ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 27, 2025

உபதேச வாயிலாக யாம் கொடுக்கும் சக்தி “உங்களுக்குள் இயக்கச் சக்தியாக மாற வேண்டும்”

உபதேச வாயிலாக யாம் கொடுக்கும் சக்தி “உங்களுக்குள் இயக்கச் சக்தியாக மாற வேண்டும்”


குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.“துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறக்கூடிய தகுதிக்குத் தான் அடிக்கடி உங்களுக்கு உபதேசிப்பது…”
2.இந்த உணர்வுகள் பதிவாகி விட்டது என்றால் மீண்டும் நினைவுபடுத்துகின்றேன் அதைப் பெறுவதற்கு.
3.காரணம் பல நினைவுகள் உங்களை மூடி மறைக்கின்றது.
 
நான் சொல்வதைக் கேட்கும் பொழுது உங்களுக்கு வீரியம் பெறுகின்றது. அடுத்தாற்போல் இருவர் சண்டையிடுவதை நீங்கள் பார்த்தால்சாமி என்ன சொல்கின்றார்…? பார்…! இவர்கள் என்ன செய்கிறார்கள்…? என்று
1.நான் சொன்னதை விட்டு விடுவீர்கள் அதை எடுத்துக் கொள்வீர்கள்.
2.தீய அணுக்களுக்கு நிறைய சாப்பாடு கொடுத்து விடுவீர்கள் அதற்கு விரியம் ஜாஸ்தி.
3.நமக்குள் அணுக்கள் அதிகமாக இருக்கப்படும் பொழுது அதை மாற்றும் சக்தியைக் கொடுத்து அதை மடக்கச் செய்ய வேண்டும்.
 
அப்படியென்றால் அந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…? காலை துருவ தியானத்தில் கொடுத்த சக்தியை நினைவுபடுத்தி வளர்க்க வேண்டும்.
 
பின்… சண்டை யாராவது போடுகிறார்கள் என்றால் பார்க்கப்படும் பொழுது அவர்களைக் கண் பதிவாக்குகின்றது. தவறு செய்கிறார் என்று பார்க்கின்றோம். அந்த உணர்வு அதே அணுவாக உடலுக்குள் மாற்றி விடுகின்றது.
 
இங்கே என்னிடம் உபதேசங்களைக் கேட்டுச் செல்கின்றீர்கள்
1.நான் ஒருவன் தானே சொல்கிறேன்.
2.அந்தப் பக்கம் ஆயிரம் பேர் ஆயிரம் விதமாகப் பேசுகின்றார்கள் செயல்படுகின்றார்கள்.
3.அது உங்களுக்குள் பெருகிவிடுகின்றது. நான் சொன்னது சிறுத்து விடுகின்றது.
 
கோவிலுக்குச் செல்கின்றோம் அங்கே தெய்வத்தை வணங்குகின்றார்கள். தவறு செய்பவர்களை அங்கே பார்க்க நேர்கிறது. அர்ச்சனை செய்து பரிவட்டம் கட்டிப் பல மரியாதைகள் அவர்களுக்குச் செய்வார்கள்.
 
பல தவறுகள் செய்கின்றான்சாமி அவனுக்குத்தான் உதவி செய்கின்றது என்று எண்ணுவோம். அந்த இடத்தில் கோவிலையே நீங்கள் வெறுக்கின்றீர்கள். அப்பொழுது நம் உணர்வுகள் என்னாகின்றது…? தீமைகள் தான் வருகின்றது.
 
அதே போல்… உபதேசங்களை நான் சொல்லிக் கொண்டே இருந்தாலும் அதைக் கேட்டு விட்டு
1.வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து உலகம் கெட்டு விட்டது என்று நீங்கள் அதற்குத் தான் சக்தி கொடுப்பீர்கள்.
2.நான் சொன்னதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை மாற்றி அமைக்க முடிகிறதா…? இல்லை.
3.ஏனென்றால் அந்த உணர்வுகள் அவ்வாறு இயக்குகின்றது.
 
நாம் எதற்காக வேண்டி காலையில் துருவ தியானம் செய்கின்றோம்…? ஈஸ்வரா…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நாம் உடனுக்குடன் துடைத்துப் பழக வேண்டும்.
 
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர வேண்டும் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் சக்தி இந்த ஆலயத்திலே படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
சங்கடமாகப் பேசுகின்றார்கள் அவசியமில்லாமல் பேசுகின்றார்கள் என்று பார்க்கின்றோம். அந்த நேரத்தில் ஈஸ்வரா என்று எண்ணி நம்மை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
சாக்கடையில் ஒருவன் கல்லைத் தூக்கிப் போடுகின்றான் அல்லது ஒரு பன்றி அதற்குள் விழுந்து போகின்றது வாலை வீசிக்கொண்டு எழுந்து செல்கின்றது. நம் மீது அசுத்தம் பட்டு விடுகின்றது.
 
