ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 10, 2017

மலைப் பகுதிகளில் உள்ள காட்டுவாசிகளின் செயல்களையும் மந்திரத்தால் புதையல் எடுப்பதாகக் கூறி பலி கொடுப்போரின் செயல்களையும் குருநாதர் காட்டினார் - நடந்த நிகழ்ச்சி

மனிதனுக்கு மனிதன் கொன்று சாப்பிடும் உணர்வுகள் இந்தியப் பகுதியில் சில பகுதிகளில் உண்டு. மலைப் பகுதிகளில் அஸ்ஸாம் பகுதிகளில் எல்லாம் இந்த மாதிரிக் காட்டுவாசிகள் உண்டு.

அவர்கள் வாழும் இடங்களில் வேண்டாத மனிதர்கள் வந்து விட்டால் “தன் ரகசியத்தைத் தெரிந்து விடுவார்கள்…” என்று அந்தப் புலையர்கள் சில நிலைகளைச் செய்வார்கள்.

பல ஆவிகளைத் தனக்குள் கூட்டப்பட்டு அதை வைத்து ஏவல் செய்து வந்தவர்களை மதி மயங்கச் செய்து சிந்தனையை இழக்கச் செய்து பின் திசை மாற்றிச் செல்வதும் உண்டு.

சில மலைப் பகுதிகளுக்குப் போனால் நாம் அவர்களுடைய பார்வையில் பட்டால் இத்தகைய நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

சில தீவுகளில் எடுத்துக் கொண்டாலும் அந்தத் தீவிலுள்ள மக்கள் இன்றும் நாகரீகத்தை அறியாதபடி பல பச்சிலை தாவர இனங்களைத் தனக்குள் எடுத்துப் “பல மாயா ஜால வேலைகள்” செய்வதும் உண்டு.

அங்கு மனிதன் வருகிறான் என்றால் அந்தத் தாவர இனங்களை எடுத்து மீண்டும் அந்த உராயும் (தேய்த்து) தன்மை வரப்படும் போது அவன் சூட்சம நிலை அடைகின்றான்.

ஒரு மனிதனுக்குள் இருக்கும் உணர்வை எடுத்து மீண்டும் அந்த உணர்வின் தன்மை கொண்டு மயங்கச் செய்து தாவர இனத்தாலே அவனை மடியச் செய்வார்கள்.

மடியும் பருவம் வந்தால் மடியும் பருவத்தில் வருபவனுக்கு இந்த உணர்வை அங்கே ஊட்டி அவன் இறந்த பின் அங்கே இழுத்து வரும்படிச் செய்கிறது.

ஆனால் இவன் உடலுக்குள் சென்ற பின் மிக வலிமை கொண்ட நிலைகளைப் பெறுகின்றார்கள். எவரையும் தாக்கும் உணர்வு வருகின்றது. ராட்சச நிலைகள் போன்று ஆகிவிடுகின்றார்கள்.

மனிதனுக்குள் உருபெற்ற உணர்வுகள் மனித உடலுக்குள் சென்ற பின் எவ்வாறு உருப்பெறுகிறது என்ற நிலையும் மனிதன் என்று எந்தெந்த நிலைகளில் செயல்படுகிறார்கள் என்ற நிலையும் குருநாதர் பூமியில் பல பாகங்களுக்கு அழைத்துச் சென்று காட்டுகின்றார்.

சில நாடுகளில் இன்றைக்கும் எடுத்துக் கொண்டால் வருடத்திற்கு ஒரு தரம் பெண்களை அலங்கரித்து அந்த நாட்டைக் காக்கும் தேவதை என்ற நிலைகள் கொண்டு அதற்குப் பலி கொடுப்பார்கள்.

அவர்களுக்கு வேண்டிய உணவுப் பதார்த்தங்களைக் கொடுத்து “நீ… ஆண்டவனின் பிள்ளை தான்…!” என்று நிலை கொண்டு அங்கே மலை உச்சிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அந்தப் பெண்ணைத் தள்ளி விட்டுவிடுவார்கள்.

இவ்வாறு ஆண்டவனுக்கு உணவாகக் கொடுத்தால் “நம் நாட்டைக் காப்பான்..” என்ற நிலைகளில் நாகரீகம் வளர்ந்த பின்னும் சில மேலை நாடுகளில் இன்றும் நடக்கின்றது.

