ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 29, 2017

இன்றைய பக்தி நிலையில் நாம் எப்படி வாழ்ந்து கொண்டுள்ளோம்? “தெய்வத்தைக் காட்சியாகக் கண்டேன்” என்பவர்களின் கடைசி எல்லை எது? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்

(1).ஆலயங்களில் நாம் “சாமி சிலையைப் பார்க்கும் பொழுது” என்ன நடக்கின்றது?

நாம் கோயிலில் போய் வெங்கடாசலபதியிடம் இந்தக் காணிக்கை போடுகிறேன் என்கிற போது இந்தக் கண் அதைப் படம் எடுக்கிறது. அது சிலைதான்.
1.அந்தச் சிலையிலிருந்து வரக்கூடிய அலைகளும்
2.நாம் எண்ணும் எண்ணங்களும் ஒன்றாகச் சேர்கிறது.
3.அதில் என்ன ரூபங்கள் போட்டு அதை அலங்கரித்து வைத்திருக்கிறார்களோ
4.நம் கண் அப்படியே பதிவாக்குகிறது.

நாம் அதன் மேல் ஆசைப்பட்டு இந்த வெங்கடாசலபதி நமக்குச் செய்வான். சொத்து கொடுப்பான். சுகம் கொடுப்பான் – என் நோயைத் தீர்ப்பான் என்று அவ்வாறு ஒவ்வொன்றுக்கும் காணிக்கை முடிந்து போட்டுவிடுகிறோம்.

“இந்த எண்ணத்தை வளர்க்கிறோம்”.

அந்தப் படத்தை எடுக்கும் பொழுது இந்த சூரியனின் காந்தப்புலன்கள் அதை அலைகளாக எடுக்கிறது. நாம் எந்த நிலைக்கு வந்தோமோ அதை அப்படியே பதிவாக்குகிறது.

சினிமாப் படங்களில் என்ன செய்கிறார்கள்?
1.தனித்தனியாக எடுத்துப்
2.பிறகு ஓடும் பொழுது படமாகத் தெரிகிறது.
3.நடப்பதுபோல் தெரிகிறது.

இதேபோல் நமக்குள் அந்தச் சிலையை அதிகமாக எண்ணிப் பார்த்துப் பதிவு செய்திருக்கின்றோம். நாம் அந்த நிலையை எடுத்திருக்கிறோம்.
அப்புறம் அதில் மந்திரங்களைச் சொல்லி இன்ன இன்ன மந்திரங்கள் சொன்னால் அவன் இரக்கப்பட்டு ஓடிவந்து இதையெல்லாம் செய்வான் என்று நம்மிடம் சொல்வார்கள்.

அதைப் பதிவாக்கிவிடுகிறோம்.

இதைப் பதிவாக்கியபின் இன்ன இன்ன கஷ்டத்திற்கு இதை எல்லாம் செய்தால் “உனக்கு நன்றாக இருக்கும்… அவன் சுகத்தைக் கொடுப்பான்…” என்பார்கள்.

(2).கடவுள் பக்தியாக நாம் வாழும் பொழுது வீட்டில் திருடன் கொள்ளையடித்தால் என்ன ஆகும்?
இந்த உடலில் இருப்பது வரை நீங்கள் என்னதான் செய்தாலும் சொத்து சுகம் வந்தாலும் அது மறைந்துவிடும்.

எல்லா சுகமும் ஆண்டவன் கொடுப்பான் என்றால் இடையில் ஒருவன் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டான் என்றால் என்னாகும்?

“என் சொத்தெல்லாம் போய்விட்டது,. நான் என்ன செய்வேன்?” என்று வேதனை எடுத்துவிட்டால் இது அதிகமாகிவிடுகின்றது. அப்படி வேதனை அதிகமாகி விட்டால் அந்தக் கடவுள் கைவிட்டு இந்தக் கடவுள் வந்து விடுகிறார்.

நாம் வேதனை உணர்வு எடுத்துவிட்டோம் என்றால் என்ன நினைப்போம்? “எப்படி எல்லாம் சம்பாதித்தேன்…, இப்படிக் கொள்ளை அடித்து விட்டானே…” என்று நான் நினைக்கிறேன்.

