
“எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற எண்ணெய் தான் ஆயுதம்…!”
பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்றால் இந்த உடல் பற்று இருக்கக் கூடாது. ஆனால் இந்த உடல் பற்று இல்லாமலும்
இருக்க முடியாது.
தன் பிள்ளை மீது பாசம் இல்லாமல் இருக்க முடியுமா…? வெளியிலே சென்று சேட்டை செய்து
விட்டு வீட்டுக்குள் வருகின்றான். நீங்கள் என்ன செய்வீர்கள்…?
பாசத்தினால் “ஏண்டா இப்படிக்
கெட்டுப் போகின்றாய்…?” என்று கேட்பீர்கள்.
1.பாச உணர்வு இல்லை என்றால் அவனைத் தடுக்க முடியுமா…?
2.எப்படியோ போகின்றான்…! என்ற வகையில் சேட்டை
செய்கின்றவனுக்கு உணவு கொடுக்கக் கூடாது என்று சொல்ல முடியுமா…?
3.அப்படியே விட்டுவிட்டால் என்ன ஆகும்…?
வாடி வதங்கி அவனுக்குள் விளையும் வேதனை நமக்குள்ளும் புகுந்து நம்மையும்
வேதனைப்படச் செய்யும். அவன் உணர்வு
நமக்குள் கலந்து பாசத்தால் வெறுப்பின் உணர்வுகளை வளர்த்து அவனையும் வெறுத்துப்
போகும் அளவிற்கு வந்துவிடும்.
அடிக்கடி வெறுப்பைக் கலந்து அவனிடம் பேசினால் என்ன ஆகும்…? அந்த எண்ணம் மேலும் மேலும் அவனை
நல்வழிக்கு அழைத்துச் செல்வதற்கு மாறாக அவனின் வழிகளுக்கே அழைத்துச் செல்ல
முடியும். அவனைத் திருத்த முடியுமா…?
1.நம்மிடம் இருந்து அவனைப் பிரிக்கத்தான் முடியுமே தவிர திருத்த முடியாது.
2.திருத்தியவர்கள் யாரையாவது சொல்லச் சொல்லுங்கள்.
திருத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டு மந்திரவாதிகளிடம் சென்று தாயத்தைக்
கட்டினேன் என்று ஆவி நிலைகள் கொண்டு தான் அதைச் செயல்படுத்த முடியும். சிறிது நாள் நன்றாக இருப்பான்… மீண்டும் அவன் வழிக்குத் தான் அவன் செல்வான்.
அவன் மீது பட்ட வேதனை இங்கே வளரும். அதைத் துடைக்காமல் இருக்க முடியுமா…? துடைக்க
வேண்டும் என்றால்
1.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நமக்குள் வலுக் கூட்ட வேண்டும்.
2.அவனால் நாம் நன்மை பெறுகின்றோம்… அவனுக்கும் அதைக் கிடைக்கச்
செய்ய வேண்டும்.
சாக்கடை வாசனை வருகிறது என்றால் அதை நுகர்ந்தால் எரிச்சல் ஆகிறது அந்த வாசனை
நமக்குள் வராது எதையாவது வைத்து அதைத் தடுக்கின்றோம் அல்லவா…!
“எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற எண்ணெய் தான் ஆயுதம்…!”
எண்ணெயாக இருக்கும் இடத்தில் தண்ணீரை ஊற்றித் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால்
இன்னும் கொஞ்சம் தான் அதிகமாகும்.
1.அதனால் தான் சோப்பில் என்ன செய்கின்றார்கள்…?
2.”எண்ணெய்ப் பசையைக் கொடுத்து” அதைத் தேய்க்கப்படும்
பொழுது
3.நுரை வருகின்ற மாதிரிச் செய்து… அது ஊடுருவி எண்ணெயை
அகற்றுகின்றது… இடம் தூய்மை அடைகிறது.
எண்ணெயை வைத்துத்
தான் எண்ணெயை அப்புறப்படுத்த முடியும்.
இதே மாதிரித் தான் நமது வாழ்க்கையில் நஞ்சின் தன்மை கலக்கிறது. ஆனால் நஞ்சினை நீக்கிடும் ஆற்றலை
அகஸ்தியன் பெற்றான். அந்த உணர்வை நமக்குள் எடுத்தால்
வாழ்க்கையில் வந்த நஞ்சினை நாம் நீக்க முடியும்.
இந்த நஞ்சினை நீக்கிடும் உணர்வு கொண்டு நல்ல உணர்வுகளை எடுத்துப் பையனிடம் இப்படி
வர வேண்டும் என்று நாம் சொன்னோமென்றால் அவனைத் திருத்தவும் முடியும்.
1.அவனால் இந்த அருள் உணர்வை பெற்று நாம் நன்மை பெறுகின்றோம்…!
2.அவனை நல்ல வழிக்கும் கொண்டு வரவும் முடியும்.
ஆனால் முதலிலே சொன்னபடி அவனிடம்
குறையைச் சொல்லும் பொழுது வெறுப்பு தான் வளரும். நம்மைப் பார்க்கும் பொழுது அவனுக்கும் வெறுப்பு தான் வரும்.
