ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 2, 2017

தண்ணீர் போடுபவர்கள் எல்லாம் கடைசியில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் எங்கே போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்

மனக் கவலையில் இருந்து விடுபடுவதற்காக வேண்டித் தண்ணீ போடுவார்கள். குடித்தபின் எல்லா கவலையையும் மறந்து விடுவார்கள்.

தண்ணீ போடுகிறவர்கள் மாமிசமும் அதிகமாகச் சாப்பிடுவார்கள்.

கடைசியில் இந்த உணர்வெல்லாம் சேர்த்துச் சேர்த்து இவர்களுக்குள் இந்த நிலை நிறுத்த முடியாதபடி வந்து விடும். உயிரான்மாவில் அந்த வாசனை அதிகமாகிவிடும்

இவர்கள் இறந்த பிற்பாடு எங்கே போவார்கள்...?

மந்திரக்காரர்கள் தண்ணீ கறி இரண்டையும் வைத்து என்ன செய்வார்கள்?

ஆரம்பத்தில் இந்த மந்திரங்கள் உற்பத்தி செய்வது எல்லாமே அந்தச் சோமபானம் வைத்துத்தான். அதனால் சில மயக்க நிலைகளை ஏற்படுத்தித்தான் வசியப்படுத்துவார்கள். மது இல்லாத மந்திரம் கிடையாது.

மந்திரத்தை எப்படி உருவாக்கினார்கள் என்ற நிலையில் முழுமையாக இப்போது நான் (ஞானகுரு) சொல்லத் தயாராக இல்லை. அது நமக்கு ஆகாத வேலை.

சில காரியங்களைச் செய்ய வேண்டும் என்று சொன்னால் மாமிசத்தையும் தண்ணீயையும் வைத்து அதற்கென்று சில மந்திரங்கள் இருக்கின்றது. ஜெபித்து இந்த ஆத்மாக்களைப் பிடித்து இழுத்துக் கொள்வார்கள்.

ஏனென்றால் தண்ணீ போடும் பழக்கம் ஏற்படுவதன் காரணமே
1.பெண்டு பிள்ளைகள் மீது கவலை அதனால் அவஸ்தைப்படுவது,..
2.பிறிதொருவர் அவமரியாதையாகப் பேசினார் என்னால் தாங்க முடியவில்லை...
3.வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்தித்தேன் அந்தக் கவலையை மறக்க முடியவில்லை..
4.இந்த மாதிரி இருப்பவர்கள் கதி எல்லாம் இறந்த பிறகு மந்திரக்காரன் கையில் போய்ச் சிக்கும்.
5.இந்தக் கறியும் தண்ணியைச் சாப்பிட்டு இருப்பவர்கள் மந்திரக்காரனுடைய பிடியில் ரொம்ப சீக்கிரம் போய்ச் சிக்கிவிடும்.

அப்புறம் சிக்கிய பின் என்ன கத்தினாலும் முடியாது. அது அங்கே போய்ச் சிக்கிக் கொண்டதும் அவர்கள் என்ன செய்கின்றனர் தெரியுமா இல்லையா...!

காசைக் கொடுத்து அடுத்தவர்களைக் கெடுக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தகைய மந்திரக்காரர்களை நாடுகின்றனர்.

காசை வாங்கிக் கொண்டு ஆகாதவர்கள் உடலில் இந்த ஆவிகளை ஏவி விடுவார்கள். அங்கே போய் எல்லாக் கெடுதலையும் செய்து அது சாப்பிடும். அங்கே நிர்மூடத்தனமான வேலைகளைச் செய்யும்.

ஏற்கனவே வாழ்ந்த உடலில் பல வேதனைகள் ஆன்மாவில் இருக்கிறது. அடுத்து மந்திரக்காரன் கையில் சிக்கி அடுத்த உடலில் போய் அங்கே இன்னும் அதிகமான விஷத்தையெல்லாம் இழுத்துக் கொண்டு இந்த ஆவி வரும்,

விஷங்கள் அதிகமான பின் மீண்டும் அதை எடுத்து மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த வேதனையான உணர்வு இன்னொரு உடலில் போய் என்ன செய்யும்?

அவனைத் திருப்பி அடித்துக் கொல்லும்.

எதிலெல்லாம் ஏவினானோ கொன்று விட்டு மீண்டும் பிறவிக்கு வரப்போகும் போது விஷமான உயிரினமாகத்தான் உருவாகும்.

உருவான பின் அந்த உடலில் உடல் உறுப்புகள் என்ன செய்யும்...? சாப்பிடும் பொழுது மிகவும் அவஸ்தைப்பட்டுத் தான் சாப்பிட வேண்டும். சில உயிரினங்களைப் பார்க்கின்றோம்.

பாம்பு தேள் சில விஷப் பிராணிகள் மற்றதைத் தன் விஷத்தால் கொன்றுவிடும். ஆனால் அதைச் சாப்பிடும் பொழுது நரக வேதனைப்படும். அது எத்தனை அவஸ்தை எல்லாம் படுகின்றது.