வெங்கடாசலபதியிடம் செல்கிறேன். “இப்படிக் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டானே என்று…”
1.இதே நிலையில் எண்ணி எண்ணி எனக்கு நோயாகின்றது.
2.நான் இறந்துவிடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
3.இது அலைகளாகப் படர்கிறது.
(அதாவது – இந்த  மனித ரூபத்திலிருந்து அழிந்து மனித உடலில் சேர்ந்தபின் அந்த எண்ணமும் ரூபமும் சேர்ந்து இப்படி வந்து விடுகிறது)

(3).வேதனைப்பட்டு இறந்தபின் திருடன் உடலுக்குள் ஆன்மா போகும்
திருடியவன் யார் என்று தெரிந்தான் என்றால் அவன் ரூபத்தைப் பதிவாக்கி விடுகிறோம்.  “திருடிச் சென்று விட்டானே..” என்று எண்ணுகின்றோம்.

அப்பொழுது  எப்படி “ஆடு…” பயத்தால் புலியையும் நரியையும் எண்ணுகின்றதோ
1.நம் செல்வத்தைத் திருடிப்போய் விட்டான் என்றால் அவனையே எண்ணி
2.என் ஆன்மா திருடனின் உடலுக்குள் போகிறது.

“வெங்கடாசலபதியே.., என்னை இப்படிச் செய்து விட்டானே” என்று அந்தத் திருடனை எண்ணி இணைத்து விட்டால் போதும்
1.இது இரண்டும் அலைகளாக மாறும்.
2.எல்லாம் வெளியில் வரும்,
3.எல்லாம் நமக்குள் பதிவாகிவிடும்.
4.என்ன என்ன கலர் போட்டீர்களோ அதெல்லாம் வரும்.
5.எந்த எண்ணங்களில் எண்ணுகிறீர்களோ அந்தக் கலர் ஓட்டம் ஓடும்.
6.சர்குலேசன் (CIRUCULATION) ஆகிக்கொண்டே இருக்கும்.

அந்தத் திருடனைக் கண்ணால் பார்த்து விட்டோம் என்றால் “அவன் நினைவே…” அதிகமாக வரும். அவன் நினைவு வரப்போகும் போது அவன் உடலுக்குள் தான் அந்த ஆன்மா போகும்.

அவனால் என்ன என்ன வேதனை ஆனதோ அவன் திருடி வந்தால் அதை அவன் எண்ணுகிறான். அவன் திருடிச் சம்பாதித்தாலும் அவன் உடலுக்குள் போகும்.

நாம் பட்ட வேதனை எல்லாம் நோயாக நரக வேதனையாகவே உருவாக்கும். “திருடியவன் என்றும் உருப்பட்டதே இல்லை”. ஆன்மா உள்ளே போய்விடும். அந்த வேதனையை திருடனின் உடலிலே ஊட்டும்.

மீண்டும் என்ன செய்யும்? அவனைக் கொல்லும்.

(4). திருடனுக்கு வெங்கடாசலபதி காட்சி கொடுப்பார்!
நான் வெங்கடாசலபதியைக் கும்பிட்டேன் அல்லவா. அதே ரூபம் திருடனுக்கு வரும். அவன் திருடனாக இருப்பான்

அதே சமயத்தில் நான் வெங்கடாசலபதியை பக்தியில் எண்ணி இருக்கிறேன். ஆனால் அவன் எண்ணவில்லை.
1.இருந்தாலும் அந்த வெங்கடாசலபதியை எண்ணி அந்த உணர்வின் அலைகள் வருகிறது.
2.பார்த்தவுடன் இந்த வெங்கடசலபதியே வந்து காட்சி கொடுப்பார்.
3.யாருக்கு…?

“திருடனுக்கு” திருடனுக்குக் கூட வெங்கடசலபதி காட்சி கொடுக்கிறார். எப்படிக் கொடுக்கிறார்?

என் உடலில் வெங்கடாசலபதியைப் பார்த்த “பட உணர்வு” விளைகின்றது. இந்த உணர்வு விளைந்த உடன் என்ன செய்கிறது?

அந்த வெங்கடாசலபதியைப் பதிவு செய்து வைத்திருக்கின்றேன். இருந்தாலும் என்னிடம் உள்ளதைத் திருடிக் கொண்டு போய் விட்டான். நான் அவனைப் பார்த்துவிட்டேன் என்றால்…
1.”இப்படித் திருடிவிட்டுப் போய்விட்டானே வெங்கடாசலபதி..,” என்று எண்ணும்பொழுது
2.இரண்டு உணர்வும் இணைகின்றது.

