
செயற்கைக் கோளை விண்வெளிக்குச் செலுத்துவது போல் நம் முன்னோர்களை விண்ணுக்குச் செலுத்த முடியும்
நம் குலதெய்வங்களான முன்னோர்கள் மூதாதையரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டல ஒலி
அலைகளுடன் கலக்கச் செய்து உடல் பெறும்
உணர்வுகளைக் கரைத்துப் பெருவீடு
பெருநிலை என்ற நிலை அடையச் செய்தல் வேண்டும்.
அவ்வாறு
அழியா ஒளிச் சரீரம் பெற்று அவர்கள் பிறவி இல்லா நிலை அடைந்து ஒளியின் அறிவாக ஒளியின் உடலாக வாழ்ந்து
வளர்ந்து…
1.அருள் ஒளியைக் குடும்பத்தில் பாய்ச்சிக் குடும்பத்தில் இருளை அகற்றும் சக்தியை உருவாக்கி
2.விண்
சென்ற எங்கள் குலதெய்வங்கள் அருள் வழியில் எங்களைக் காத்திட அருள்வாய் ஈஸ்வரா.
ஆனால் குல வழியில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் குடும்பத்தில் பற்று கொண்டால் அந்தப் பற்றின் ஈர்ப்பின் துணை கொண்டு “யார் மேல் அதிகப் பற்று கொண்டதோ” அந்த உடலுக்குள் வந்துவிடும்.
அவ்வாறு வந்து விட்டால்
1.இந்த உடலை விட்டுப் பிரியும் பொழுது எத்தகைய
நோய்வாய்ப்பட்டிருந்ததோ
2.அந்த உணர்வினைப் புகுந்த உடலுக்குள்ளும் இயக்கி
3.பாசத்தால் உள்ளே வந்தாலும் இந்த உடலுக்குள் வந்து அதையே உருவாக்கிவிடும்.
முதலிலே மூதாதையர் மனிதனாகப் பிறந்தார்கள்… நம் தாய்
தந்தையை உருவாக்கினார்கள்… தாய் தந்தை நம்மை மனிதனாக உருவாக்கினார்கள். இந்த உயிரின் கடைசி முடிவு அழியா
ஒளிச் சரீரம் பெறுவது தான்.
உயிர் ஒளியானது
உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற இந்த மனித உடலில்
மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து
சென்ற சூட்சும சரீரங்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன்
இணையச் செய்வோம் என்றால் அவர்கள் பிறவியில்லா நிலை அடைகின்றார்கள்.
சப்தரிஷிகள்
என்பவர்கள் உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள்… ஒளியின் அறிவாக நிலைத்தவர்கள். அந்த அருள் ஒளியுடன் நம் குலதெய்வங்கள் ஒன்றி வாழ… அவர்களைப் பிறவில்லா நிலை அடையச் செய்ய… நம்முடைய உணர்வுகள் உறுதுணையாக இருத்தல் வேண்டும்.
உதாரணமாக சிலர் எண்ணலாம் இது
எப்படி சாத்தியப்படும்…? என்று…!
இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர்… அதிலே நாடாக்களில் பதிவு செய்கின்றார்கள்.
எதெனதன் உணர்வைப் பதிவு செய்கின்றார்களோ ராக்கெட்டிலே அது
பொருத்தப்பட்டு விடுகிறது.
உதாரணமாக ஒரு கோள் இருக்கிறது
என்றால் நட்சத்திரம் இருக்கிறது என்றால்
1.எதன் திசைப் பக்கம் இந்த ராக்கெட் செல்ல வேண்டுமோ
நாடாக்களில் அதை இங்கே பதிவு செய்து விடுகின்றார்கள்.
2.ஏனென்றால் நாடாக்களில் பதிவு செய்யப்பட்ட அந்த இயந்திரத்தின் செயல்
அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
3.எத்திசையின் உணர்வை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றதோ அத்திசைப் பக்கம் அந்தக் கோள்கள்
உமிழ்த்தும் உணர்வலைகள் இதற்குள்
பட்டபின்
4.அதன் பாதையினை அது அமைத்து
அந்தக் கோளைச் சென்று அடைகின்றது.
கோளின் உணர்வுகளை நுகர்ந்து
அறிகின்றது. அங்கே தனக்குள் பதிவு செய்யும்
ஒலி நாடாவின் மூலம்
1.தரையில் இருப்பவர்கள் அதை ஆண்டென்னா போன்று கவர்ந்து
2.இங்கே பதிவு செய்து அதன் பாதையை அமைக்கின்றார்கள்.
இதைப் போன்று
தான்
1.நம் மூதாதையர்களின் உணர்வுகள் (நமக்கு வழிகாட்டிய
உணர்வுகள்) நமக்குள் இருப்பதனால் அதன்
துணை கொண்டு
2.நாம் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளை நமக்குள் வலுக் கொண்டு… அந்த அருள் ஞானிகளின்
சக்தியை எடுத்து
3.உடலை
விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய உந்தித் தள்ளினால்
4.அங்கே
சென்ற பின் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது.
வழிகாட்டிய
அறிவின் ஒளியாக நிலைத்து விடுகின்றது.
உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றிக் கொள்ளும் அமைப்பு அதற்கு வருகின்றது.
அதன் வழி கொண்டு அவர்கள் வளர… அவரின் உணர்வுகள் நமக்குள் பெருக்க… அவர்களை எண்ணும் பொழுது அருள் ஒளி கொண்டு நம்
இருளைப் போக்க அவர்கள் உதவுவார்கள்.
இதற்கு முன் நாம் செய்யத் தவறியதால்… பாசத்துடன் பண்புடன் நம் உடலுக்குள் புகுந்து இருப்பினும்… அதை நாம் இவ்வழியில்
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுதெல்லாம்
2.அந்த உணர்வுகள் நம் ரத்த நாளங்களில் கலக்கின்றது… நமக்குள்
இருக்கும் அந்த ஜீவான்மாக்களுக்கும் அந்த உணர்வு
கிடைக்கின்றது
3.இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி
அடைய இதனின் வளர்ச்சி அருள் ஒளியின் சுடராக நம்மையும் மாற்றும்.
4.அதுவும் வளர்ந்து அதனின் உணர்வு நாம் வெளியே சென்ற பின் அந்த ஆன்மாவும் சப்தரிஷி
மண்டலத்துடன் இணையும்.
5.நாமும் அதே வழியில் இணையும் தருணம் வருகின்றது.
ஞானிகள் காட்டிய இந்த அருள் வழியில் செல்வோம் என்றால்
இந்த உயிர் என்றுமே அழியா ஒளிச் சரீரம்
பெறுகின்றது. நமது குருநாதர் காட்டிய அருள் வழி இது…!