கடல்களில்
எடை கூடி ஆழமான பகுதிகளில் ஒரு ஐயாயிரம் பத்தாயிரம் அடிக்குக் கீழே நீர் ஓட்டம்
அதிகமாக இருக்கும்.
ஒரு
பகுதியிலிருந்து ஒரு பகுதிக்குச் செல்லும் அதனுடைய இழுவையின் வேகமும் அதிகமாகும்.
துருவப் பகுதியில் இருந்து மாற்றம் அடையப்படும்போது அந்த இழுவையின் வேகம்
அதிகமாகும்.
நாம்
வாழும் இடங்களில் பார்க்கலாம். ஆறுகளில் சில இடங்களில் புதை மணல் என்று அங்கே கால்
வைத்தால் ஆளையே உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு போய்விடும்.
இதே
மாதிரித்தான் கடல் பகுதியிலும் சில பகுதிகளில் மேலிருந்து கீழே அடி மட்டம் வரை
இழுக்கும் சக்தி இருக்கும். அதீத நிலையில் சுழி போன்று இருக்கும்.
மேலே
விமானம் போனாலும் நீரில் கப்பல் வந்தாலும் அந்தப் பகுதிக்குள் வந்தவுடன் உள்ளே
இழுத்துக் கொண்டு போய் விடும்.
அவைகளை
எங்கே இழுத்துச் செல்கின்றது…! இங்கே தான் உள்ளுக்குள் போனது என்று அந்த இடத்தில்
நீங்கள் தேடிப் பார்த்தால் ஒன்றும் கிடைக்காது.
1.அது
எங்கே போகின்றது?
2.எதன்
நிலை பெறுகின்றது என்று இது வரை விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்க முடியவுமில்லை.
காரணம் சில
பகுதிகளுக்குச் செல்லும் போது அது… அமிலத் தன்மை அடைந்து… “கரைந்தே விடுகின்றது…”
தென்
பகுதிகளுக்குச் செல்லும் போது வெப்பத்தின் தணல் கூடி இதனுடைய “எர்த்…”
உருவாக்கப்பட்டு அதன் ஓட்ட நிலைகளெல்லாம் “கருகி விடுகிறது…!” என்பதை ஆதியிலே
கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.
இது தான்
கடல்களில் விளைந்த நிலைகள்.
இவையெல்லாம்
உணர்வின் கலவையும் மற்றதோடு இணைந்து செயல்படும் சக்தி தான். ஏனென்றால் கடவுள்
என்று ஒருவன் இருந்து இயக்கவில்லை.
1.ஒன்றுக்குள்
ஒன்று
2.ஒன்றின்
வலுக் கொண்டு ஒன்றினை இயக்குவது தான் கடவுள் என்றும்
3.ஒன்றுக்குள்
ஒன்று அது இயக்கி
4.ஒன்றின்
வலுவைப் பெருக்கப்படும் போது “ஈசன்” என்றும்
5.ஒன்றுக்குள்
ஒன்று மோதல் ஏற்படும் போது அதற்குப் பெயர் “வெப்பம்” என்றும்
6.வெப்பத்தினால்
மோதலின் தன்மைகள் ஈர்க்கும் சக்தி வரும் போது காந்தம் உருவாகின்றது என்றும்
7.இயற்கையின்
இயக்க நிலைகளைக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.
அகஸ்தியன்
அவன் கண்டுணர்ந்து வெளிப்படுத்திய இயற்கையின் பேருண்மைகள் எல்லாம் அலைகளாக இங்கே
பரவியுள்ளது. அதை நுகர்ந்தால் அகஸ்தியன் கண்டதை நாமும் காண முடியும்.