ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 15, 2026

துன்பம் வரும் நேரத்தை… மெய் ஒளியை நமக்குள் கூட்டும் சந்தர்ப்பமாக நாம் மாற்ற வேண்டும்

துன்பம் வரும் நேரத்தை… மெய் ஒளியை நமக்குள் கூட்டும் சந்தர்ப்பமாக நாம் மாற்ற வேண்டும்

 

ஒவ்வொரு நிமிடமும் நமது குருநாதர் அருள் வழி கொண்டு அவரின் ஆற்றலின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று அருள் ஒளிகளினுடைய நிலைகளை நீங்கள் பெறுவதற்குச்  சந்தர்ப்பத்தை நிகழ்த்துகின்றோம்…
 
இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
1.சாதாராண வாழ்க்கையில் சொல்வது போல என்னத்த…? என்ற சோர்வை விடுத்து
2.உங்கள் நல்ல உணர்வுகள் அழிந்து விடாதபடி நாம் நிச்சயம் மகரிஷிகளின் அருள் ஒளியை பெறுவோம் என்றும்
3.மனித வாழ்க்கையில் சேர்த்த இருளை நீக்கி விட்டு நிச்சயம் ஒளி நிலை பெறுவோம்  என்ற ஏக்க உணர்வுடன் நீங்கள் செயல்படுங்கள்.
 
அவ்வாறு செயல்படும் பொழுது வாழ்க்கையில் எத்தகைய துன்பங்களைச் சந்தித்தாலும்
1.துன்பம் வரும் நேரங்களில்தான் மெய் ஒளியை நாம் கூட்டும் நல்ல சந்தர்ப்பமாக” ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
2..நமக்குள் வரக்கூடிய துன்பத்தை மறந்து… “நாம் மெய் ஞானியின் அருள் ஒளியைப் பெறுவோம்…!” ஏன்று எண்ணுங்கள்.
 
அந்த அருள் ஒளியாலே நம் சொல்லும் செயலும் நம் பேச்சும் மூச்சும் உலகத்தை ஒளியின் சுடராக்கச் செய்யும். ஒருவரை மகிழச் செய்யும் எண்ணங்களாக நம் பேச்சும் மூச்சும் இருக்கும்,
 
அந்த நிலைகளை நாம் பெறுவோம்.
 
எத்தகைய துன்பங்கள்எந்த நேரத்தில் வந்தாலும் நமது குருநாதர் அருள் ஒளி கொண்டு நாம் அருள் சக்திகளைப் பெறுவோம்…! என்று உறுதி கொள்வோம்.
 
அந்த உறுதியான நிலையைப் பெறுவதற்கு
1.எந்த மகரிஷிகள் அவர்கள் தை விளைய வைத்தார்களோ
2.அந்த உணர்வலைகளை சிலிகான்களாக…” உங்களுக்குள் பதியச் செய்கிறோம்.
 
இனி இதைக் கூட்டிப் பெருக்குவது உங்கள் கையில்தான் இருக்கின்றது. 
 
நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது. அதை யாம் பதிவு செய்கின்றோம். நீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற ஆசையில் யாமும் ஒளி நிலை பெறுகின்றோம்.
 
என் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பெறச் செய்யும்.  ஆகவே உலகம் நன்மை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அதை யாம் பரப்புகின்றோம்.
 
இதையே நீங்களும் எடுத்து உங்கள் உடலுக்குள்ளும் பெருக்கும் போது உங்கள் பேச்சும் மூச்சும் பிறரை அது நன்மை பெறச் செய்யும்.