ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 3, 2018

குருநாதருக்கு “எல்லாமே தெரியும்...!” என்று சொல்வார்கள் – என்னுடைய விருப்பம் எது...!

சூரியனுடைய ஒளிக்கதிர்கள் பூமியில் படரப்படும் போது ஒரு செடியின் சத்தை அது கவர்ந்தால் எலக்ட்ரானிக்காக (உணர்வலையாக) மாற்றுகின்றது.

அந்தச் செடியின் சத்து எதுவோ அந்த மணத்தை நாம் நுகரப்படும் போது அந்த உணர்வின் உணர்ச்சியாக நம்மை இயக்குகின்றது.

 அதே போல தான் உணர்வின் தன்மை எடுக்கப்படும் போது அந்த உணர்வின் அழுத்தமாக “எலக்ட்ரானிக்…” ஒவ்வொரு பொருளின் நுண்ணிய நிலைகளில் மோதப்படும் போது அதன் இயக்கமாக இருக்கின்றது.

நம்முடைய “பெரு மூளை” நாம் சுவாசிக்கும் போது அதில் வரும் (வண்டல்களை) தீமைகளை மறைக்கின்றது. அது தடுக்கின்றது. சளியாக மாற்றுகின்றது. உட்புகப்படும் போது வடிகட்டி அனுப்புகின்றது.

காற்றில் வரக்கூடிய நிலைகள் வேறு. இது உணர்வின் அலைகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது காற்றலைகளாக மாறுகின்றது.

நாம் சுவாசித்தாலும் கண் புலன்களால் கவரும் உணர்வின் காந்தப்புலன் அறிவு அதைத் தனக்குள் எடுத்துப் பிரிக்கின்றது. பிரித்த உணர்வின் அணுக்கள் தனித் தன்மை வாய்ந்ததாகப் பரவுகின்றது.

மற்ற மனிதன் சொல்லும் உணர்வின் தன்மையைக் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் அறிவு கவர்ந்து அதை நமக்குள் எடுத்த பின் இது சுவாசித்து உயிரிலே படுகின்றது.

உயிரிலே பட்ட பின் சிறு மூளைக்குச் செல்கின்றது. நாம் காந்த ஊசி என்று சொல்லுகின்றமே
1.உயிருக்கும் அதற்கும் தொடர்பு கொண்ட நிலையில் மோதுகின்றது.
2.அந்த உணர்வுகளை ஒலி பெருக்கியாக மாற்றி (AMPLIFY)
3.உணர்வின் ரூபங்களை (படமாக) நமக்குள் காட்டுகின்றது.
4.அதன் அறிவாக மாற்றுகின்றது.

எலக்ட்ரிக் என்ற காந்தப்புலன் கொண்டு கவரப்பட்டாலும் அந்த உணர்வின் தன்மை லேசர் என்ற நிலைகளில் உயிர் இயக்கிக் காட்டுகின்றது.

கிராமபோன் பெட்டிகளில் முன்னர் காந்த ஊசிகளை இணைத்தார்கள். இதே போல் ரேடியோக்களிலோ டி.வி.யிலோ இந்தக் காந்த ஊசிகள் உண்டு. (அந்த ஊசி போன்றல்ல)

எலக்ட்ரானிக்காக லேசர் (LASER) என்ற உயர் அழுத்தத்தைக் காட்டி எந்த உணர்வையும் இழுத்து அந்த ஒலி/ஒளி அலைகளைப் பரப்பும் நிலைகளையும் கவரும் நிலைகளையும் இயக்கும் நிலைகளையும் விஞ்ஞானிகள் கண்டுள்ளார்கள்.

நான் (ஞானகுரு) அதையெல்லாம் படிக்கவில்லை. விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கின்றேன். இதையெல்லாம் புத்தகத்தில் படிக்கவில்லை.

விஞ்ஞானிகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்…? என்று குருநாதர் அதைக் காட்டுகின்றார். அந்த வெளிப்பட்ட உணர்வின் எண்ண அலைகள் இங்கு பதிவு உண்டு. அதைப் பார்க்கலாம்.