இரவில் பார்த்தால் கனவு வரும். திருடனுக்கு வெங்கடசாலபதியும் தெரிவார்.
1.அந்தத் திருடனின் உணர்வை எண்ணிப் போகிறோம் அல்லவா!
2.நம் ஆன்மா அவனிடம் போனால் வெங்கடாசலபதி அவனுக்குக் காட்சி கொடுப்பார்.

அவன் திருடினாலும் நான் வெங்கடாசலபதி மேல் பக்தியாக இருக்கிறேன்.
1.அதிலிருந்து அந்தத் திருடன் பக்தியாக வருவான்.
2.இந்த ஆன்மா திருடனுடைய உடலுக்குள் போனபின் அவன்  வெங்கடாசலபதி கோவிலுக்குப் போவான்.

அந்த ஆன்மா எங்கெல்லாம் சென்றதோ அங்கே எல்லாம் திருடனும் செல்வான், இழுத்துக்கொண்டு போகும். எது? இந்த ஆன்மா அங்கு இழுத்துக்கொண்டு போகும்.

இருந்தாலும் நேற்றுவரை திருடினான். இன்று கோவிலுக்கெல்லாம் போவான். இந்த ஆவி அங்கெல்லாம் இழுத்துக்கொண்டு போகும்.

இந்த உடலுக்குள் இருந்து “நாம் வளர்க்கும் கடவுள்… இதுதான்”. “நன்றாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்”.

இதே மாதிரி நாம் பக்தி கொண்டு முருகனையோ லட்சுமியையோ மற்றும் யாரை எண்ணினாலும் இதனுடன் இணைந்தே வரும். அப்புறம் அந்த ஆன்மா அந்த திருடிச் சென்றவன் மேலேயே வரும்.

அந்தத் திருடன் உடலிலே போனவுடன் அவனைப் பக்திமானாக ஆக்கிவிடும். அவன் ஏற்கனவே திருடனாக இருந்தான்
1.“பார்…, கோவிலுக்குப் போகிறான்”
2.கோவிலுக்கே போகாதவன் கோவிலுக்குப் போகிறான்”.
3.இந்தக் கோவிலில் கும்பிடுகிறான் அந்தக் கோவிலில் கும்பிடுகிறான் அதெல்லாம் பண்ணுகிறான் என்பார்கள்.

அந்த வெங்கடாஜலபதியிடம் போவதற்கும் அடுத்து பக்தி கொண்டு நாமங்களைப் போடுவதற்கும் இவனை அறியாமலேயே போட வைக்கும். உங்கள் சகஜ வாழ்க்கையில் நிறையப் பேர் பார்க்கலாம்.

இந்த மாதிரிக் காட்சிகளில் அந்த ஆவி அங்கு சென்றவுடன் இதெல்லாம் செய்வான். திருட்டுத்தனமும் செய்வான். இந்த உடலின் தன்மையை நோயாக்கிவிடும்.

(5).கடைசியில் பாம்பாகத் தான் உடலை மாற்றிவிடும் உயிர்
பின் கடைசியில் அவன் உணர்வான்.
1.நான் திருட்டுத்தனம் பண்ணினேன்.
2.எனக்கு ஆண்டவன் நோயைக் கொடுத்து விட்டான்.

உடலுக்குள் நோய் வந்தாலும் இவன் புத்தி இந்த உடலை விட்டு இந்த ஆன்மா வெளியே வந்த பிற்பாடு மீண்டும் இந்த நோயைத் தான் உருவாக்கும்.

வெங்கடாஜலபதி வந்து இவரைக் காப்பாற்றுவதற்குப் பதில் திருடனின் உடலுக்குள் போய் இந்த வேதனையை உருவாக்கி உடலுக்குள் இந்த விஷத்தைச் சாப்பிட்டு அந்த விஷத்தை வளரச் செய்து உயிர் வெளியிலே போகும்.

உயிர் இந்த உடலை விட்டுச் செல்லும்போது எங்கே போகும்…! பாம்பு வகைகளில் ஆயிரத்தெட்டு வகையான பாம்பு வகைகள் உண்டு. அந்த விஷம் எந்த அளவுக்கு இருக்கிறதோ நேராக வந்தால் மனித நினைவே வராது. பாம்பின் உடலாக மாற்றிவிடும் உயிர்.

