ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 10, 2018

வில்வம் தழையும் அதிகாலையில் எண்ணி எடுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியும் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

பெண்களுக்கு அதிகமான அளவில் வளர்க்கும் சக்தி உண்டு.

அதிகாலை 4 – 6 மணிக்குள் ஒரு பாலை வைத்து அல்லது தண்ணீரை வைத்து அல்லது இரண்டு வில்வம் தழையாவது எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

யாருக்காவது நோய் இருந்தது என்றால் அந்த வில்வம் தழையைத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்துக் கொடுங்கள்.

பல நோய்களையும் போக்க இது உதவும்.

ஏனென்றால் உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் கூடும் பொழுது உங்கள் உணர்வின் ஆற்றல் நோய்களைப் போக்கும்.

சக்தி உங்களுக்கு அதிகமாகக் கொடுக்கின்றோம். நீங்கள் எடுத்துப் பாருங்கள்.