
திருமண வாழ்த்து
யாகங்கள் செய்த வீடுகள் எல்லாம் நன்றாகத் தானே இருக்க வேண்டும். நன்றாக இருக்க
வேண்டும் என்று தானே அதைச் செய்கின்றோம். அந்த உணர்வின் தன்மை கலவை எதுவாகின்றது..?
ஜாதகம் பார்த்துத் தானே எல்லாத் திருமணங்களும் செய்கின்றோம். நன்றாகத் தானே இருக்க வேண்டும். ஜாதகத்தைக் குறி வைத்துப் பார்த்துச் செய்யப்படும் பொழுது அவர்கள் நன்றாகத் தானே இருக்க
வேண்டும்.
ஆனால் இவ்வளவும் செய்து எத்தனையோ குடும்பங்கள் ஏன் பிரிந்து வாழுகின்றது…?
முழுமையாகச் சேர்ந்து
மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பதற்குத் தானே ஜாதகம்
பார்க்கின்றோம். இடைவெளியில் ஏன் மடிந்து விடுகின்றார்கள்…? அல்லது பிரிந்து விடுகின்றார்கள்…?
1.ஜாதகம் மனச்சாந்திக்க வேண்டுமென்றால் அவன் சொன்ன உணர்வை எடுத்துக் கொள்ளலாம்.
2. ஏனென்றால் “ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்தால் தப்பு வந்து விடுமே” என்று
தான் செயல்படுத்துகின்றோம்.
அப்படி எண்ணவில்லை
என்றாலும் கூட ஜாதகம் பார்ப்பவர்கள் என்ன செய்கின்றார்கள்…? எதிர்ப்பு நிலை ஒன்றாகும்.
1.ஒருவருக்கொருவர் கோபக்காரராக இருப்பார்கள். இது ஒத்து வரும் என்று சொல்லிவிடுவார்கள்.
2.அதே சமயத்தில்
ஒருவர் கோபமாக இருப்பார் ஒருவர் சாந்தமாக இருப்பார் ஆனால் ஜாதகப்படி
ஒத்து வராது என்று சொல்லிவிடுவார்கள்.
3.அடிக்கடி
வேதனைப்படுபவராக இருப்பார்கள். ஆண் பெண் இரண்டு பேருமே அப்படித்தான்
இருப்பார்கள்.
4.இது இரண்டும் பொருத்தம் சரியாக இருக்கிறது
என்பார்கள்.
5.ஆனால்
திருமணமான பின் வேதனையைத் தான் வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஆக பொருத்தம்
எங்கே இருக்கின்றது…? இந்த உணர்வின் நினைவுகள் வரப்படும் பொழுது
இரண்டு விஷமும் அதற்குள் ஒடுங்குகின்றது. இப்படித்தான் பொருத்தம்
பார்க்கின்றார்கள்.
இது எல்லாவற்றிக்கும் மேலாக… தாலி இத்தனை மணிக்குள் இந்த நேரத்திலே கட்ட
வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால்
அலங்காரம் செய்து முடித்து ஒரு நிமிடம் தாமதமாகிவிட்டது என்றால்
என்ன ஆகிறது…?
தாமதம் ஆகிவிட்டால் என்ன செய்கிறது…! என்ற இந்த உணர்வோடு தான் தாலி கட்டும் நேரத்தை
எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதைச் சொல்லிக் கொண்டே
இருப்பார்கள்.
அந்தக்
குறித்த நேரம் வரும் பொழுது எதைப் பார்க்கின்றார்கள்…? ஏன் இன்னும் காலதாமதம் செய்கின்றீர்கள்…? “மேளத்தைக் கொட்டையா… கொட்டையா…” என்பார்கள். அங்கே மந்திரம் சொல்வது
முழுமை பெறுகின்றதா…? இல்லை…! பரபரப்பு
தான் அங்கே வருகின்றது.
தாலி கட்டப்படும் பொழுது எவ்வளவு பணம் கொடுப்பார்கள் என்று மந்திரம் சொல்பவர் எதிர்பார்த்துக்
கொண்டிருப்பார் ஏழ்மையான வீட்டில். பணக்காரர்கள் வீட்டிலே
மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருப்பார்.
1.தாலி அவரிடம் கொடுத்துத்தான் வாங்கி கட்ட வேண்டும் என்று முறை வைத்திருப்பார்கள்.
2.இப்படிப்பட்ட எண்ணங்களோடு தாலியைக் கொடுத்துக் கட்டச் சொன்னால் என்ன ஆகிறது…?
