ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 20, 2017

மகாபாரதப் போர் தொடங்கும்போது அர்ச்சுனன் தன் உறவினர்களுடன் போர் செய்ய மறுக்கும் பொழுது “கண்ணன் உபதேசிக்கும் உபதேசம்” – விளக்கம்

1.நமக்கு முன் பரவிக் கிடப்பது பரமாத்மா.
2.எண்ணி எடுப்பது ஆத்மா.
3.இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் விளைந்தால் ஜீவாத்மா.

விளைந்த உணர்வுகள் எதன் எதனுடன் இணைத்து எதைக் காக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த உணர்வினுடைய ஆற்றலின் நிலைகள்
1.உயிருடன் சேர்த்து நினைவுடன் சேர்ந்து இயக்கக்கூடிய ஆற்றலாக
2.ஒரே இயக்கமாக வருவது நான்காவது – காயத்ரி.

நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அது சிருஷ்டிக்கப்படுகின்றது. ஆனால் உயிரின் ஓட்டத்திற்குள் தான் இது நிலைத்திருக்கின்றது என்ற நிலையை காயத்ரி – சூரியன் என்று சொல்வது. சூரியன் என்றால் நம் உடலுக்கு “உயிர்” சூரியனாகின்றது.

குருக்ஷேத்திரம் என்பது நம் உடலுக்குண்டான நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் இந்தக் குருவான (உயிர்) நிலைகள் கொண்டு அது வளர்த்துக் கொண்ட நிலைகள் தான்.

நாம் எதை எடுக்கின்றோமோ அந்த நிலைக்கொப்ப ஞானத்தை உருவாக்கி அது உபதேசிக்கும் உணர்வின் நிலைகளில் தான் குருவுடன் அணுகி
1.நமக்கு எப்பொழுது துன்பம் வருகின்றதோ
2.அவனை நினைக்கும் பொழுது
3.அந்த ஆற்றல்மிக்க சக்திகள் நமக்கு உறு துணை செய்கின்றது.
4.இதைத் தான் அன்று கீதா உபதேசத்தின் நிலைகள் கொண்டு கண்ணன் சொன்னது.

நாம் கண்ணிலே பார்க்கப்படும் பொழுது “பிறர் செய்யும் தவறின் தன்மை தெரிகின்றது…, உணர முடிகின்றது”, அது உணர்த்திய நிலைகள் கொண்டு தவறு செய்தவரை எண்ணியே என்னை இயக்குகின்றது.

என்னுடைய நல்லதைக் காக்க வேண்டும் என்றால் அவர்களின் உணர்வுகள் என் உடலுக்குள் சென்று தீய விளைவுகள் உருவாக்காதபடி அதைத் தடைப்படுத்த வேண்டும்.

அதைத் தடைப்படுத்தும் நிலைகளுக்குத்தான் கீதா உபதேசம் காட்டப்பட்டது.

1.”ஒ...ம்” என்ற உணர்வின் உணர்ச்சி “ஓ...ம்..காரநாதம் கொண்டு வானை ஏகுகின்றான்.
2.இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய பல எண்ண அலைகளை அடக்கி
3.அந்த “ஓ...ம் என்ற நாதத்தை உயிருடன் சுருதியை ஏற்றி இந்த உணர்வை
4.வலு கொண்டு சுவாசிக்க (இழுக்க) வேண்டும்.

ஏனென்றால் கண்ணன் (கண்களால்) இங்கே தவறு செய்பவர்களைப் பார்க்கும் பொழுது இந்த நிலை ஆகின்றது.

இந்த உடலுக்குக் குருவான உணர்வின் தன்மை கொண்டு அங்கே விண்ணை நோக்கி ஏகி “ஓ...ம் என்ற ஓங்கார உணர்ச்சியைச் செலுத்தி மனித உடலுக்குள்ளிருந்து வரும் சிற்றலைகளை அடக்கிடல் வேண்டும்.

பின் இந்த உணர்வின் எண்ணத்தை ஓங்கிச் செலுத்தி மெய் உணர்வை ஊட்டிய மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று விண்ணை நோக்கி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அந்த மெய் ஒளியை நமக்குள் சேர்த்து இந்த உணர்வின் தன்மை கொண்டு
1.எங்கே எண்ணித் தாக்க வேண்டும் (எனக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும்) என்று எண்ணினார்களோ
2.அந்த எண்ணத்தை “அங்கேயே” நிறுத்த வேண்டும்.
3.அம்பைக் கொண்டு அல்ல.
4.புறத்தால் காட்டிய இந்த அம்பை எய்து அந்த உடலைத் தவறு செய்பவர்களை வீழ்த்துவது அல்ல.

