
நம் உடலில் நம்மை அறியாமல் புகும் ஜீவான்மாக்கள்
பிறிதொருவர்
வேதனைப்படுவதை நாம் உற்றுக் கவனிக்கும் பொழுது அவ்வேதனையின் உணர்வுகள் நமக்குள் “ஜீவ அணுக்களாக” விளைகின்றது.
இதன்
தொடர்வரிசையில் எதனின் உணர்வை நமக்குள் வலுவாக்கினோமோ இதே நிலை கொண்ட மற்றொருவர் இதே வேதனை கொண்டு இறந்தார் என்றால்
1.அவர் மீது நாம் பற்று கொண்டிருப்போம் என்றால்
2.அவருடைய
உயிரான்மா நமது உடலுக்குள் வந்து விடுகின்றது.
3.இது தான் “ஜீவான்மா” என்பது.
தேள்களை பாம்புகளை எறும்புகளை நாம் அடித்துக் கொல்கின்றோம். இவைகளின் உயிரான்மாக்கள் எல்லாம் நம்முள் வந்து விடுகின்றன.
நமது உடலின் உணர்வை நுகர்கின்றன. மனிதனாக உருப்பெற்றுக் கருவாகின்றன.
ஜீவான்மாக்கள் மனித இரத்த நாளங்களில் குடிபுகுந்து இரத்த நாளங்களிலே சுழன்று கொண்டே வரும். ஆனால் வளர்ச்சியில்லாத உணர்வின் தன்மை நமக்குள் கருவுறும்
கருவுக்குள் இணைந்துவிடும். இந்த உணர்வின் தன்மை கொண்டு அது மனிதனாகப் பிறக்கச் செய்கின்றது.
அந்த ஜீவான்மாக்கள் நமது இரத்தத்தில் கலந்து சுழன்று வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?
டிரான்ஸாக்சன்
(transaction) அதாவது நமது
உயிரின் தன்மை உணர்வின் ஒலிகளை உடல் முழுவதும் பரவச் செய்து அதன் வழி கொண்டு நம்மை இயக்குகின்றது.
1.உயிரில் இதன் நுண் உணர்வுகள் சென்றபின்
2.உடலை விட்டுப்
பிரியும் பொழுது அந்த ஆன்மா எத்தனை வேதனைப்பட்டதோ
3.அதே உணர்வினை
உயிர் வழி நுகரச் செய்கின்றது,
கண் என்ன
செய்கின்றதென்றால் அதே உருவத்தைக் காட்டுகின்றது. “ஐயோ… பிசாசு வருகின்றது எதிரி வருகின்றான்…!” போன்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
பிறிதொரு
ஆன்மா புகுந்து கொண்ட உடலில் இவையெல்லாம் தெரியும், ஆனால் நமக்குத் தெரியாது.
மைக்கில்
வரும் அலைகளை டிரான்ஸிஸ்டர் (transistor) கவர்ந்து விரிவாக்கி ஒலிக்கற்றைகளை ஸ்பீக்கர் (speaker) மூலமாக எப்படி வெளிப்படுத்துகின்றதோ இதைப் போன்று அந்த ஆன்மாக்கள்
1.நம்முள் ஒளி அதிர்வுகளைக் கண் வழி பாய்ச்சுவதும் உணர்வின் ரூபங்களைக் காட்டுவதும்
2.சொல் வழியாக ஒலிக்கற்றைகளையும் வெளிப்படுத்துகின்றது.
நாம் தவறு
செய்யவில்லை. பிறிதொரு ஆன்மா நம்முள் வந்து விட்டால் இவ்வாறு இயக்குகின்றது.
அதை விட்டு
(உயிரின் பாகம்) நகர்ந்து விட்டால் இரத்த நாளங்களில் எந்தப் பாகத்தில் செல்கின்றதோ அந்த பாகத்தில் வலியும் குடைச்சலும் ஏற்பட்டு… “ஐயோ கை வலிக்கின்றதே… கால் குடைச்சலாக இருக்கின்றதே…” என்பது போன்ற வேதனைகளைத் தூண்டும்.
இது போன்ற
பிற ஆன்மாக்களை ஈர்க்கும் சக்தி பெண்களுக்கே உள்ளது. ஏனெனில் பெண்களிடம் அன்பும் பரிவும் பாசமும் அதிகமாக இருப்பதனால் பெண்களிடம் கவரும் ஆற்றலும் அதிகமாக உள்ளது.
உதாரணமாக குடும்பத்தில் பெண்கள் மிகப் பாசமாக இருப்பார்கள். ஒருவர்
இறந்து விட்டால் “ஐயோ... பாவமே...!
குடும்பத்தில் இத்தனை பேரையும் விட்டு விட்டுச் சென்று விட்டாரே…!” என்று எண்ணினால் இவர்களுடைய உடலில் அந்த ஆன்மா வந்துவிடும்.
