ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 21, 2018

அருள் மகரிஷிகளின் பேரருளால் உறவுகள்..... பலப்படுமா...? – ஒரு அன்பரின் அனுபவம்

மகரிஷிகளிடம்….. என் நினைவுகள் உணர்வுகள் எல்லாவற்றையும் கொடுத்து விட்டதால்.. There is no attachments… I am feeling free from heavy feelings. No regrets. No complaints.

நன்றி உணர்வே மேலோங்கி நிற்கிறது… உடல் சுறுசுறுப்பாக உள்ளது. மகிழ்வாக உள்ளது.

எனக்குக் கிடைத்த பெரும் மகிழ்வை என் தாய் என் தந்தையின் உயிரான்மா என் உடன் பிறந்த சகோதரர்கள் பெற வேண்டும் என்ற ஆவல் மேலோங்குகிறது.

என்னை ஈன்ற தாயுடன் சகஜமாகப் பேசி 15 வருடங்கள் ஆகி இருக்கும். இந்தச் சூழ்நிலையில் வழக்கமான பக்தியில் மூழ்கி சாங்கியம் சடங்கு சம்பிரதாயங்கள் என இருக்கும் தாய்க்கு மகரிஷிகளை அறிமுகப்படுத்தினேன்.

நான் பெற்ற அருளுக்கு நீங்கள் தான் காரணம் என்று என் தாயிடம் சொன்னேன்.

என் அன்னையின் மனம் அன்பிலும் நம்பிக்கையி்லும் நிறைந்தது. அன்னையின் ஆசிகளைப் பெற்றேன். “மனம் நிறைந்தது…!

என் தாயிடம் மேலும் கூறினேன்..,
1.உங்களிடம் உள்ள நற்குணங்களுக்கு “உங்கள் தாய் தான் காரணம்…!”
2.அவர்களை நன்றியோடு வணங்குங்கள்…!
3.அந்த உயிராத்மாக்கள் பிறவா நிலை ஒளி நிலை பெறப் பிரார்த்தியுங்கள் என்று….!

என்ன அதிசயம்…! இது வரை அவர்கள் நினைத்திராத ஒரு விஷயம் இது. பொன் தரவில்லை, பொருள் தரவில்லை என்ற எண்ணம் தான் கொண்டிருந்தார்கள்.

நம்மிடம் உள்ள நல்ல குணங்களுக்கு அவருடைய தாய் காரணம் என்று (this concept is very new to her)  உணர்ந்து மகிழ்ந்தார்.

நாங்கள் மட்டும் பலன் பெறவில்லை எங்களைச் சேர்ந்தோர் அனைவரும் பலன் பெறுவது.... கண்கூடு…!

அத்தனை ஆனந்தமும்… பெருமையையும்.. நன்றியையும்... மகரிஷிகளின் பேரருளுக்குச் சமர்ப்பிக்கிறேன்...!

உறவுகள் பலப்படும்…. மகரிஷிகளின் அருள் நமக்குள் நிரம்பினால்...!


குறிப்பு:--
ஒரு செடி வளர வேண்டும் என்றால் தாய்ச் செடியின் சத்து இருந்தால் தான் செழிக்க முடியும். இல்லை என்றால் வாடத்தான் செய்யும். அல்லது வளர்ந்தாலும் முழுமை இருக்காது.

மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தங்கு தடையின்றி நாம் பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக தாயிடம் அருளாசிகளைப் பெற வேண்டும். (உடலுடன் இருந்தாலும் இல்லை என்றாலும்)

நம்மை உருவாக்கிய அந்தத் தெய்வங்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாம் தாய் தந்தையர் பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம். 

அகஸ்தியரின் அருள் வட்டத்தில் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று பிரார்த்திப்போம்.