உடலை வீழ்த்த வேண்டும் என்ற அந்த உடலுக்குள் நின்று அந்தத் தீமையான உணர்வை இயக்கியதை அந்த ஆற்றல்களை அங்கே நிறுத்தி “அவனை நல்லவனாக்க வேண்டும்”.

(மகாபாரதத்தில்) குருவே எதிரியின் பக்கம் இருந்து அந்த விஷத்தின் தன்மை சிக்கியபின் குருவாகக் காட்டப்பட்ட அந்த மெய் உணர்வின் சக்திகளை எப்படி மீட்டுவது?

 குருவிற்குள் தன்னை அறியாது வந்தாலும் அந்தக் குருவின் நிலையை அவரை அறியாது ஏனென்றால் அந்தப் பாசத்தின் வலைகளில் சிக்கும் பொழுது
1.குரு என்ற நிலையில் மரியாதை
2.இங்கே சகோதரர் என்ற மரியாதை
3.ஆனால் அவர்கள் செய்வதோ தவறு.

எனக்குள் இருக்கக்கூடிய வலிமை கொண்டு “அவரை வீழ்த்தி விட்டால்…”  நான் யாருக்காக வேண்டி வாழ்கிறேன் என்ற இந்த உணர்வின் சோகங்கள் இங்கே தூண்டும் பொழுது அப்பொழுது தீமையை வளரவிடும் நிலையாகி “நல்லதைக் காக்கும் திறன் இழக்கின்றது”.

மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட இந்தப் பாசத்தின் நிலைகள் எல்லை கடந்து செல்லும் பொழுது நம்மால் அதை மீட்டும் நிலை அது பலம் இழந்து நம்மையே வீழ்த்தி விடுகின்றது.

இத்தகைய நிலையைத்தான் அர்ச்சுனனுக்கு (அர்ச்சுனன் என்பது சகல வலிமையும் கொண்ட உணர்வின் நிலைகள்) தன் உயிரான நிலைகள் கீதா உபதேசத்தின் தன்மை உபதேசிக்கும் பொழுது
1.நீ எங்கே எடுத்தாலும் என்னிடம் தான் வருகின்றாய்.
2.எதை நினைத்தாலும் அந்தக் கண்ணின் வழி கொண்டு தான் அறிய முடியும்.
3.நீ எதைச் சேர்த்தாலும் அதனின் உணர்வு கொண்டு தான் இந்த உடலிலே விளைகின்றது.
4.நீ எதை நினைக்கின்றாயோ அதனின் நிலைகள் யார் எதைச் செய்தாலும் என்னிடமே நீ வந்து சேர்வாய்.
5.என் நிலையையே நீ அறிவாய் என்று
6.இந்தக் கண்ணின் உபதேசம் கண்ணனின் நிலைகள் கொண்டு காட்டப்பட்டது.

ஆனால் கண்ணின் நினைவுகள் என்னாகின்றது? கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்கிறபோது அவர் அறியாத நிலைகள் அங்கே வருகின்றது.

அவர் எடுக்கும் உணர்ச்சிகள் இந்த உடலை ஆட்டிப்படைக்காதபடி இந்தக் கண்ணின் நிலையை அவருடன் ஒன்றி கண்ணா… என்று நாம் எண்ணும் பொழுது
1.இந்தக் கண்ணின் நிலைகள் உயிருடன் எண்ணி
2.நினைவை நாம் இங்கே புருவ மத்தியில் செலுத்தி
நமக்குள் இயக்கிக் கொண்டிருக்கும் குருவான - உயிருடன் அங்கே ஏங்குவது.

அதைத் தான் குருக்ஷேத்திரப்போர் என்பது.

அங்கே அவர்கள் (தீமை செய்யும்) உணர்வுகளை நாம் சுவாசித்து உயிரான குருவிடம் பட்டுத்தான் அதை நாம் அறிய முடிகின்றது.

அவருடைய உணர்வின் தன்மை இங்கே செல்லாதபடி “ஈஸ்வரா” என்று குருவை எண்ணி அந்த மெய் ஒளி பெறவேண்டும் என்ற ஆற்றல்மிக்க சக்தியைக் கூட்டும் பொழுது அந்த உணர்வின் தன்மை எனக்குள் வலு கூடுகின்றது. வரும் எத்தகைய தீமைகளாக இருந்தாலும் அகற்றும்படி செய்கின்றது.