ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 3, 2017

பூமி... “முதுமை அடைந்து” அடுத்த நிலைக்குப் போயக் கொண்டிருக்கின்றது... நாம் மகரிஷிகளுடன் ஒன்றுபடுவோம்

நீங்கள் சாமியிடம் (ஞானகுரு) உபதேசங்கள் எல்லாம் கேட்டு அறிந்து கொண்டீர்கள்.

1.இந்த மெய்ஞான நிலைகளை நீங்கள் வளர்க்கிறதோடு மட்டும் இல்லாமல்
2.எல்லா இடத்திலும் உலகம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும் என்று எண்ண வேண்டும்.
3.இது மிகவும் முக்கியம்.

நாம் வெளிப்படுத்தும் அந்த மூச்ச்சளைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்தப் பூமி முழுவதும் படர வைத்துவிடும். அந்த மெய் உணர்வின் தன்மை நாம் வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குப் பாதுகாப்பாக அமையும்.

விஞ்ஞானத்தால் ஏற்படுத்தப்பட்ட விஷத் தன்மைகளால் நம் பூமி முதுமை அடைந்து விட்டது. பூமி முதுமை அடைந்து அது பாட்டுக்கு அது போய்க் கொண்டே இருக்கும்.

அதனுடைய கால நிலைகள் இயற்கையின் நிலையில் வளர்ச்சியாகும் போகும். பூமி முதுமை அடைந்தாலும் நாம் நம்மை ஞானிகள் காட்டிய வழியில் மாற்றிக் கொள்ளலாம்.

இயற்கையே மாற்றியமைத்துக் கொண்டு தனக்குள் இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொள்ளும் சக்தி இந்த மனிதனுக்குத்தான் உண்டு.
1.நாம் எந்த மெய் உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ...
2.அதனின் நிலைகளில் நாம் வளர்ந்து விடலாம்.
3.நீங்கள் வளர வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் வளருகின்றேன்.
4.நீங்களும் இதைப் போன்று எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்
5.நீங்கள் நிச்சயம் வளர்கிறீர்கள்.  

இந்தத் தியானத்தின் மூலம் எடுத்துக் கொண்ட மகரிஷிகளின் உணர்வுகளை எல்லோருக்கும் பாய்ச்சப்படும் பொழுது நிச்சயம் நாம் அந்த நிலைகளைப் பெறுகின்றோம்.

1.நான் இப்படி நினைத்தேனே...!
2.ஆனால் இன்று இப்படித் துன்பங்கள் வந்துவிட்டதே என்று
3.இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இல்லை.

நமக்கு உடல் முக்கியமாக வேண்டும். ஆனால் இந்த உடலுக்குள் இருக்கப்படும் பொழுதே
1.நாம் எதைச் செய்ய வேண்டும்?
2.எதை நாம் கழிக்க வேண்டும்?
3.எதை நாம் கூட்டவேண்டும்? என்பது தான் முறை.

இந்த உடல் நமக்கு என்றும் சதமில்லை.

இந்த உடலை விட்டு உயிராத்மா சென்று விட்டால் இந்த உடலில் நாம் எந்த வினையைச் சேர்த்து கொண்டோமோ இந்த வினையின் உணர்வுகள் உயிருடன் ஒன்றி அதை இயக்கியே தீரும்.

உடல் மீது பற்று கொண்டால் வேதனையை உருவாக்கும். இந்த நிலையில் இருந்து நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும பத்தாவது நிலையான “கல்கி..” என்ற நிலையை அடைய வேண்டும்.

சூரியனை விட்டுப் பூமி விலகிச் சென்றால் பனிப் பாறைகளாகிவிடும். நாம் இதற்குள் சிக்கிவிடாதபடி இப்பொழுது இருக்கும் குறைந்த காலத்திலேயே நம்முடைய எண்ணத்தை அந்த மகரிஷிகளின் எண்ண உணர்வுடன் இணைக்கச் செய்ய வேண்டும்.

இந்த உடலை விட்டு நாம் சென்றால் அந்த விண்ணுலகம் சென்று என்றும் அழியா ஒளிச் சரீரமாக பெரு வீடு பெரு நிலையான அந்த நிலையை நாம் அடைய வேண்டும். 

அந்த எண்ணத்தை வலுவாக வைத்து இதை நீங்கள் செய்து பாருங்கள். உங்கள் வாழ்விலே தெய்வீக நிலையாக மலர முடியும்.