ஆக… தவறு
செய்கின்றான் என்றால் “நல்ல வழியைச் சுட்டிக் காட்டாமல்” இருக்க முடியுமா…? ஒருவருக்கு நோய் வந்துவிட்டது
என்று தெரிந்த பின்பு நாம் டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணமே வருகின்றது.
ஆனால் ஒரு சிலருக்கு அந்த நோயாளி ஆகாதவர் என்றால் “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்” என்பார்கள். அந்த உணர்வு அவனுக்குள் விளைகின்றது. அவனைக் காக்க வேண்டும் என்ற உணர்வு அங்கு இல்லை.
அப்படித்தான் அவனுக்கு வேண்டும் என்று நினைக்கும் பொழுது அதைக் கண்டு அவன்
ரசிக்கின்றான்.
ஆனால் பண்பு கொண்ட மனிதன் பாசத்தால் தன் உடலுக்குள் எடுத்துக் கொள்கின்றான். காத்து அவனுக்கு உதவி செய்கின்றான், அந்த உணர்வு இங்கே வளர்கின்றது.
“மகராசன்” என்னைக் காப்பாற்றினான் என்று அவன் சொல்கிறான்.
காத்திடும் உணர்வும் நோயான உணர்வும் ரெண்டும் செயல்படுகின்றது. இந்த உணர்வு
வளர்ந்த பின் உடலை விட்டு அவன் பிரிந்தால் ஆன்மா இங்கே வருகின்றது. நம்முடைய வலு அவன்பால் இருக்கப்படும்
பொழுது அது இங்கே வந்துவிடுகிறது.
1.அதே நோய் இங்கே உருவாகி நம்மை வீழ்த்துகிறது.
2.உதவி செய்கிறோம்… ஆனால் நம்மை வீழ்த்துகிறது…
இதற்கு என்ன செய்வீர்கள்…?
உதாரணமாக உணவு அதிகமாக இருக்கின்றது… சாப்பிடுகின்றோம். ஆனாலும்
வழக்கத்திற்கு அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலுக்கு அது நல்லது செய்கின்றதா…? இல்லை. ஏனென்றால் இது இயற்கையின் நியதி. ஜீரணிக்கும் சக்தி வேண்டும்.
ஆகவே தீமைகளை அடக்க வேண்டும் என்றால்
1.தீமைகளை அகற்றிய நஞ்சை வென்ற அருள் ஞானிகள் உணர்வை எடுத்துப் பழக வேண்டும்.
2.எடுக்கப் பழக வேண்டும் என்றால் அந்தச் சக்தியை யார் பெற்றார்களோ
3.எடுத்தவர்களிடம் விளைந்த சொல் ஞானம்… அது நமக்குள்
வித்தாக வேண்டும்.
4.பதிந்த வித்தினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அந்த ஞானம்
நமக்குள் விளையும்.
அப்போது… கஷ்டம்
வரும் பொழுது ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
என்று எண்ணினால் அந்தச் சக்தியால் நாம் நலம் பெறுகின்றோம்.
இதை எடுக்கவில்லை என்றால் அவனால் நஷ்டம் அடைகின்றீர்கள். அவனையும் நஷ்ட,மடைய
வைக்கின்றீர்கள். பையனைக் காக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
ஆனால் அந்த விஷம் நமக்குள் வளர்ந்து நம்மை நாம் காக்க முடியாது போகிறது.
காரணம் அந்த விஷத்தின் அளவுகோல்…!
1.எப்படி ஒரு சோப்பைத் தேய்த்தவுடன் அது எண்ணைப் பிசுபிசுப்பை அகற்றுகின்றதோ
2.இதைப் போல விஷத்தை ஒடுக்கிய அருள் ஞானிகள் உணர்வைக் கலந்த பின்
3.அது விஷத்தை ஒளியாக மாற்றுவது போல் நமக்குள் இருளை அகற்றுகிறது.
பையனைக் கூப்பிட்டு மகரிஷிகளின் அருள் சக்தி உன் உடலில் படர வேண்டும். தீமைகள் நீங்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
அவன் இந்த உணர்வை எடுத்துக் கொள்ளும் போது… “கேட்டான்”
என்றால் அவன் நல்லவனாகின்றான்.
இருந்தாலும்… எப்படியும் அவன்
இதை எடுத்து மாற வேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கும்போது என்ன ஆகிறது…?
முதலிலே உங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் முறைத்துப் பார்த்துக்
கொண்டிருப்பான்
1.இப்பொழுது இந்த உணர்வை எடுத்து “நாம் மாற வேண்டும்”
என்று எண்ணினால் இந்த உணர்வு என்ன செய்யும்…?
2.அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும்.
3.அதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற அவ்வளவு பெரிய ஆயுதத்தை உங்களுக்கு
கொடுத்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை இந்த உபதேசங்கள்
வாயிலாகத் தருகின்றோம்.
நீங்கள் அதை எண்ணி எடுத்து வளர்த்தீர்கள் என்றால் உங்கள் உயிர் அதை
உருவாக்கும். ஒளியின் சுடராக
மாற்றும்.