தீமைகள் செய்வோர் உணர்வுகள் இங்கே நிறைய உண்டு. உங்களைப் பார்த்தவுடனே “இன்னென்ன தவறு செய்கிறீர்கள்… செய்தீர்கள்…!” என்று நான் சொல்லலாம்.

எனக்கு அது தலை வலியா…?

ஒருவர் செய்யும் தவறுகளைக் கூர்மையாகக் கவனித்தோம் என்றால் நம் உயிர் அதை எலக்ட்ரானிக்காக மாற்றி நமக்குள் பதிவாக்கி விடும்.

மற்றவர்களுடைய கெட்டதையெல்லாம்
1.அடிக்கடி நான் பார்த்து நுகர்ந்து அறிந்து கொண்டே இருந்தேன் என்றால்
2.அயோக்கியன் நம்பர் ஒன்றாகப் போய்விடுவேன்.

அதற்குப் பதிலாக கெட்டதையும் தவறுகளையும் அகற்றச் செய்யும்
1.அருள் ஞானிகளின் உணர்வை எனக்குள் திரும்பத் திரும்பப் பதிவாக்கி
2.அந்த அருள் உணர்வுகளை எனக்குள் வளர்த்துக் கொண்டால்
3.கெட்டதை நீக்கும் ஆற்றலாக  எனக்குள் வளரும்.

குருநாதர் எனக்குக் காட்டியது அது தான்…!

சில பேர் நினைக்கலாம்…. சாமி ஏன் எங்கள் கஷ்டங்களை எல்லாம் தெரிந்து கொள்ளக்கூடாது..! தெரிந்து எங்கள் கஷ்டத்தை நீக்க உதவி செய்யலாம் அல்லவா…!

என்று. இவருக்குத் தெரிகின்ற கஷ்டத்தை எல்லாம் என்னிடம் கேட்டால் நான் பதிவாக்கி இருந்தால் ஒவ்வொருத்தர் கஷ்டத்தையும் கேட்டால் என்னிடம் என்னென்ன கஷ்டம் எல்லாம் பதிவாகும்?

எல்லாம் சாமிக்கே தெரியும். சில பேர் சொல்வார்கள்.

சில சாமியாடிகள்... ஜோசியர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் நாம் சென்றால்
1.உங்களைப் பற்றி எல்லா விபரமும் தெரியும்
2.எதற்காக வந்திருக்கின்றீர்கள் என்றும் எனக்குத் தெரியும்
3.உங்கள் கஷ்டம் எல்லாம் எனக்குத் தெரியும் என்பார்கள்.

அப்பொழுது அவர்கள் பெரிய மகானாகி விடுவார்கள். அந்த மகான் கடைசியில் என்ன ஆவார்...!

மற்றவர்கள் கஷ்டத்தையெல்லாம் நுகர்ந்து அறிந்து கொண்டார்கள் அல்லவா...! அவர்கள் உடலில் அந்த விஷம் அதிகரித்துக் கடைசியில் பாம்பின் உடலிலும் விஷ ஜெந்துக்களின் உடலாகவும் பூத கணமாகவும் தான் ஆக முடியும்

நான் அப்படி மகான் ஆகவில்லை. உங்கள் கஷ்டங்களை எல்லாம் அறிந்து சொல்லி அடேயப்பா...! முக்காலமும் அறிந்த பெரிய முனிவர் என்று போற்றப்படும் நிலைகள் எனக்குத் தேவையில்லை.

அப்படிப்பட்ட போற்றுதலுக்குச் சென்றால் கடைசியில் தூற்றலுக்குத்தான் வருமே தவிர அதில் பலன் ஏதும் இல்லை. அதை நான் விரும்பவில்லை.

1.தீமைகள் அகற்றும் சக்தி நீங்கள் பெற வேண்டும்.
2.நீங்கள் அனைவரும் உயர்ந்த ஞானிகளாக வளர வேண்டும்.
3.அதைக் கண்டு நான் ஆனந்தப்பட வேண்டும் என்று தான் நான் விரும்புகின்றேன்.