(6).இறக்கும் பொழுது யாரை அதிகமாக நினைக்கின்றோமோ அங்கே தான் உயிர் அழைத்துச் செல்லும்
நீங்கள் பாலில் நல்ல பாதாம் கீரைப் போட்டுக் கொஞ்சம் விஷத்தையும் போட்டுச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்? அதைச் சாப்பிட பிறகு “லட்டைச் சாப்பிடுங்கள். நல்ல துணியைப் போடுங்கள் என்றால் நீங்கள் போடுவீர்களா?”

இதுதான் உங்கள் பேரன் பிள்ளை பேத்தி பிள்ளை உங்கள் அண்ணன், உங்கள் தம்பி”என்றால் நீங்கள் கேட்பீர்களா?

ஹு..ம்…ம்…ம்.. என்றுதான் இழுத்துக் கொண்டு கிடக்கும்.

பேரன் என்று சென்னாலோ “இதோ பாருங்கள் உங்கள் பேரன் வந்திருக்கிறான் உங்கள் பேத்தி வந்திருக்கிறாள் உங்கள் மகன் வந்திருக்கிறான் நீங்கள் சம்பாதித்துக் கொடுத்தவன் வந்திருக்கிறான்-
1.அவன் வந்து உங்களைக் காப்பாற்றுவானா? அது கூட வராது.
2.அதற்குப்பின் சிறிது நேரத்தில் எல்லாம் அடங்கிவிடும்.
3.கண்ணைத் திருப்பிப் பார்க்க வேண்டியதுதான்.
4.காதைத் திருகிப் பார்க்க வேண்டியதுதான்.

அந்த மனிதரின் உணர்வுகள் அனைத்தும் கடைசி நிமிடத்தில் எல்லாம் போகும். இந்த விஷத்தின் தன்மை வெளியில் வந்தபின் அந்த உணர்வு பூராவும் விஷமாக மாறிவிடும்.

பரிணாம வளர்சியில் நாம் வேதனைப் பட்டு இந்த உணர்வின் தன்மை வளர்த்து எந்த உடலுக்குள் போனதோ நான் யாரை நினைத்தேனோ அந்த உடலுக்குள் போகிறது

இது போன உடல்களிலெல்லாம் அந்த வெங்கடாஜலபதியினை நினைத்துக் கொண்டே இருக்கச் செல்லும். காட்சி அபூர்வமாகக் கிடைக்கும் யாருக்கு?  —  அந்தத் திருடனுக்கு வெங்கடாஜலபதியின் காட்சி ரூபம் வரும்.

ஏனென்றால் அந்த உடலுக்குள் சென்றதும்  அந்த அலைகள் அந்த ரூபம் போட்டது,

நினைத்த போதெல்லாம் வெங்கடாசலபதியின் காட்சி கிடைக்கும்… இதோ பார்…! இதோ பார்…! ஹா… உங்களுக்கெல்லாம் தெரியவில்லையா…? என்று அலறுவான்.

அவன் உடலுக்குள் எப்படி அந்தத் திருடனால் அவஸ்தைபட்டதோ அந்த வேதனை எல்லாம் தூண்டிக் கொண்டிருக்கும். அதற்கெல்லாம் அந்த வெங்கடாஜலபதி தெரிந்து கொண்டிருப்பார்.

அது முருக பக்தனாக இருந்தால் முருகனாகக் காட்சி கொடுக்கும். முருகன் காட்சி கொடுக்கிறான் பார்…, பராசக்தி காட்சி கொடுக்கிறார் பார்…, ஐயப்பன் காட்சி கொடுக்கிறான் பார்… என்று எதன் மேல் பக்தி பக்தி கொண்ட நிலையில் உள்ளீர்களோ அதெல்லாம் வேலை செய்யும்.

ஆகவே கடவுள் யார்…?

நாம் எதையெல்லாம் எண்ணிப் பதிவு செய்கிறோமோ அது எல்லாம் வரும். நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கேற்றபடி அந்தக் காட்சியைப் பார்க்க வைக்கிறான். நம் ரூபத்தை மாற்றுகிறான்.

நாம் சிலைகளில் பார்த்தபடி இத்தனை ரூபங்களிலும் இல்லை. நமக்குத் தெளிய வைக்க ஞானிகள் தெய்வச் சிலையை உருவாக்கிக் கோவில்களிலே வடிவமைத்துள்ளார்கள்.

