம் உங்கள் உடல் என்று எண்ணுங்கள்.

தீமை வந்தால் உடனடியாகச் சுத்தப்படுத்தப் பழகுங்கள். யாம் உபதேசித்த அருள் உணர்வுப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் உடலைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

1.அருள் உணர்வைப் பெருக்குங்கள்.
2.உங்களுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை நீங்களே பார்க்க முடியும்.
3.பார்க்கும் சந்தர்ப்பம் கண்டிப்பாக வரும்.
4.அந்த அகண்ட அண்டத்துடன் (2000 சூரியக் குடும்பம்) தொடர்பு கொண்ட உணர்வையும் உங்களால் உணர முடியும்.
5.எங்கே போக வேண்டும்…! என்ற உணர்வும் வரும்.
6.அதை வைத்து உங்கள் எண்ணத்தால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் நிச்சயம் அடைய முடியும்.

நீங்கள் எண்ணியதை உருவாக்குவது உங்கள் “உயிரே”. எண்ணியதை உடலாக்குவதும் “உயிரே”. நாம் எண்ணியதை ஆண்டு கொண்டிருப்பதும் ஆண்டவனாக இருப்பதும் நம் “உயிரே”.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதை வைத்துத்தான்… அடுத்து…, “அவன் ஆட்சியும் நம்மை ஆளுவதும் அவனே”.

ஆகவே அவன் நமக்குள் இருக்கும் பொழுது அவனை மதித்துப் பழகுங்கள்.

“அவனை மதிக்காதபடி…!” உங்கள் உடல் தான் பிரதானம் என்றால் நீங்கள் எண்ணியதை உருவாக்கப்பட்டு வேதனைப்படும் நிலை தான் வரும்.

இதிலிருந்து மீள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.