ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 10, 2017

பெனிசிலின் மருந்தை விஞ்ஞானிகள் தயாரித்த விதம் – சிலருக்கு அதனால் பாதகமாகின்றது ஏன்?

விவசாயப் பண்ணைகளிலும் ஆராய்ச்சிக் கூடங்களிலும் மனிதன் தன் ஆறாவது அறிவு கொண்டு
1.புதுப் புதுச் செடிகளை உருவாக்குகிறான்.
2.புதுப் புது மிருகங்களை உருவாக்குகின்றான்.
3.புதுப் புது உயிரினங்களை உருவாக்குகின்றான்.

பெனிசிலின் இஞ்செக்சன்க்காக (injection) காளானை உருவாக்குகிறான். அந்தக் காளானுக்குள்  பல  உயிரணுக்களைச் செலுத்துகின்றான்.

அந்தக் காளானில் உரு பெறும் உயிரணுக்களை அது சேர்த்துக் கொண்ட பின்
1.அந்தக் குறிப்பிட்ட நாள் வந்த பின்
2.அது அனைத்தையும் கொன்று விடுகின்றான்.
3.அதிலே உண்டான (கொசு போன்ற) உயிரணுக்களிலிருந்த இரசத்தை வடிகட்டி எடுக்கின்றான்.
4.பின் அந்த இரசத்தைத் தான் இஞ்செக்சனாக மாற்றுகின்றான்.

விஞ்ஞான அடிப்படையில் இப்படிச் செய்தாலும் பெனிசிலின் ஊசி சிலருக்கு மிகக் கடுமையான நிலைகளை உண்டாக்குகின்றது. மற்றவர்களுக்கு உடலில் நோயை நீக்கி நன்றாகவும் ஆக்குகின்றது.

ஒரு  துளி  அந்த  அணுக்களில் இவன் எடுத்துக் கொண்ட நிலைகள் இஞ்செக்சன் எடுக்கும் போதே
1.அதில் கொஞ்சம் காற்று புகுந்து விட்டால்
2.அதிலே இந்த அணுக்கள் உருவாகி விடும்
3.அது பட்டு விட்டு மருந்தைச் செலுத்தினால் எதிர்மறை (reaction) ஆகி விடுகிறது.

இதைப் போல பல நிலைகள்.

இவன் எதைக் கண்டு பிடித்தானோ அதை உருவாக்கினாலும் கூட ஊசிக்குள் அந்த மருந்தைப் (powder) போட்டுக் கலக்கி அதைச் செலுத்தினாலும் எடுக்கும் நிமிடத்திற்குள் இந்த உடலுக்குள் செலுத்துவதற்கு முன் மாற்றமாகிவிட்டால் ஆளை மரணம் அடையச் செய்துவிடும்.


ஏனென்றால் அந்தக் காளானில் அதில் பட்ட மணம் எந்த அணுக்களின் தன்மை உருவானதோ
1.அந்த தசைகளைக் கொன்று,
2.அதில் உருவான இரசத்தை எடுத்துத்தான்
3.பெனிசிலின் தயார் படுத்துகின்றான்.

பெனிசிலினிலிருந்து எடுத்து உடலில் போடும் போது இந்த உடலுக்கும் அவன் போடக் கூடிய நிலைகளுக்கும் எதிர் பார்க்காத நிலை வந்து விட்டால் கொன்ற உயிரணுக்களை மீண்டும் உடலில் உருவாக்கத் தொடங்கி விடும்.

அதாவது மருந்தைத் தயார் செய்யும் பொழுது எந்த அணுக்களைக் கொன்றானோ
2.நோயாளிக்குப் பெனிசிலினை injection பண்ணும் போது
3.அந்த அணுக்களின் இரசத்திற்கு பதில்
4.அதிலே உருவான அணுக்கள் இங்கே உருவாகி உடல் முழுவதும் பரவி
5.நோயை நீக்குவதற்குப் பதில் அந்த மனிதனைக் கொன்றே விடுகிறது.

அந்த மாதிரி அணுக்கள் உருவானவர்களுக்கு அருகிலே மற்றவர்கள் யார் இருந்தாலும் அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தோருக்கும் பரவி அவர்கள் உடலிலும் இந்தத் தீமையை உருவாக்கும் அணுக்கள் உருவாகி விடுகின்றது.

பெனிசிலின் ஊசி மிகவும் உயர்ந்த தடுப்பு மருந்து தான்.

தடுப்பு மருந்தாக உடலுக்குப் போட்டாலும் தடுக்கும் ஆற்றலாகச் செயல்படுத்தி வியாதியின் தன்மையை மாற்றக்கூடிய வல்லமை பெற்றது.
1.ஒரு நொடி மாறி விட்டால்
2.ஒரு சிலருக்கு எத்தனையோ வேலைகளைச் செய்கிறது.

விஞ்ஞான அறிவால் இந்த ஆறாவது அறிவு கொண்டு தான் செயல் படுத்துகின்றான். ஆறாவது அறிவால் இதைப் போல பல எத்தனையோ நிலைகளைச் செயல் படுத்துகின்றார்கள்.

இதைப் போன்று தான் எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அந்தத் தீமைகள் நமக்குள் விளையாது மகரிஷிகளின் அருள் சக்தியை அவ்வப்போது இணைத்துக் கொண்டே வந்தால் தீமைகளை அடக்கும் நிலை வரும்.

1.எத்தனை தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும்
2.உங்கள் உடல் பாதிக்காதபடி
3.உங்களுடைய நினைவாற்றல் அந்த சப்தரிஷி மண்டலத்திலே இணைந்துவிடும்.

மகரிஷிகளின் அருள் உணர்வைப் பற்றுடன் பற்றும் வலுவைப் பெற்று விடுகின்றோம். இந்த உடலை விட்டுச் சென்று விட்டால் யாருடைய துணையும் வேண்டியதில்லை.

நேராக நம்மைச் சப்தரிஷி மண்டலத்திற்கே கொண்டு போய் நிறுத்தும்.