ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 25, 2017

மண்ணுலகில் வாழ்ந்த மனிதன் விண்ணுலக ஆற்றலைப் பெற்று மெய்ஞானி ஆனான் – அவன் பெற்ற “விண்ணுலக ஆற்றலை” நாமும் பெறுவோம்

இன்று விஞ்ஞானி தான் கண்டுபிடித்த “எக்ஸ்ரே, ஸ்கேனை” (X RAY, SCAN) ஒரு உடலுக்குள் பாய்ச்சும் போது அது ஊடுருவிச் சென்று
1.எலும்புக்குள் உள்ள ஊனையும் காட்டுகின்றது.
2.நரம்பைக் காட்டுகின்றது, நரம்புக்குள் உள்ள நிலையையும் காட்டுகின்றது.
3.குடலுக்குள் உள்ள பழுதையும் காட்டுகின்றது.
4,இதயத்தையும் எடுக்கின்றது. இதயத்தில் உள்ள பிழையையும் காட்டுகின்றது.

ஒன்றைப் பிளந்து அதற்குள் நுண்ணிய அலைகள் எது இருக்கின்றதோ அந்தக் கருவியின் துணை கொண்டு இதை அவன் படமாக எடுத்து நோயின் தன்மையை அறிகின்றான்.

அவ்வளவு ஆற்றல் பெற்ற விஞ்ஞானியால் அதைக் கண்டுணர முடிகின்றது. அதைக் கண்டுணர்ந்து அப்புறப்படுத்த முடிகின்றது. அதைச் சரி செய்யவும் முடிகின்றது. எண்ண வலு கொண்டு நோயை நீக்கவும் முடிகின்றது.

ஆனால் இவன் உடலில் விளைவித்த இந்த உணர்வின் சக்தியை அகற்ற இவனுக்குச் செயலில்லை. அவன் கண்டுணர்ந்த செயலின் ஆற்றலால் அதை நிவர்த்தி செய்யவும் இயலவில்லை.

அன்று மெய்ஞானி விண்ணில்… “எட்டாத தூரத்தில்” இருக்கும் ஆற்றலையும் தான் கவர்ந்து
1.தன் உடலில் அதைப் பாய்ச்சி,
2.தன் உணர்வின் நினைவலைகளை ஒன்றுக்குள் பாய்ச்சி,
3.எக்ஸ்ரே ஸ்கேன் போன்று ஒரு மனிதனுக்குள் எண்ணங்களைச் செலுத்தித் தன் எண்ணத்தால் ஊடுருவி”
4.அவனுக்குள் இருக்கும் நோயையும் செயல் சக்தியையும் தான் நுகர்ந்தறிந்து
5.அதற்குத் தன் ஒளியாலே விழியாலே தன் எண்ணத்தை வலுக்கூட்டிப் பாய்ச்சி
6.அத்தகைய நோய்களையும் நீக்கினான் மெய்ஞானி.

விண்ணின் ஆற்றலை எண்ணிலடங்காத தூரத்திலிருந்து வரும் விஷத்தன்மையை
1.தன் ஒளிக் கதிரின் சுழற்சியால் வீழ்த்தி
2.தன் உணர்வின் சாந்த நிலைகள் கொண்டு
3.தன் உணர்வின் ஒளிச் சரீரமாக வளர்த்துக் கொண்டார்கள் மெய்ஞானிகள்.

அந்த மெய்ஞானிகள் வெளிப்படுத்தும் உணர்வின் எண்ண அலைகள் மனிதனில் தோன்றிய எண்ண அலைகள் போல அதற்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றல்மிக்க இந்த சக்தி விண்ணிலே மிதந்து சென்றாலும், விண்ணிலிருந்து வரக்கூடிய விஷத்தின் ஆற்றலை, தன் அருகிலே வராதபடி அதை வீழ்த்தி அதைத் தனக்குள் சாதகப்படுத்திக் கொண்டு விஷத்தை வீழ்த்தும் தன்மை கொண்ட அணுக்களாக அது படருகின்றது.

மண்ணிலே வாழ்ந்த அந்த மெய்ஞானி விண்ணின் ஆற்றல்மிக்க சக்தியைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு இன்றும் ஒளியின் சரீரமாக இருக்கின்றார்,

அவர் ஒளியின் சிகரமாக அங்கு இருந்து கொண்டிருக்கும் அந்த உணர்வின் ஆற்றல் நம் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது. அதை நுகர்ந்தறிந்து நாம் எடுப்பதற்கு நம் எண்ணத்திற்குத் திறன் இல்லை.