மந்திர ஒலிகளைப் பதிவு
பண்ணி இறந்தால் அதே மந்திரத்தை ஜெபித்தால் அதன் வழியில் ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்த இது உதவும்.
நல்லவை ஆனாலும்
கெட்டவை ஆனாலும் உணர்வுகளைப் பதிவு
செய்து பதிவு செய்து கவர்ந்து கொள்கிறார்கள். “அதைத்தான் நாம் நம்புகின்றோம்…”
(ஏனென்றால்
உணர்வின் இயக்கங்கள்… எண்ணங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். சீதாராமா…! நம் எண்ணங்கள் எப்படி உருப்பெறுகிறது…?
அந்த எண்ணத்தின் உணர்வுகள் அதன் சக்தி கொண்டு எப்படி இயக்குகின்றது…?)
ஆஅகவே…
கல்யாணராமனைப் பற்றிச் சொல்லிப் புதிதாகத் திருமணமாகும் அந்தக் கணவன் மனைவி ஒற்றுமையாக
இருக்க வேண்டும் என்று எங்கே பார்ப்பது…?
ஏனென்றால்
தாலி கட்டும் நேரத்தில் பரபரப்பாகப்
பார்த்துக் கொண்டிருப்பார்கள். நேரம் ஆகிவிட்டது நேரம்
ஆகிவிட்டது என்று தாமதமாகும் போது இந்த இடத்திலும் “பகைமை” வந்து விடுகின்றது.
நல்ல உணர்வைஸ் சேர்க்கும்
நேரங்களில் இப்படி இதைச் சேர்க்கின்றார்கள். பகைமை கலந்தபின் “இந்த மாதிரிச் செய்துவிட்டார்களே…!” என்று அந்தப் பற்றுள்ளவர்கள் மன நிலையினைப் பார்த்தால்
“கசகச கசகச…” என்று இருப்பார்கள். அப்பொழுது எதை ஊட்டுகின்றோம்…?
ஆனால் திருப்பூட்டும் போது எப்படி இருக்க வேண்டும்…?
1.எல்லோருடைய உணர்வுகளிலும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் படர வேண்டும்
2.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று நாங்கள் வாழ வேண்டும்
3.நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க
வேண்டும்
4.சாவித்திரி போன்று எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்
5.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ணி
6.அந்த இரு மனமும் ஒரு மனமாகும் அந்தத் தம்பதியர்கள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற
வேண்டும்
7/மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும்
சக்தி பெற வேண்டும்
8.அவர்கள் அன்னை தந்தையின் அரவணைப்புடன் என்றுமே வாழ வேண்டும்
9.அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும் மெய்ப் பொருள்
காணும் சக்தி பெற வேண்டும்
10.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவர்களுக்குள் விளைய வேண்டும்.
11.அவர்கள் எண்ணங்கள் ஒன்றி இரு மனமும் ஒரு மனமாகி
கருவிலே வளரும் குழந்தை அருள் ஞானக்
குழந்தையாக வளர வேண்டும்
12.உலகைக் காத்திடும் உத்தமஞானியாக வளர வேண்டும் பண்பினை வளர்க்கும் அத்தகைய அருள் ஞானக் குழந்தை உருவாக வேண்டும் என்று
13.எல்லோரும் இந்த எண்ணத்தோடு இப்படி வாழ்த்த வேண்டும்.
கணவன் மனைவி
இருவரும் அந்தத் திருமண நாளை எண்ணினாலே “இந்த முப்பத்து
முக்கோடி தேவாதி தேவர்களின் வாழ்த்தை எண்ண வேண்டும்” நமக்குள் இருக்கும் நல்ல குணம் கெட்ட குணம் அத்தனையும் இதற்குள் ஒடுங்கி
விடுகின்றது.
இப்படி
அந்த எல்லோருடைய வாழ்த்துக்களும் அங்கே
ஒன்று சேர்க்கப்படும் பொழுது இந்த வாழ்த்து இருவருக்குள்ளும் பதிவாகி அங்கே மகிழ்ச்சியின் தன்மை உருவாகின்றது.
1.இந்த உணர்வு பதிவான பின்
2.அவர்களுக்குக் “குழந்தை இல்லை” என்ற சொல்லே வராது.
ஆகவே திருமணம் நடைபெறும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்…? என்று “வழியறிந்து
நாம் செயல்பட வேண்டும்…”