சீனா போன்ற நாடுகளில் தேவதைக்கு நரபலி கொடுத்தால் தன்னைக் காப்பான் என்ற நிலை வருகின்றது. இதைப்போல நம் நாட்டிலும் தன் குழந்தையைப் பலியிடும் தன்மை வருகின்றது.

நடந்த நிகழ்ச்சி இது. பத்திரிக்கையில் கூட நீங்கள் படித்திருக்கலாம். கல்கத்தாவில் வேலை செய்து வருகிறார். அவருக்கு 55 வயது இருக்கும். குலதெய்வங்களை வணங்குகிறோம் என்று வந்திருக்கின்றார்.

இவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருவருக்கொருவர் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு பலியின் உணர்வு கொண்டு செயல்பட்டதனால் இறந்த ஆன்மா அந்த வீட்டு மருமகள் உடலில் புகுந்துவிட்டது.

அவர்கள் குல வழியிலே வந்த அண்ணன் தம்பிகள் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் பாகம் பிரிப்பது வித்தியாசமாகி விட்டால் இந்தப் பழி தீர்க்கும் உணர்வுகள் வந்த பின் அவர்கள் பல உயிர்களைப் பலியிடுகின்றார்கள்.  

அதை உணவாகவும் உட்கொள்கின்றனர்.

இதைப்போல இவர்கள் குலதெய்வத்தை வணங்கப்படும் போதும் முதலில் கோழி ஆடு என்ற நிலையில் ஒவ்வொன்றாக வரிசையாகப் பலி கொடுக்கின்றனர்.

அப்பொழுது குலதெய்வம் வந்து அருளாடுகின்றது.

“இது எனக்கு நிறைவேறவில்லை… ஆகையினால் உன்னுடைய குழந்தையின் நாக்கு எனக்குத் தேவை…! என்று சொன்னவுடன் அந்த நாக்கை அறுக்கச் செல்கிறார்கள்.

“இதெல்லாம் வேண்டாம்…” என்ற நிலைகள் கொண்டு இதற்காக வளர்ந்து வரும் குழந்தையையே பலி கொடுக்கின்றேன். அருளாடுகிற குழந்தையையே பலி கொடுக்கிறேன் என்று வரம் கொடுத்தபின் பலி கொடுப்பதற்காகச் சென்றுள்ளார்.

அப்பொழுது அங்கே என்ன நடந்தது?

அடுத்து குழந்தையைப் பலி கொடுப்பதற்குப் பதில் “என்னையே ஏற்றுக் கொள்…!” என்று அங்கு சொன்னபின் அவருடைய மனைவியும் மகன்களும் கை கால்களைப் பிடித்துக் கொண்டு அந்தத் தலையைத் துண்டித்து விடுகின்றனர்.

அருள் ஆடிய அந்த மருமகளே தன் மாமனின் அந்தத் தலையைத் தூக்கிப் பிடித்து அந்த இரத்தத்தையே உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கின்றது.

அனைவரும் நிர்வாணமாக இருந்து “இது தான் குலதெய்வம்… இவ்வாறு் செய்கிறது…! என்று இன்று செய்கின்றார்கள். இன்றைக்கு வட மாகாணங்களில் அனைத்தும் இத்தகைய நிலைகள் உண்டு.

பலியிட்ட பின் இந்த ஆவியின் தன்மைகள் இருண்ட நிலைகள் கொண்டு அந்த வீட்டிற்குள்ளேயே இருக்கின்றார்கள்.

ஆனால் அந்த ஊரில் உள்ள மக்கள் குலதெய்வம் கொண்டாடுகிறார் என்றால் இதைப் போல நிகழ்ச்சிகள் அதாவது இவர்கள் பலிகள் கொடுக்கும் போது நரபலி கொடுப்பார்கள் என்ற நிலைகளில் எல்லோருக்கும் தெரிகிறது.

இன்று வேறெங்கும் போக வேண்டாம். நம் தமிழ் நாட்டிலும் நடக்கின்றது.

திருப்பூரில் ரணகாளி என்ற நிலைகள் இருக்கப்படப்போகும் போது அங்கு அருளாடி விட்டால் எதிர்த்தாற் போல புதைத்திருக்கும் சுடுகாட்டில் ஓடிச் சென்று தோண்டி எடுத்து அந்தத் தலையை வைத்துப் பூஜை செய்வதும் உண்டு.

