ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 4, 2018

நாரத முனி... நாரதனை “முனி” என்று ஏன் சொன்னார்கள் – விளக்கம்

நாம் சிறுநீரை டெஸ்ட் செய்யும் பொழுது நாம் ஒரு திரவத்தை ஊற்றியவுடன் அதற்குத்தக்கவாறு அதனுடைய உணர்வுகள் எவ்வாறு பிரித்துக் காட்டுகின்றது. அதனுடைய சத்துக்களைப் பிரித்து இன்று விஞ்ஞான அறிவு கொண்டு பார்க்கின்றோம்.

இதைப் போன்றுதான் அந்த மெய் ஞானிகளிடம் இருந்து வெளிப்படுவதை மனிதன் சுவாசத்தில் ஈர்க்கப்பட்டால் மனிதனுக்குள் அந்த மெய்யை உணரக்கூடிய  ஆற்றல்கள் நமக்குள் வளர்கின்றது.

அந்த நாரதர் என்ற அலையைச் சுவாசிப்பதற்குத்தான் இன்று நாம் செய்யும் இந்தத் தியானத்தின் பலன். நாரதன் கலகப்பிரியன். அந்தக் கலகமோ நன்மையில் முடியும்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய அந்த மெய் ஒளியின் தன்மையை நாம் இந்தத் தியானத்தால் சுவாசித்து அந்த உணர்வின் ஆற்றலை நம் உடலுக்குள் செலுத்திவிட்டால் மெய் ஞானிகள் எவ்வழிகளில் சென்றார்களோ அந்த வழிகளில் செல்ல முடியும்.

அந்தச் சக்தி பெற்றபின் பேரண்டத்தின் பேருண்மையை நமக்குள் உளமாற வளர்த்துக் கொள்ளும் ஆற்றலும் வருகின்றது.

இருளான பல பொருள்களைச் சேர்த்து ஒரு விளக்கை எரித்து மற்ற பொருள்களைக் காண்கின்றோம். மற்ற பொருள்களைச் சேர்த்து ஒன்றை உருவாக்கச் செய்கின்றோம்

அதைப் போல் நம் உணர்வுகளை ஒளியாக்கி நாம் எண்ணும் நிலைகளைச் சிருஷ்டிக்கும் தன்மையை நாம் ஒவ்வொருவரும் செய்ய முடியும்.

ஒருவன் நமக்குத் துன்பம் செய்தான் என்றால் இப்படிச் செய்தான் என்று நாம் ஆத்திரப்படுகின்றோம். “இரு நான் பார்க்கிறேன்...என்றும்உன்னை அழித்துவிடுவேன்என்று பயமுறுத்தி இருந்தால் அவனை நினைக்கும் பொழுதெல்லாம்திடுக்திடுக்…” என்று நமக்குள் பயத்தை ஊட்டிக் கொண்டிருக்கும்.

அந்தப் பய உணர்வினை நாம் சுவாசிக்கும் பொழுது செயலிழக்கச் செய்யும் நிலையாகப் பல நிலைகள் வருகின்றது. ஏனென்றால் அவன் பதித்த நிலைகள் நமக்குள் அவ்வாறு வேலை செய்கின்றது.

 நம்மையறியாமல் இருளில் மூழ்கடித்துக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து நம்மை மீட்டுத் தர இந்த நாரதர் என்ற இந்த அணு நமக்கு வழிகாட்டும்.

ரிஷியின் மகன் நாரதன்... அவன் ஒரு முனிவன்…!” ஒளியிலிருந்து வந்ததுதான் அந்த அணு நாரதன். அந்த உணர்வின் செயலாக்கம்தான் நாரதன்.

1.அந்த நாரதனின் உணர்வின் தன்மை நமக்குள் வந்தவுடன்
2.அதன் ஆணைப்படி அது நமக்குள் நல்லதை வழி காட்டி
3.வந்த இருளை மாய்க்கும் தன்மையாக – “முனி என்ற நிலையாக”
4.அன்று தெளிவாகக் காட்டி உணர்த்தியிருக்கிறார்கள்.

ஆகையினாலே அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெற்று “விடாப்பிடியாக வரும்” இருளினை நீக்கி என்றுமே அருள் வழியில் வாழ்வோம்.