1.பல உடல்களுக்குள் சென்று எல்லாவற்றையும் வேதனைப்படச் செய்தாய்
2.முழுவதும் நஞ்சாக நீ உருவாக்கினாய்.
3.இப்பொழுது நீ அவஸ்தைப் படு...! என்று இந்த உயிர் செய்யும்

தண்ணீ போடுகிறவர்கள் நீங்கள் யாரும் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தண்ணீ போட்டதன் விளைவுகள் சீக்கிரம் மந்திரவாதிகளிடம் போய்ச் சிக்கிக் கொள்வீர்கள்.

இன்றைக்கு மந்திரம் ஜாஸ்தியாக (வியாபாரமாக) வந்து விட்டது. எங்கே பார்த்தாலும் ஒருவரைத் தொட்டு...புத்தியை மாற்றி விட்டுக் காசை எடுத்துக் கொண்டு செல்கின்றவர்கள் நிறைய வந்தாகி விட்டது.

டிரெயினில் உட்கார்ந்து கூட்டத்திற்குள் இருந்து வந்தால் நகையைக் கழற்றிக் கொடு...!என்று வாங்கிக் கொண்டு போகக்கூடிய நிலைமை வந்து விட்டது.

ஏனென்றால் விஞ்ஞான உலகமாக இருந்தாலும் இன்றைக்கு மந்திரங்கள் நிறைய வந்துவிட்டது. இந்த விஞ்ஞான உலகில் சில
1.விஞ்ஞானச் செயல்களை அழிப்பதற்கும் கூடச்
2.சில வேலைகளைச் செய்கின்றனர்.

ஏனென்றால் வாழ்வதற்கு எவ்வளவு பெரிய வசதி இருந்தும் சிறு விஷயங்கள் நடந்ததென்றால் அந்த விஷத்தன்மையில் இருந்து மீளாத நிலைகளில் இருக்கின்றோம்.

கடைசியில் எங்கே கொண்டு போய் விடும்?
1.மந்திரக்காரனிடம் போய்
2.ஆகாத உடலுக்குள் சென்று பேயாகப் போய் ஆட்டிப் படைத்து கொண்டே இருக்கும்.
3.அங்கே அத்தனை வேலையும் செய்யும்.

இதைப்போல நிலைகள் நம்மை அறியாமலே இயக்கிக் கொண்டு இருக்கக்கூடிய நிலைகளில் இருந்து நம்மை மீட்டுக்கொள்ள வேண்டும்.

நான் தவறாகச் சொல்கின்றேன்...!என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம்.

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இயற்கையில்
1.மந்திரக்காரர்களின் செயல்களையும்
2.உடலை விட்டுப் போகும் உயிரான்மாக்களை எப்படிக் கவர்கிறார்கள் என்ற நிலையும்
3.அது என்னென்ன அல்லல்படுகிறது என்றும்
4.நேரடியாகவே இழுத்துக் காண்பித்தார்.

1.இன்னென்ன நிலைகளை நீ சொல்லு என்றார்
2.இந்த ஆவிகள் என்ன செய்கிறது என்று பார்...!
3.தண்ணீ போட்டவர்களை இறந்தவுடனே சுலபமாக வந்து அழைத்துக் கொள்ளலாம்...! என்று காட்டினார்
4.என்னென்ன வேலைக்கு நீ பயன்படுத்திக் கொள்கிறாயோ நீ வைத்துக்கொள்...! என்றார் குருநாதர்.

மந்திரத்தை சொல்லி அவர்களை இழுத்துக் கெட்ட வேலைக்குப் பயன்படுத்தினால் அப்புறம் இந்தப் புத்தியெல்லாம் உன்னிடம் வந்து அவர்கள் பின்னால் நீ போக வேண்டியதுதான்...! என்று அதையும் சொல்லி விட்டார் குருநாதர்.

இப்படிச் செய்தாய் என்று சொன்னால் கடைகியில் உன் கதியும் அப்படித்தான் வந்து விடும் என்று காட்டினார்.

ஆனால் அவர்கள் அந்தத் தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும் என்று எண்ணினால் நீக்கும் உணர்வுகள் உனக்குள் வருகின்றது என்று இதைச் சொல்லிக் காண்பித்தும் நேரடி அனுபவமாக செய்து காட்டி உணர்த்தவும் செய்தார்.

தயவு செய்து லாகிரி வஸ்துக்களைப் பயன்படுத்துபவர்கள் இதை மாற்றுவதற்கு நீங்கள் அந்த  மகரிஷிகள் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணி எண்ணி இந்தத் தியான முறைப்படி நீங்கள் எடுத்துக் கொண்டால் நிச்சயம் இது குறையும்.

இந்த மனித வாழ்க்கை கிடைப்பது ரொம்ப ரொம்ப அபூர்வம். மனித உடலுக்குப் பின் நாம் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

அது தான் மனிதனின் கடைசி எல்லை.