
துருவ நட்சத்திரத்தின் சக்தியை அபரிதமாக எடுக்கும் போது கொட்டாவி வருவது ஏன்…?
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நமக்குள் வலு
சேர்த்துத் தீமைகளை மாற்றி நமது
ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.
ஈஸ்வரா என்று உயிரான ஈசனை எண்ணிப் புருவ மத்தியில் அந்தத்
துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே நிலை நிறுத்துகின்றோம்.
1.அப்பொழுது என்ன நடக்கிறது…?
2.பிற உணர்வுகள் உள்ளே புகாது
அங்கே தடுத்து நிறுத்தப்படுகின்றது.
அங்கே நிறுத்திய பின்பு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று உயர்ந்த உணர்வுகளை ரத்தம் முழுவதும்
பரவச் செய்கின்றோம்.
அப்போது உடலில் உள்ள மற்ற அணுக்களுக்கு உணவு
கிடைக்கவில்லை என்கிற பொழுது
1.அது எல்லாம்
வருத்தத்தில் இருக்கும்.
2.துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தி உள்ளே
சென்ற பின் சிலருக்குக் கொட்டாவியாக
வெளியே வரும்…
3.அதைக் கரைத்து ஆவியாக மாற்றும்.
தியானமிருக்கும் பொழுது
கொட்டாவியாக வருகின்றது… எங்களால் உட்கார முடியவில்லை நிற்க
முடியவில்லை என்று சொல்வீர்கள்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்த பின்பு உடலிலிருக்கும் அந்த விஷமான உணர்வுகள் காலியாகி வெளியேறும். அய்யய்யோ… தியானத்தில் எனக்குக்
கொட்டாவி வருகின்றது என்று நீங்கள் சொல்வீர்கள்.
காரணம் அது கரைத்து வெளியே கொண்டு
செல்கின்றது. துருவ நட்சத்திரத்தின் சக்தி இரத்தத்தில் கலந்த
பின் கெட்ட அணுக்களுக்கு வேண்டிய ஆகாரம் கிடைப்பதில்லை.
1.அப்பொழுது வீரியமாக இருக்கும்… விஷத்தன்மையாக இருந்தால் வலு ஜாஸ்தியாக இருக்கும்.
2.ஆனால் விஷத்தன்மைக்குண்டான சக்தி கிடைக்கவில்லை என்றால் அது சோர்வடையும்.
3.அப்பொழுது வேகமாகப் பேசிக் கோபமாகப் பேசுபவருடன் இணைந்தால் தணியும்.
மற்றவர்களுடன் பார்த்துப் பார்த்துப் பேசி மற்ற உணர்வுகளை
எடுத்திருந்தாலும் தியானம் எடுத்த பின் அது குறையும். அதற்குச்
சாப்பாடு இல்லை என்கிற பொழுது மயக்கமடைகிறது.
ஆனால் அதே சமயத்தில்
1.உங்கள் உடலில் ஊழ்வினை என்ற வித்துக்களுக்குள்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து விடுகின்றோம்.
அக்ரிகல்ச்சரில் வித்துக்களில் விஷ பூச்சிகள் தாக்காதபடி அந்த வித்துக்களை ஊறவைத்து அதற்குண்டான
நிலைகளை இணைக்கப்படும் பொழுது அந்தச் செடிகளில் விஷப் பூச்சிகள் தாக்காது. அதிலே
பூச்சிகள் வருவதில்லை…!
ஆனால் வரவில்லை என்றாலும் கூட வளர்ந்து வரும் பொழுது பூச்சிகள்
இதைச் சாப்பிடுவதில்லை ஆனாலும்
அதிலே முட்டை இடுகின்றது. முட்டையிட்டால் என்ன
செய்யும்…?
விஷத்தன்மை அந்த முட்டைக்குள் வளர்ந்து விடும். அது வெடித்து வெளிவந்த பின் மீண்டும் அந்தச்
செடிகளையே உணவாக உட்கொள்ளும்.
இதையெல்லாம் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.