ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 12, 2018

தீமையை நீக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவதற்கு “விதி…” என்று எதுவும் இல்லை – யாராக இருந்தாலும் அதைப் பெறமுடியும்...!

அன்றைய அரசனின் பேராசையால் வந்ததும் இன்றைய விஞ்ஞான அறிவால் வந்ததும் மெய் ஞானிகள் காட்டிய மெய் உணர்வுகளைத் துண்டு துண்டாக ஆக்கி
1.கண்ணை ஒருவனும்
2.உயிரை ஒருவனும்
3.உடலை ஒருவனும்
4.காந்தத்தை ஒருவனும்
5.மணத்தை ஒருவனும் இவ்வாறு தனது கடவுளாக மாற்றிக் கொண்டு
6.உண்மையின் தன்மையை தனக்குள் பிரித்து
7.யார் கடவுள்..? யார் தெய்வம்...? என்ற நிலைகளை நாம் அறிய முடியாது
8.தேடிக்கொண்டே இருக்கும் வழியில் மதங்களைக் காட்டிவிட்டு
9.மனித இனத்தையே அழித்து கொண்டிருக்கும் தீவிரவாதம் ஆகி  
10.எதுவும் மிஞ்சாத நிலைக்கு இன்றைய உலகம் வந்துவிட்டது.

ஒரு குரங்குக் கதையைச் சொல்வார்கள்…!

அந்தக் குரங்குக் கதையில் ஒரு அப்பம் அதிகமாகிப் போயிவிட்டதால் அதை யாருக்குக் கொடுப்பது என்ற நிலையில் சமாதானம் ஆகவில்லை. அப்பொழுது இன்னொரு குரங்கு அங்கே வந்து எடுத்து…எடுத்து எடுத்து…எடுத்து அதைச் சாப்பிட
1.அப்பம் இதிலே குறைய…
2.அதிலே தூக்கத் தூக்க.. அதிலே குறைய இதிலே தூக்க,…
3.கடைசியில் ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது…!
4.சமப்படுத்த முடியாமலே போய்விட்டது

மதங்கள் என்ற நிலை வரும் பொழுது மனிதனை மனிதன் அழித்துக் கொள்ளும் நிலை வரும் பொழுது எது ஓங்குகின்றதோ அது மற்றதை அழிக்கின்றது.

மதத்திற்குள் இனங்கள் பல பெருகி இனத்தின் தன்மை கொண்டு இன்று ஒன்றுக்கொன்று  
1.மனித இனத்தையே கூண்டோடு அழிக்கும் உணர்வுகள்
2.மனிதனுக்குள் விளைந்து விளைந்து… வெளிப்படுத்தப்பட்ட அத்தகைய உணர்வுகள்
3.சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இன்று இந்தக் காற்று மண்டலமே
4.நஞ்சு கொண்ட “சாக்கடையாக” மாறிவிட்டது.

அதே சமயத்தில் இந்தச் சாக்கடைக்குள் பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மெய் ஞானிகளின்  
1.தீமைகளை நீக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய
2.அரும் பெரும் சக்திகளும் இங்கே நமக்கு முன் மறைந்திருக்கின்றது.

மறைந்த அந்த அருள் ஞானியின் உணர்வைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து நுகர்ந்து இந்தச் சாக்கடையான உலகில் இந்தச் சாக்கடையான வாழ்க்கையைப் பிளந்து உயிருடன் ஒன்றி என்றும் நிலையாக வாழும் அழியா ஒளியின் சரீரத்தை நாம் அனைவரும் பெறமுடியும்.

இதற்கென்ற “விதி…” எதுவும் இல்லை….!

இளம் பிள்ளை என்றோ… முதுமையானவர்கள் என்றோ… அறிந்தவன் என்றோ… அறியாதவன் என்றோ… எதுவும் இல்லை…!

ஏனென்றால் அறியாதவன் அறிய முற்படுகிறான். அறியாத நிலைகள் இருக்கும் பொழுது தான் நாம் அறிய முற்படுகின்றோம்.

அறிந்திடும் ஞானத்தைக் கொண்டு மெய் ஞானத்தை அறியும் பக்குவத்தை உங்களுக்குள் கூட்டிக் கொள்ளும் சந்தர்ப்பத்தை இப்பொழுது ஏற்படுத்துகின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியின் துணை கொண்டு வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வுகளை உங்களில் விளைய வைக்க முடியும்.

உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.