நான் நல்ல துணியைப் போட்டேன் இவ்வாறு ஆகிவிட்டதே என்றாலும்… அடுத்து நாம் அதை உடனே துடைக்கத் தானே முற்படுகின்றோம் ஐய்யயோ இப்படிப் பட்டுவிட்டது ஐய்யய்யோ இப்படிப் பட்டுவிட்டது என்று சொல்லிக் கொண்டே போகின்றோமா…? இல்லை…!
 
புறத்தால் ஏற்படும் அசுத்தங்களை உடனுக்குடன் நாம் தூய்மைப்படுத்துகின்றோம். அகத்திற்குள் படும் தீமைகளைத் துடைக்க வேண்டும் என்றால் அதற்குத்தான் அந்த அருள் சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன்.
 
அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
1.கண் கொண்டு பார்த்த உணர்வு இங்கே ஆன்மாவாகி சுவாசிக்கச் செய்து உயிரிலே படுகின்றது
2.அந்த உணர்வு தான் அறியச் செய்கின்றது…. உடலில் பரப்பச் செய்கின்றது.
3.அப்பொழுது உங்கள் நினைவு இங்கே செல்கின்றது…?
 
ஈஸ்வரா என்று கண்களின் நினைவுக்குக் கொண்டு வந்து உயிருடன் ஒன்றி அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும்.
 
ஆனால் நீங்கள் புருவ மத்தியை நினைக்கின்றீர்களா…?
 
கண்ணின் நினைவை இங்கே இணைத்து விட்டால் அது அகக்கண். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் இன்று இங்கே தடைப்படுத்தும் பொழுது தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது. இது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இடைமறித்து உள்ளே செலுத்த வேண்டும்.
1.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்
2.எல்லோரும் நாம் பழக வேண்டிய நிலைகள்.
 
நாம் தவறு செய்யவில்லை…! அந்த உணர்வுகள் வந்தது என்றால் நம்மை இயக்கிக் குற்றவாளியாக மாற்றுகின்றது.
 
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தூய்மைப்படுத்திவிட்டு யாரைப் பார்த்தோமோ அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் இதைக் கலந்து இந்த உணர்வின் ஒலிகளைப் பரப்ப வேண்டும்.
 
இதை நாம் பாதுகாப்புக் கவசமாகக் கொண்டு வர வேண்டும் நம் ஆன்மாவிலே…!” இப்படிச் செய்யும் பொழுது பிறருடைய உணர்வு நமக்குள் இழுக்காதபடி நாம் எடுத்த உயர்ந்த உணர்வின் நினைவு வந்து நம்மைக் காக்கக் கூடிய சக்தியாக வரும்.
 
1.இது அரும்பெரும் சக்தி…! நாம் எடுத்து எடுத்து எடுத்து இதைக் கூட்டிப் பழகுதல் வேண்டும்.
2.வாழ்க்கையில் நாம் இப்படி மாற வேண்டும்.
 
குறையைக் கண்டு தான் விலகிச் செல்கின்றோம். ஆனால் குறைகளை உணர முடியவில்லை என்றால் அதிலே வீழ்ந்து மடிவோம்.
 
பூச்சிகள் மற்ற பறக்கக்கூடிய வீட்டில் பூச்சிகள் பறந்து வருகின்றது விளக்கு (தீபம்) எரிந்து கொண்டிருக்கின்றது என்றால் ஈர்க்கப்பட்டு அதில் விழுகின்றது. வேகமாக வந்து அதிலே பட்ட பின் கருகுகின்றது.
 
அதற்குத் தெரியாது…! நாம் தெரிந்தவர்கள்…! நம்முடைய தூய்மைப்படுத்தக் கூடிய உணர்வுகள் நஞ்சால் கருக்கப்படுகின்றது. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த வேதனைகளைச் சமப்படுத்தத் தெரியவில்லை என்றால் நம் நல்ல அணுக்களை அது கருக்கி விடுகின்றது.
 
விஷம் தாக்கப்படும் பொழுது தான் வெப்பமாகின்றது அதே விஷத்தின் தன்மை தாக்கப்படும் பொழுது நல்ல உணர்வை ஆவியாக மாற்றி விடுகின்றது. இந்த விஷம் நெருப்பாக மாறுகின்றது.
1.விஷத்தால் கவரப்படுவது என்ன செய்கிறது…?
2.எதிலே பட்டாலும் விஷம் அதைக் கெடுக்கின்றது.
3.அதை மாற்றுவதற்குத் தான் உங்களுக்கு ஆத்ம சக்தி என்ற ஆயுதத்தையே யாம் கொடுக்கின்றோம்.