ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 10, 2018

மகரிஷிகளின் நேரடி “அலைத் தொடர்பில்…! (LIVE) உள்ள ஒரு அன்பரின் அனுபவம் – “பேரானந்தப் பெரு நிலை”


மகரிஷிகளோடு நம்மைப் பந்தப்படுத்தி வாழப் பெரும் பாக்கியம் வேண்டும். அதற்குக் கொடுப்பினை வேண்டும்.

மகரிஷிகளின் அலைத் தொடர்பில் வாழ ஆரம்பித்தால் என்ன கிடைக்கும்…?

1.முதலில் இது “வியாபாரம்” அல்ல.
2.நம் மனித அறிவு கொண்டு யோசித்து முடிவெடுப்பதைக் காட்டிலும் , “மிக நேர்த்தியாக…!” யோசிக்க முடிகிறது.
3.உயிருடன் ஒன்றிய வாழ்க்கை கிடைக்கிறது.
4.நம் உயிருக்கு உண்மையாக நேர்மையாக வாழும் பாக்கியம் கிடைக்கிறது.
5.தவறைத் திருத்தி… திருந்தி…! “மிக நெருக்கமாக…! தன்னம்பிக்கையுடன் வாழும் வாழ்க்கை கிடைக்கும்.
6.எண்ணத்திலே “முழுமையான மாற்றம்…!” கிடைக்கும்.
7.பிரார்த்தனை என்ற “மிகப் பெரிய ஆயுதம்” கிடைக்கும்.
8.நம் குழந்தைகள் குறித்துக் கவலைப்படுவதைத் தவிர்த்து… அவர்களை “மகரிஷிகளின் அன்போடு” இணைக்கிறோம்.

இதைவிட… ஒரு பந்தமும் பாதுகாப்பும் இருக்க முடியுமா..?

1.நம் மீதே நமக்கு “மரியாதை..” பிறக்கும்.
2.நாம் மிக உயர்ந்த குணமுடையவர்… மகரிஷிகளுக்கு மிக மிகப் பிரியமானவர் என்ற “அளப்பரிய ஆனந்தம்…!” கிடைக்கும்.

இந்த வாழ்க்கையில் இதை விடவா... நாம் எதிர்பார்க்கிறோம்…!


மிக்க நன்றி