ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 1, 2018

உடல் வலிமை பெறவேண்டும் என்றால் “பச்சைக் காய்கறிகளை.. உணவாக உட்கொள்ளுங்கள்...!” என்று டாக்டர்கள் சொல்வார்கள் – அதனின் உண்மை நிலைகளை அறிந்து கொள்ளுங்கள்...!

இப்பொழுது ஆடு மாடெல்லாம் பச்சையாகத் தான் மற்றவைகளைச் சாப்பிடுகின்றது. “வேகவைத்தா சாப்பிடுகிறது…? இல்லை”.

மிருகங்களெல்லாம் பச்சையாக உணவை உட்கொண்டு பழகியது. இயற்கையில் விளைந்த தாவரங்கள் விஷத்தின் ஈர்ப்பால் விளைகின்றது. அதிலுள்ள தொக்கியுள்ள விஷத்தைத் தனக்குள் பெருக்கி இதே சத்தைத் தனது உணவாக மாற்றி மிருகங்கள் வலு கொண்ட உடலாக மாற்றும்.

மற்ற உயிரினங்களைப் போன்று நாம் பச்சையாக உட்கொண்டால் இதன் உணர்வு கொண்டு உறுப்புகள் மாறி நம் உடலுக்குள் வலு கூடும். ஆனால் இந்த உடலில் “நீடித்த நாள்” நாம் இருக்கப் போவதில்லை.

இந்த உடலில் இருக்கும் வரை “சுகத்தை...!” வேண்டும் என்றால் தேடலாம். அடுத்து இதுவே எதிர் நிலையாகி இந்த உடலில் மாற்றமாகிவிடும்.

உடலில் இந்த அணுக்களின் பெருகமாகி நம் மனித உடலுக்கு எதிர் நிலையாகி அது அதிகரித்த பின் அதுவே நோயாக மாறி இந்த உடலை விட்டு உயிர் வெளியே சென்றுவிடும்.

இந்த உடலை விட்டுச் சென்றபின் என்ன ஆவோம்?

பின் நாம் எந்தெந்தக் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிட்டோமோ அதன் ஈர்ப்புக்கொப்ப இந்த உணர்வுகள் மாறி “அங்கே தான்” செல்வோம்.

இன்று மனிதனாக இருக்கின்றோம். அடுத்து வெளியிலே போனபின் அதன் ஈர்ப்புக்குள் சென்று அதற்குத்தக்க உறுப்புகளை மாற்றி பச்சைக் காய்கறிகளை உட்கொள்ளும் உடலை அமைத்துவிடும் இந்த உயிர்.

1.உணர்வுகள் எதுவோ அதற்குத்தக்க தான்
2.உயிர் அந்த உருவங்களை அமைக்கும்.
3.அந்த அணுவின் மலங்கள் தான் உடலின் நிலைகள்.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகளைக் காணும்போதெல்லாம் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதைச் சேர்த்து விஷத்தை வெல்ல வேண்டும். “விஷத்தை வென்றிடும் அணுக்களாக...” நமக்குள் பெருக்க வேண்டும்.

பரிணாம வளர்ச்சியில் விஷத்தைக் குறைத்து இன்று மனிதனாக வந்த நாம் விஷத்தை வென்றிடும் இதனின் கணக்குக் கூடக் கூட விஷத்தை ஒளியாக மாற்றிடும் வளர்ச்சி பெறுவோம்.

“ஒளியின் சுடராகப் பெற்றிடுவோம்”. மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திடலாம்.