இப்படிப் பிறிதொரு ஆன்மா இவர்களுடைய உடலில் வந்து விட்டால்…
1.தான் மனித உடலில்
வாழ்ந்த காலத்தில் என்னென்ன துயரத்தை அந்த ஆன்மா அனுபவித்ததோ
2.அவைகளையெல்லாம்
இங்கே விளைவித்து இவர்களுடைய உடலில் கை வலி கால் வலி போன்ற நோய்களை உருவாக்குகின்றது.
இப்படிப் பெண்களிடம் பாசத்தின் தன்மை இருப்பதனால் பிற ஆன்மாக்களைக் கவர்ந்து அதன் வழி செல்லப்படும் பொழுது குடும்பத்தில் விஷத்தின் தன்மைகள் அதிகமாகப் பரவுகின்றன.
இதைப் போன்று நம்மை அறியாமலே துயர் கொள்ளும் நிலைகள் வருகின்றன. இப்படி நம்மை அறியாது வரும் துயரங்களை நீக்குவதற்கு ஜோசியமும் வாஸ்து சாஸ்திரங்களும் பார்த்தால் போய்விடுமா…?
வாஸ்து
சாஸ்திரம் பார்த்து வீட்டின்
நிலையையும் வாசல்படியையும் மாற்றி வைத்து விட்டால் அனைத்தும் சரியாகி விடுமா…? உங்களைக் காக்குமா…? என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
1.மனிதர்களுக்கு
ஜாதகமில்லை…!
2.எத்தகைய
தீமைகளையும் மாற்றி அமைக்கும் தன்மை பெற்றவர்கள் தான் ”மனிதர்கள்…"
இன்று வாழும்
வாழ்க்கையில் விஞ்ஞான அறிவு கொண்டு, எத்தனையோ சாதனைகளைச் செய்கின்றனர்… எவ்வளவோ மாற்றங்களைச்
செய்துள்ளனர்.
விமானம்
பறப்பதற்கு ஜாதகமா பார்க்கின்றனர்…?
விஞ்ஞான
அறிவு கொண்டு மேகங்களின் அடர்த்தி அதிகமாக இருக்குமானால் விமானத்தை விடவேண்டாம் என்று உணர்கின்றனர். இப்படி விஞ்ஞான
அறிவு கொண்டு மனிதர் தம்மைக் காத்துக் கொள்கின்றனர்.
ஆனால் மெய் ஞானிகள் காண்பித்த அருள் வழியில் நாம் செயல்பட்டால் நம்முள்
பகைமை உணர்வுகள் வராது காக்கலாம்.
நாம் உடல்
அழுக்கைப் போக்கச் சோப்புப் போட்டுத் தேய்த்துக் குளிக்கின்றோம்.
இதே போன்று நமது ஆன்மாவில் அறியாது சேர்ந்த அழுக்கை நீக்க
வேண்டுமென்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின்
உணர்வை நம்முள் இணைக்க வேண்டும்.
துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை நம்முள் செலுத்தும் பொழுது நமது ஆன்மாவில் தீமைகள் சேராது தடுத்து… ஆன்மாவில் பட்ட அழுக்கை அது நீக்குகின்றது.
துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவ ஆன்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்.
எனது
வாழ்க்கையில் நான் யார் யாரையெல்லாம் பார்த்தேனோ அவர்களுடைய குடும்பமெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெற வேண்டும். அவர்களின்
குடும்பத்தில் அறியாது
சேர்ந்த இருள் நீங்க வேண்டும் என்ற இந்த உணர்வின் எண்ணங்களை நமது உடலில்
பதிவாக்குதல் வேண்டும்.
அதிகாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அருள் உணர்வினை நாம்
நுகர்தல் வேண்டும்.
இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை
நம்முள் இணைக்கும் பொழுது நம் உடலில் அறியாது சேர்ந்த தீய உணர்வின் அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது தடுக்கப்படுகின்றது.
இப்படித் தீமைகளை நம்முள் புகாது தடைப்படுத்தி விட்டால் அவைகளைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடும். நமது ஆன்மா சுத்தமாகிவிடும்.
ஆகவே
1.துருவ
மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றுடன்
பற்றுங்கள்.
2.உடலின் பற்றைப் பற்றற்றதாக்குங்கள்… அருள் ஞானத்தைப் பற்றுடன் பற்றுங்கள்.
3.பகைமையற்ற
வாழ்வு வாழ்ந்திடுங்கள்.
4.இருளான
உணர்வுகளை நீக்கி மெய்ப்பொருள் காணும் திறன் பெறுங்கள்… மெய் வாழ்க்கையாக வாழ்ந்திடுங்கள்.
இதன் வழி அருள் ஞானம் பெற வேண்டும் என்று ஏங்கி இருப்போர்
அனைவருக்கும் “எமது குரு அருளும் எமது அருளும்… என்றும் உறுதுணையாக இருக்கும்…”