ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 5, 2017

உபதேச வாயிலாக எம்முள் (ஞானகுரு) இருந்து வரும் ஒலியே இந்தச் சொல்லே “குருவின் சொல்”

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் பதிய வைத்த அந்த உணர்வின் ஆற்றலை அவர் காட்டி உணர்த்திய உணர்வின்படி அந்த அருள் வழிப்படி எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.

1.அவர் (உணர்த்திய) உணர்வின் ஆற்றல் கொண்டு
2.அவர் அருள் துணை கொண்டு
3.அவர் ஒளி கண்ட உணர்வின் தன்மையை
4.நான் மீண்டும் நினைவு கொள்ளும் போது
5,எனக்குள் இருளைப் போக்கி
6.பொருள் காணும் உணர்வின் ஒளியின் சிகரமாக
7.எம்முள் இருந்து வரும் இந்த (உபதேச) ஒலியின் சொல்லே
8.என் குருவின் சொல்.

ஆகவே அவரில் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவு செய்யும் போது அதே உணர்வு
1.உங்களுக்குள் குருவாக நின்று
2.உங்களை அறியாத இருளைப் போக்கி
3.மெய்ப்பொருள் காணும் உணர்வாக
4.உங்களுக்குள் ஒளி நிலை பெறும்