இது எல்லாம் என்ன என்றால்
1.மனித உடலுக்குள் எடுத்து கொண்ட உணர்வுகள்
2.மடிந்த பின் ஒரு உடலுக்குள் வந்த பின்
3.இத்தகைய நிலைகள் செயல்படுகின்றது.

எல்லாம் மனிதனால் வளர்க்கப்பட்டது.

மனித உணர்வுகள் அற்ற பின் மனிதனாகச் சாந்த குணம் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நிலைகளும் அசுர குணம் கொண்டு தாக்கும் நிலையும் மனிதன் இரக்கமற்றுக் கொல்லும் உணர்வுகளும் இப்படி
1.மனித உடலுக்குள் எதைச் சேர்த்துக் கொண்டதோ
2.ஒரு உடலுக்குள் சென்ற பின் இந்த நிலையைச் செய்கின்றது.

வட இந்தியாவில் குருநாதர் சொன்ன முறைப்படி நான் செல்லப்படும் போது நாசிக் என்ற ஊரைக் கடந்து ஒரு கிராமத்திற்குச் சென்றேன்.

அங்கே என்ன நடந்தது என்றால் ஒரு மந்திரவாதி புதையல் எடுத்துத் தருகிறேன் என்று சொல்லி இருக்கின்றார். அதற்கு இன்னென்ன நரபலி கொடுக்க வேண்டும் என்று சொல்லிப் பெண் குழந்தைகள் இத்தனை வயதிற்குள் வேண்டும் என்று சொல்கிறான்.

புதையல் எடுக்க விரும்புபவர்கள் என்ன செய்கிறார்கள்?

புதையல் வேண்டும் என்று பலியிடுவதற்காக அங்கே அவர்களுடன் பழகிய பெண்களை மந்திரவாதி கொடுக்கும் மருந்தைக் கொடுத்துத் தனித்தனியாக அங்கே அழைத்து வந்து இரவிலே பலி கொடுத்துக் குழி தோண்டி வைத்திருப்பதிலே புதைத்து விடுகிறார்கள்.

ஒரே நாளில் ஏழு பெண்களைப் புதைத்து உள்ளார்கள். எட்டாவது பெண்ணைக் கொண்டு வரும் பொழுது தான் நான் அங்கே போனேன்.

அழைத்துச் செல்லுகின்றார்கள் “நீ போடா…” என்று குருநாதர் காட்டுகின்றார்.

ஒன்பது பெண்களைப் பலியிடுவதற்காக முயற்சிக்கின்றார்கள். கன்னிப் பெண்களைத்தான் பலி கொடுத்திருக்கிறார்கள். எட்டாவது பெண்ணைக் கொண்டு வரும் போது நான் அந்தப் பெண்ணிற்கு நினைவு வரும்படிச் செய்தேன்.

உடனே அது சுய நினைவுக்கு வந்தது. கத்த ஆரம்பிக்கின்றது.

“ஐய்யய்யோ...! என்னை இங்கே கொல்கிறார்கள்…. கொல்கிறார்கள்….” என்று சொன்ன பின்னர் ஊர் ஜனங்கள் எல்லாம் கூடிவிட்டனர்.

ஜனங்கள் எல்லாம் தேடி வருகின்றார்கள். நான் சிறு தாடி வைத்திருந்தவுடனே அங்கே என்னைப் பார்த்தவுடன் என்னை உதைக்க வேண்டும் என்று வருகிறார்கள்.

நடந்த நிகழ்ச்சி.

அப்போதுதான் நான் சொன்னேன், இங்கே தவறு செய்வோருடைய உண்மைகளை நான் தான் உணர்த்தினேன்.. “அந்த மந்திரவாதி உள்ளுக்குள் இருக்கிறான் போய்ப் பாருங்கள்…!” ஏழு பிணங்களும் உள்ளுக்குள் இருக்கிறது. என்று சொன்னேன்.

ஏனென்றால் முதலில் இந்தப் பெண்கள் தான் கொண்டு போனார்கள் என்று மற்றவருக்குத் தெரியும்.