சிலவற்றைப் பார்த்தால்
1.இதைச் செய்தால் தப்பு…, அதைச் செய்தால் தப்பு…
2.இதைச் செய்யவில்லை என்றால் “சாமி கோபித்துக் கொள்ளும்”  என்றெல்லாம் சொல்வார்கள்.
3.அப்பொழுது விரதம் இருந்தேன்…, இப்பொழுது…  “விரதம் இல்லாததால் இப்படி ஆகிவிட்டது” என்றெல்லாம்
4.அந்த ஆன்மாவில் பதிவான உணர்வுகள் இயக்கும்

அது எந்த எந்த விரதம் இருந்ததோ அதேபோல அந்தத் திருடன் உடலுக்குள்ளும் விரதம் இருக்கச் சொல்லும். இந்த எண்ணத்தை எல்லாம் அதிகமாக ஊட்டும். தன்னை அறியாமலேயே எண்ண வைக்கும்

கடைசியில் என்ன செய்கிறான்? அந்த வேதனைகளெல்லாம் உடலில் நோயானபின் இறந்தபின் பாம்பாகப் பிறப்பான்.

பக்தி கொண்டபின் அந்தத் திருடனை நினைத்து விட்டேன் என்றால் அந்த உடலின் தன்மை, அந்த வெங்கடாஜலபதி அவனுக்கு காட்சி கொடுத்து நான் பட்ட வேதனை எல்லாம் அவனுக்கு நோயாகின்றது.

“என் சொத்தெல்லாம் போய்விட்டதே,  போய்விட்டதே,  போய்விட்டதே” என்று இதையே தியானித்தேன். இந்த உணர்வு எனக்குள் என்ன செய்கிறது? இந்த உணர்வின் தன்மை எனக்குள் வளர்கிறது.

நான் அந்தத் திருடனைக் கண்ணால் பார்த்துவிட்டேன் என்றால் என் ஆன்மா திருடனின் உடலுக்குள்ளே போகிறது

நான் செத்தவுடன் அவன் நினைவு இருந்துகொண்டே இருக்கும். என் பொருள் அவனிடம் இருக்கிறது. அவன் (திருடும் பொழுது) எடுத்த அந்த பார்த்த நிலை எல்லாம் எனக்குள் உள்ளது.. அப்புறம் அவனுக்கு நான் வெங்கடாஜலபதியாகக் காட்சி தருகிறேன்.

திருடன் – வெங்கடாஜலபதி கோவிலுக்கொல்லாம் போவான். நிறையப் பேர் பார்ப்பார்கள். இந்தக் கோவிலுக்கு அந்தக் கோவிலுக்கெல்லாம் ஆசையில் போகும். இந்தக் கோயில் அந்தக் கோயில் என்று போய்க்கொண்டே இருப்பார்கள். எனக்குக் காட்சி கொடுக்கிறான். அப்படி எல்லாம் செல்லுவார்கள்.

இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மாதிரி இப்படி இறந்து விட்டால் அவர்கள் உடலுக்குள் சென்று இதை அழித்து விடுகிறது. இது திருடனைப் பார்க்கும்போது அந்தத் திருடன் திருடி விட்டுப்போய்விட்டான். நாம் இங்கே கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால் எனக்கு வேண்டாதவர்கள் எண்ணிக்கொண்டிருப்பார்கள். அந்த வெங்கடாஜலபதியை இவர்களும் கும்பிட்டுக் கொண்டிருப்பர்கள்.

பாருங்கள்… இவன் செய்த கொடுமைகளுக்கொல்லாம்…, இவன் செய்ததற்கொல்லாம்…, அந்த வெங்கடாஜலபதி தண்டனை கொடுத்து விட்டான் பாருங்கள்” அப்படியென்று காதில் படும்படி தெரியும்படிச் சொல்வார்கள்.

அந்த உணர்வை இவர்களுக்கு “ஆகாதவர்கள்” கேட்பார்கள்.

அது சொல்லிக் கொண்டிருக்கும்போது “அடப் பாவிகளா…! இவர்கள் கண் பட்டுதான் இப்படி எல்லாம் ஆகிவிட்டது”என்று அவர்கள் எண்ணத்தைத் தியானம் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.

அப்படி தியானம் பண்ண ஆரம்பித்தால் என்ன ஆகிறது?

இப்படி எல்லாம் சொல்லப்போய் தன் வாழ்க்கைக்குச் செய்ய வேண்டியதெல்லாம் மறந்துவிடும். இந்த உணர்வுகள் வளர்ந்துவிடும். தெழிலும் நஷ்டமாகும் உடலிலும் நோயாகும்.