அந்த ஆற்றலை நுகர்ந்தறிவதற்கு நாம் அருகே போனாலும் அது நம்முடைய எண்ணத்தை வீழ்த்திவிடும்.

ஆனால் வர்களின் ஒளியான ஆற்றலை நாம் நுகர்ந்தறிந்து நம் உடலுக்குள் செலுத்திவிட்டாலோ நாம் பிறருக்கு உதவி செய்யும் பொழுது
1.அறியாமல் சேர்ந்த துன்பங்களை வேதனையான உணர்வின் தன்மைகளை
2.அந்த மெய்ஞானியின் உணர்வின் ஆற்றல் நம் உடலுக்குள் சென்று வீழ்த்திவிடும்.
3.நம் எண்ணத்தைப் பொருளறிந்து செயல்படும் ஆற்றல்மிக்க சக்தியாக வளர்த்துவிடும்.

நாம் எண்ணிய நிலைகளில் தீய உணர்வு கொண்ட நிலைகள் இருந்தாலும் தன்னைப் பாதுகாப்பதற்காக வேண்டி அந்த மெய்ஞானியின் ஆற்றலை நுகர்ந்து அதை உடலுக்குள் செலுத்திக் கொண்டபின் நம்முடைய உடலிருந்து வெளிப்படும்… “மணம்” சக்தி வாய்ந்ததாக மாறும்.

ஏனென்றால் அந்த ஞானியின் ஆற்றல்மிக்க இந்த உணர்வின் சக்தியை நமக்குள் பதிவு செய்து கொள்ளும் பொழுதுதான் அதைப் பெற முடியும்.

நம் எண்ணத்தால் விண்ணின் நிலையை ஏங்கி மெய்ஞானியர்களுடன் தொடர்பு கொள்ளும் பொழுது அந்த மெய்ஞானியின் உணர்வின் அணு நமக்குள் இருப்பதால் அது வீரியம் அடைந்து உடலிலிருந்து வெளிப்படும் மணம்
1.“நரசிம்ம அவதாரம்” - தீமைகளைப் பிளக்கும் ஆற்றல் என்று
2.கடவுள் அவதாரத்தில் காட்டியுள்ளனர் ஞானிகள்.

தம் உடலுக்குள் தீயவற்றை நுழையாமல் காக்கும் அந்த நிலைகள் பெற்று விண் சென்றவர்கள்தான் மகா ஞானிகள்.

மற்றவர்கள் செய்யும் தவறான நிலைகளை கண் நுகர்ந்து இழுத்தாலும் மெய்ஞானிகள் காட்டிய அருள்வழிப்படி அதே கண் கொண்டு விண்ணிலே செலுத்த வேண்டும்.

அப்படிச் செலுத்தப்படும் பொழுது அந்த விண்ணின் ஆற்றல் நம்முள் சென்று (உள்ளிருந்து வீசும்)
1.அந்த வீரிய சக்தியின் தன்மை நம் உடலிலிருந்து வெளிப்படும்.
2.அந்த வீரிய சக்தியின் தன்மை வரப்படும் பொழுது
3.நம்மை வேதனைப்படச் செய்யும்
4.நம்மை நோய்வாய்ப்படச் செய்யும்
5.நம்மைச் சிந்தனையற்றுச் சீர்குலையச் செய்யும்
6.அசுத்தப்படுத்தும் இத்தகைய உணர்வினுடைய நிலைகளைப் பிளந்து
7.அதையெல்லாம் நம்முள் அடங்கச் செய்துவிடும்.

நாம் ஒரு கருணைக் கிழங்கை வேகவைத்து அதன் விஷத்தை மாய்த்து பின் சுவைபட அதை உணவாக உட்கொள்ளுகின்றோம்.

அதைப் போல அந்த மெய்ஞானிகளின் உணர்வின் அலைகளை நமக்குள் கூட்டப்படும் பொழுது நம் உடலிலிருந்து வெளிப்படும் மணம்…,
1.தீய வழியில் நம்மை இட்டுச் செல்லும் விஷத்தின் தன்மையைப் பிளந்து,
2.நல்ல சுவாசமாக நம் உடலை மாற்றச் செய்யும்.

ஆகவே அந்த மெய்ஞானிகள் தனக்குள் வளர்த்த  விண்ணின் ஆற்றலை நாம் பெறுவோம்.