ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 12, 2017

இன்று இருக்கும் ஏட்டுக் கல்வியால் மெய்பொருளை அறிய முடியாதபடி எல்லாவற்றையும் வியாக்யானப்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டது

“முதலில்” அம்மா அப்பா சொத்து கொடுத்தார்கள் நன்றாக இருக்கிறோம் என்போம். அதன்பின் ஏதாவது சொன்னால் எவ்வளவு ஏசுகிறோம்…! எத்தனை பேசுகிறோம்? எப்படா தொலைந்து போகும்…, என்று எண்ணுவோம்.

செத்தபின் நல்ல ஆடம்பரமாகச் செய்வோம். ஊர் புகழுக்காக வேண்டி எல்லாத்தையும் செய்வோம். அம்மா அப்பாவை மட்டும் உதைப்போம், திட்டுவோம்… எனக்கு என்ன சொத்து வைத்திருக்கின்றாய்…? என்று கேட்போம்.

இதைத் தான் நாம் பேசக் கற்றுக் கொண்டுள்ளோம். ஏனென்றால் நாமும் அப்படி நமக்கு முன்பும் அப்படித்தான்.

நம்மையறியாமலேயே எல்லாம் தெய்வம் செய்யும்! சாமி செய்யும்! சாமியார் செய்யும்! ஜோசியம் செய்யும்! யாகம் செய்யும்! இயந்திரம் செய்யும்! மந்திரம் செய்யும்! என்ற எண்ணத்திலே செய்கிறோம்.

ஏதாவது குறை வந்துவிட்டால் இப்படித்தான் செய்கின்றோமே தவிர
1.நம் உயிரைக் கடவுளாக மதித்து
2.நாம் எண்ணிய உணர்வுகளை ஆற்றல் மிக்க உணர்வின் சக்தியாக வளர்த்து
3,நம் சொல்லுக்குள் அந்தத் தெய்வச் செயலாக வர வேண்டும் என்று 
4.மெய்ஞானிகள் காட்டிய நிலையை யாரும் பின்பற்றவில்லை.

அந்த மெய்ஞானிகள் காட்டிய அருள்வழிப்படி மெய்ஞானிகள் உணர்த்திய ஆற்றல்கள் காற்றிலே உண்டு. நீங்கள் சுவாசித்து எடுக்க முடியும் என்று ஞானியர்கள் காட்டியிருந்தாலும் காலத்தால் அவை அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டது.

மறைந்தாலும் இன்று நினைவுபடுத்தி எடுக்கச் சொன்னால் “எங்களுக்கு நேரமில்லை” என்று சொல்கிறீர்கள், இதுதான் இன்று நாம் சொல்லும் “நேரம்”.

ஏனென்றால் விஞ்ஞான அறிவின் நிலைகள் கொண்டு துரித நிலைகளுக்கு கொண்டுவரப்படும்போது, யாராவது அதிகமாகச் சொன்னால்
1.“விஞ்ஞானத்தில் எல்லாம் சொல்லியிருக்கிறார்கள்என்கிறார்கள் சிலர்.
2.ஏட்டிலே படித்துக் கொள்வோம்.
2.அதை மனதிலே இருத்திக் கொள்வோம்.
3.எண்ணங்களைச் சிதற விடுவோம்.
4.மெய்ப்பொருளை நாம் அறிய மாட்டோம்.
5.ஆனால் அதை வியாக்யானப்படுத்துவோம். 
6.உட்பொருளை நினைவில் கொண்டு சுவாசிக்கும் நிலையை இழந்துவிடுவோம். 
7.இவைகள் தான் இன்றைய பாடநிலைகளின் தன்மைகள்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மீட்டுக் கொள்வதற்கு உங்களை நீங்கள் நம்புங்கள். உங்கள் உயிரை ஈசனாகக் கருதுங்கள். நீங்கள் எண்ணும் உணர்வுகள் அனைத்தையுமே பிரம்மமாக சிருஷ்டித்துவிடுகின்றது, உங்கள் உயிர்.

இதைப் படிப்போர் அனைவரும் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று இந்த பிறவியில் பிறவியில்லா நிலை என்னும் "அழியா ஒளிச் சரீரம்" பெறவேண்டும் என்ற ஆசையில் தான் இதை வெளிப்படுத்துகின்றோம்.

1.தாய் தந்தை மூதாதையர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்தினால்
2.அந்த உயிராத்மா விண்ணிலே இருக்கும்போது
3.நம் உடல் இங்கிருந்தாலும் நம் மேலே இருக்கக்கூடிய இந்தப் பாசம்
4.விண்ணின் ஆற்றல்களை நாம் பெறமுடியும்.


நாம் இப்போதிருந்தே செய்து கொண்டால்தான் நாம் உடலை விட்டுச் சென்றபின் தாயின் ஈர்ப்பின் அணைப்பிலே ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்திலே போய்ச் சேருவோம்.