ஆனால் மந்திரத்தைச் செய்து மந்திரவாதி இழுத்துப் போயிருக்கிறான் என்று சொன்னவுடன் நான் அங்கே இருந்ததால் எதிரில் என்னைக் கண்டவுடன் என்னை உதைக்க வருகிறார்கள்.

பின் அங்கே கையைக் காட்டி உண்மை நிலை எப்படி இருக்கின்றதென்று பாருங்கள் என்று கூறும் போது அந்த மந்திரவாதி சிக்கிக்கொண்டான். தப்பிக்க முடியவில்லை.

புதையல் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் செயல்பட்ட அந்தக் குடும்பத்தில் உள்ளோர் அனைவரையும் கைது செய்தார்கள்.

1972ல் நீங்கள் பத்திரிக்கையில் பார்த்திருப்பீர்கள். நான் அப்போது வட இந்தியாவில் இருக்கின்றேன்.

ஆசைக்கு அடிமைப்பட்டு மந்திரத்தைச் சொல்லி மயக்கப்படுத்தி மனிதனை மடியச் செய்யும்போது மடியும் தருணத்தில் அவர்கள் உடல்களிலே எந்த எண்ணங்கள் இருந்ததோ இந்த உடலை விட்டுச் செல்லப்படும் போது பயத்தால் தான் தப்பிக்கும் நிலை கொண்டு இன்னொரு உடலுக்குள் செல்கிறது.

1.அந்த உடலுக்குள் சென்ற பின் உண்மையைச் சொல்வதும்
2.அல்லது இதே உணர்வுகள் அங்கே இயக்கப்பட்டு அதே செயல்களைச் செயல்படுத்தும் நிலை வருகின்றது என்பதனைத்
3.தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

இவ்வளவு விஞ்ஞான உலகில் இருந்தாலும் நரபலிகள் இடுவதை நாம் பார்க்கின்றோம். தமிழ் நாட்டிலும் உண்டு. வட இந்தியாவிலும் உண்டு.

நாம் எந்தத் தெய்வத்தை வணங்கி மனிதனாகின்றோமோ மனிதனான பின் தன்னை அறியாமலே இத்தகைய ஆசையின் உணர்வுகள் நம் நல்ல குணங்களை மறைத்துவிடுகின்றது. இது தான் சித்திரை என்பது.

திரை மறைத்து விட்டால் நாம் என்ன செய்கின்றோம்?
1.நம்மை அறியாமலே நல்ல குணங்களை நமக்குள் கொல்லுகின்றோம்.
2.இரக்கமற்று மற்றவர்களைக் கொல்லும் உணர்வுகள் வருகின்றது. 
3.விஷம் பட்டால் மனிதன் சிந்தனைகளை இழக்க செய்கின்றது.

இதைப் போலத்தான் நுகர்ந்த உணர்வுகள் மனிதன் சிந்தனையை எப்படிச் சீர் குலையச் செய்கின்றது என்ற நிலையை அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.

காட்டுப் பகுதியில் செல்லப்படும் போது இப்படிப்பட்ட ராட்சஸ உணர்வுகள் கொண்ட நிலைகள் உண்டு.

சில காட்டுப் பகுதியில் இதைப் போல பலியிடப்பட்ட உணர்வின் இடங்களுக்கு இரவு 12மணிக்கு மனிதன் சென்றால்
1.பலியான உணர்வலைகள் மனிதனுக்குள் ஈர்ப்புக்குள் வந்து
2.இதே உணர்ச்சிகளைத் தூண்டும் நிலைகளும் பல உண்டு.

அங்கு பலியிடப்பட்ட போது வெளிப்பட்ட அந்த உணர்வுகள் தாவர இனங்களில் படப்பட்டு அந்த தாவரத்தின் நினைவு ரூபமாகவும் சில நிலைகள் வருகின்றது என்பதனைத் தெளிவாகக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

இன்றைய உலகில் தீமைகள் எந்தெந்த வகையில் நடக்கின்றது என்பதை குருநாதர் எமக்குக் காட்டினார். அதை நீங்களும் அறிந்து கொள்ளும் நிலைக்கே இதைச் சொல்கிறோம்.

“ஓ..ம் ஈஸ்வரா…” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை வலுவாக்கிக் கொண்டால் அந்தப் பேரருள் உணர்வுகள் நமக்குப் பாதுகாப்புக் கவசமாக அமையும்.