இந்த வெறுப்பின் தன்மை கொண்டு தன் பிள்ளையை “வாடா…” என்று சொல்லுவார்கள். இவன் எல்லோர் கண்ணும் படும்படியாக “இப்படிப் பண்ணுகின்றாயேடா…”என்று பிள்ளையைத் திட்டுவார்கள்.

பெண் பிள்ளையை ஒழுங்காக வளர்த்திருப்பார்கள். ஆனால் “நீ எல்லாம் பிறந்து தான்… இப்படி எல்லாம் ஆகிவிட்டது…” என்று சாபமிடுவார்கள். இப்படி வெறுப்பு வரும். இப்படி இந்த உணர்வுகள் அவர்கள் திட்ட இது வாங்கி – இதுதான் மாரியம்மா.

பிறருடைய குறைகளை நீ எடுக்கும் பொழுது அது சக்தியாக உன்னிடம் மாறி (மாரி) அது தாயாகி நோயாக உருவாக்குகிறது. வாழ்க்கையில் “கசப்பு” என்று ஸ்தல விருட்சமாக வேம்பை வைக்கிறார்கள்.

நாம் எல்லாம் தெரிந்து கொள்வதற்கு வைத்திருக்கின்றார்கள், ஞானிகள்.

வாழ்க்கையில் நாம் இதையெல்லாம் கேட்கும் பொழுது  தீமைகளை எல்லாம் சேர்த்து அவர்கள் சொல்வதை நாம் கேட்கிறோம்.

இவர்களும் அதேபோல் யார் மேல் எண்ணம் அதிகமாக வைக்கிறார்களோ இது நோயானபின் செத்த பிறகு “வெங்கடாஜலபதி இவர்கள் செய்ததற்கு நல்ல தண்டணை கொடுத்துவிட்டார்”என்று அந்த ஆன்மா இந்த உடலுக்குள் தான் போகும்.

பிறகு அவர்களும் வெங்கடாஜலபதி எனக்குக் காட்சி கொடுக்கிறான் பார் என்று சொல்லுவார்கள். கடைசியில் இந்த உடலில் வந்த நோய் இந்தக் குடும்பத்தில் வந்த நோய் வெங்கடஜலபதி அவர்களுக்கும் சேர்த்துக் கொடுத்துவிடுவான்.

1.நாம் கும்பிடுகிற சாமி எப்படி எல்லாம் நமக்குள் தெய்வமாகிறது?
2.நாம் எண்ணியதை நம் உயிர் உருவாக்கி சிருஷ்டிக்கிறது?
3.அந்த உணர்வின் தன்மை பிரம்மமாக்குகின்றது. பிரம்மத்தின் தன்மை நம் உடல் சிவமாக்குகின்றது. சிவத்துக்குள் சக்தி நமக்குள் எப்படி உருவாகிறது? என்று தெளிவாகக் காட்டி இருக்கிறார்கள்.
4.தெளிவாகவே உங்களுக்குச் சொல்லிக்கொண்டு வருகிறேன்.

இதை உதாரணத்திற்காகச் சொல்கிறேன். அது எங்கே போகிறது.

அவர்கள் உடலிலே போகிறது. அவர்கள் பெருமையாகத்தான் பேசுகிறார்கள் என்று தங்களை நியாயஸ்தர்களாக எண்ணுகிறார்கள். அந்த உணர்வு என்ன செய்கிறது?

இந்த உடலில் வளர்ந்து அது நோயாகி “என்னை இப்படி எல்லாம் பேசுகிறார்களே…, வெங்கடாஜலபதி” என்று இறந்தபின் இவர்கள் இந்த எணண வலுவோடு அங்கே போகிறார்கள்.

யார்?

அங்கே அந்த உடலுக்குள் போய் வெங்கடாஜலபதியாகக் காட்சி கொடுக்கிறார்கள். அதே போல் நீங்கள் முருகனை வணங்கினாலும் அதே தான் ஐயப்பனை வணங்கினாலும் ஐயப்பனே வந்து காட்சி கொடுப்பார்.

ஆகவே நம் எல்லை எங்கே போகிறது…? ஞானிகள் சொன்ன நிலைகள் அரசர் காலங்களில் மாற்றப்பட்டதால் வந்த விளைவுகள் தான் இவைகள். யாரையும் பழித்துப் பேசுவதற்கோ குறையாகச் சொல்வதற்கோ அல்ல.
நீங்கள் எல்லாம் அருள் வழி வாழ்ந்து அந்த மகரிஷிகள் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.