எத்தனையோ கோடி உணர்வுகளை
நான் கவர்ந்து கொடுத்தாலும் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் அந்தச் சூழ்நிலைக்கொப்ப
இந்த உணர்வுகள் உன்னை மோதும்.
1.அந்த உணர்வுக்கொப்ப மெய்
உணர்வைப் பாய்ச்சி
2.அனைவருக்கும் அருள் பெறச்
செய்து
3.அவர்கள் உடலில் உள்ள
இருளைப் போக்கும் உணர்வைப் பாய்ச்சு என்றார்
4.நமது குருநாதர் மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர்.
5.அதன் வழி தான் ஒவ்வொரு
கால கட்டங்களிலும் இதைப் பாய்ச்சுவது.
புது வருடம் பிறக்கின்றது.
நம் குருநாதர் காட்டிய அருள் ஒளிகளை உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.
இதன் உணர்வை இந்த உபதேசத்தின்
வழிப்படி தியானித்து நாமும் இந்த ஊரும் உலகமும் அந்தத் தீமையான தீவிரவாத்தை அகற்றும்
வல்லமையாக நாம் பெறுதல் வேண்டும்.
நாம் நல்லவர்கள் தான்.
பிறர்படும் வேதனையைக் கண்டு நுகர்ந்தால் நாம் எவ்வளவு பெரிய நல்லவர்களாக இருந்தாலும்
அந்த வேதனை உணர்வு நமக்குள் நுகரப்பட்டு நமது நல்ல குணங்களால் வளர்க்கப்பட்ட
அணுக்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றது.
1.நல்ல செயலும் இழந்து
விடுகின்றது.
2.நமக்குள் கடும் நோயும்
வந்து விடுகின்றது.
3.நம்மை காக்க ஆள் இல்லை.
வேதனையின் வலு அதிகமாகி
விட்டால் அதற்குப் பின்
1.நம்மைக் கண்டாலே… நம் உணர்வே…
2.மற்றவர்களை அருகில் வராது
தடுத்து விடும்
3.நாம் அனாதையாக வேண்டியது
தான்.
இதைப் போல இயக்கங்களிலிருந்து
நாம் விடுபடுதல் வேண்டும்.
தீமை என்று உணர்ந்தால்
உங்களுக்குக் கொடுத்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைச் சீராகப் பயன்படுத்தி அதைத்
தடுத்துக் கொள்ளுங்கள்
ஒவ்வொரு நொடியிலேயும்
நம் வாழ்க்கையில் சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ வேதனையோ கோபமோ குரோதமோ இவையெல்லாம் நாம்
1.கண்களால் பார்த்துத்
தான் நுகர்ந்து… உணர்வால் அறிகின்றோம்.
2.அறிந்த உணர்வுகள் உமிழ்
நீராக மாறி
3.உடலில் இரத்தத்துடன்
கலந்து விடுகின்றது
டி.வி.யிலோ பத்திரிக்கை
வாயிலாகவோ மற்ற நிலைகளையோ பார்த்து படித்து உலகை அறிந்து கொள்ளும் நேரம் வந்தாலும்
நடக்கும் அசம்பாவிதங்களையும் கொடுமைகளையும் அறிந்து கொண்டாலும் மகரிஷிகளின் அருள்
சக்தியை எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தப் புது வருடத்திலிருந்து
உங்கள் உடலுக்குள் தீமை புகாது “புருவ மத்தியில்… ஈஸ்வரா…” என்று எண்ணித் தடுத்துக்
கொள்ளுங்கள். உலகிலே தீமைகள் வளராது தடுக்கும் அந்தச் சக்தியை நீங்கள் பெற்றுக்
கொள்ளுங்கள்,
மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவரின் அருளும் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் உங்களுக்குக் கிடைக்க
வேண்டும் என்று வேண்டுகிறேன்.