ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 8, 2018

வேதனை தாங்க முடியவில்லை… “என்னைக் கொண்டு போய்ச் சீக்கிரம் சேர்த்துவிடு…!” என்று சொல்கிறோம் – எங்கே போவோம்…?

1.ஒரு செடியில் விளைந்த சத்தினை சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து
2.நமது பரமான பூமியில் பரமாத்மாவாக (உணர்வலைகளாக) மாற்றியுள்ளது.
3.அதே செடியின் வித்தை எடுத்து நிலத்தில் ஊன்றினால்
4.அந்த வித்து புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு
5.பரமான பூமியில் பரமாத்மாவாக மாறியுள்ள தன் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து நுகர்ந்து
6.அதே உணர்வு கொண்டு அதே செடியாக வளர்ந்து தன் இனத்தின் வித்தை உருவாக்குகின்றது.

இதே போன்று தான் நோய்வாய்ப்படும் ஒரு மனிதன் தன் மகன் மேல் பற்று வைத்து அந்த மகனும் தன் தந்தையின் மீது பற்று வைத்தால் அந்த வேதனையின் உணர்வுகள் மகனிடத்தில் விளைந்து அதிகமாகும்.

தந்தையின் உணர்வுகள் மகனிடத்தில் விளைந்தபின் தந்தையின் உயிரான்மா தன் உடலை விட்டு வெளியே சென்றபின் தனது மகனின் உடலுக்குள் வந்து விடுகின்றது.

இதன் தொடர் கொண்டு மகனுடைய உடலில் புகுந்து கொண்ட தந்தையின் உயிரான்மா மகனின் உடலில் வேதனையின் விஷத் தன்மையை அதிகமாக உருவாக்கி மகனின் நல்ல சிந்தனையை மாற்றி விடுகின்றது.

தந்தை தான் உயிரோடு வாழும் காலத்தில் தனக்குப் பின்னாடி தன் மகன் சொத்துகளைக் காப்பாற்றுவானா…! ஏமாற்றும் உலகத்தில் வாழ்கிறானே…! என்ன செய்யப்போகிறானோ…? என்ற குழப்பத்தின் உணர்வுகளை தன்னுள் வளர்த்துக் கொண்டிருப்பார்.

இந்த எண்ணத்துடன் செல்லும் அந்த ஆன்மா மகன் உடலுக்குள் சென்ற பின் அவனுக்குள்ளும் இதே குழப்ப உணர்வுகளைத் தூண்டி சொத்துக்களைக் காப்பாற்ற முடியாத நிலையினை மகனிடம் உருவாக்குகின்றது.

அதனால் மகனும் சிந்தனையை இழந்து சொத்துக்களை எல்லாம் இழந்து நோய்வாய்ப்பட்டுத் தன் உடலைக் காக்கும் திறனையும் இழந்து செயலாக்கங்கள் குன்றிய நிலையில் வாழ்கின்றான்.

பின் இதே உணர்வை வளர்த்து உடலை விட்டுப் பிரிந்து செல்லும் அவனின் உயிரான்மா பரமாத்மாவில் கலந்து ஐக்கியமாகி விடுகின்றது.

வயதானவர்களில் பலர் நோயால் வாடிக் கொண்டிருந்தாலோ அல்லது பல சிக்கல்களில் தவித்துக் கொண்டிருந்தாலோ வேதனை தாங்காதபடி
1.என்னைச் சீக்கிரம் கொண்டு போய் விடு
2.பரமாத்மாவில் ஐக்கியமாக்கி விடு என்று சொல்வோம்.

பரம் எனறால் ஒரு எல்லை – நமது பூமி. ஆக இந்தப் பரமான பூமியின் ஆத்மாவில் சேர்ந்து ஐக்கியமாகிவிடுகின்றோம்.

பரமாத்மாவில் ஐக்கியமான பின் நமது ஆன்மாவில் எதனின் உணர்வுகளை அதிகமாகச் சேர்த்திருந்தோமோ அதைப் போன்று இன்னொரு ஜீவ ஆன்மா (உடலுடன்) இருந்தால் அதனின் ஈர்ப்பிற்குள் சென்று விடுவோம்.

பின் அந்த உடலின் உணர்வைக் கவர்ந்து “அந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடல் பெறுகின்றோம்…!” என்பதை ஞானிகள் கொடுத்துள்ள நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஆகவே நமது இந்த மனித வாழ்க்கைக் காலத்திலேயே இந்த இயற்கையின் இயக்க உண்மைகளை அறிந்து கொள்தல் வேண்டும்.

இனம் இனத்தை வளர்க்கும் என்பது போல் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் விளைய வைத்து ஞானிகளுடன் ஐக்கியமாவோம்.
1.நம் பயணத்தின் பாதையை

2.அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்துவோம்…!