ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 11, 2017

அரசைத் துறந்து மக்களை மகிழச் செய்து அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கித் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றவர் அத்திரி மாமகரிஷி

அத்தி மரத்தின் நிழலிலே அத்திப் பழங்கள் எப்படித் தன் தண்டுகளில் உருப்பெறுகின்றதோ அந்த உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
1.ஒவ்வொரு அணுவிற்குள்ளும் அது தோன்றும் உணர்வின் நிலைகள் கொண்டு
2.ஒவ்வொன்றிலும் உருப்பெறச் செய்ய முடியும் என்று தன் உணர்வின் தன்மை கொண்டு
3.அரசனாக இருந்தவன் அத்திரி.

நாட்டின் நிலையில் தனது குடும்பத்தில் தன் மக்கள் தன்னுடைய அரசுக்குள் போர் முறைகள் கொண்டு தனக்கு இந்தச் சொத்து வேண்டும், அந்தச் சொத்து வேண்டும் என்றும் அரசுக்குள் போர் முறைகள் கொண்டு, இந்த அரசனையே (அத்திரியை) திருப்பித் தாக்கும் நிலை வருகின்றது.

ஆற்றல் மிக்க மெய் நிலைகளை உணர்ந்து அரச சபையைக் கூட்டி அதன் வழிகளிலே அரசை நடத்தி அந்தப் பேரண்டத்தின் பேருண்மையின் நிலைகளைப் பெறமுடியும் என்று இருந்தாலும் அதை அவனால் பெற முடியவில்லை.

இதைப் போன்று மனித வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் வாழவேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தாலும் நாம் அரசனைப் போல, வீட்டிற்குள்ளும் அரசாட்சி புரிகின்றோம்.

பண வசதி கொண்டு வீட்டிற்குள் அரசாட்சி செய்தாலும் நாம் ஒரு “அரசனாகவே” இருக்க விரும்புகின்றோம்.

ஓரளவிற்குப் பொருள் இருந்தாலும்
1.தன்னை மதிக்கவில்லை என்றால் 
2.“இரு… நான் பார்க்கின்றேன்என்ற எண்ணம் தான் வருகின்றது. 

ஒரு பேரரசனாக இருந்தாலும் அந்த நிலைகள்தான் வருகின்றது.

அதே சமயம் ஒருவர் உதவி செய்கிறார் என்று எண்ணினால் அந்த உதவியின் தன்மையை நாம் பெற்றுவிட்டபின் அவர் செய்யக்கூடிய தவறுக்கெல்லாம் நாம் உடந்தையாக ஆகவேண்டும்.

அப்படி ஆகவில்லை என்றால் “நான் இவனுக்கெல்லாம் உதவி செய்தேன்.., ஆனால் என்னை எதிர்க்கிறான் பார்” என்கிற நிலைகளில் அவன் செய்யும் தவறுக்கு உறுதுணையாக வேண்டும்.

1.இப்படித்தான் நாம் ஒவ்வொரு உண்மையினுடைய நிலைகளிலும்
2.நம்மை அழித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
3.ஒவ்வொருவருடைய மனிதனுடைய வாழ்க்கையிலும் இதே உணர்வுதான்.

இவ்வாறு ஒருவருக்கொருவர் நம்மை அறியாமலேயே ஞானிகளுக்கு முன்னாடி மெய்யையே அழிக்கும் உணர்வுகள் வந்து கொண்டேதான் இருக்கின்றது.

இதைப் போன்று தான் மக்களின் நிலைகளில் எல்லை கடந்த நிலைகளாகி அவர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையும் மழை நீர் பெய்யாத நிலையும் அது தவித்துக் கொண்டிருக்கக் கூடிய நிலைகளில்தான் அரச நிலையே வேண்டியதில்லை என்று அத்திரி உணர்கின்றான்.

பின் ஒவ்வொரு உயிரின் தன்மையில் அவர்கள் எடுத்துக் கொண்ட நல்ல எண்ணமும் அந்த நல்ல எண்ணத்தை நாம் பெற்றால் அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு மெய் உணர்வின் நிலைகளை நமக்குள் வளர்த்து ஒளிநிலை பெற முடியும் என்று பேருண்மையை அறிந்து உணர்ந்தவர்தான் அத்திரி மாமகரிஷி.

அவரது அரசாட்சி காலங்களில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்டுணர்ந்து இதையெல்லாம் வெறுத்து இனி ஒவ்வொரு மக்களின்
1.நல் எண்ணங்களை நாம் பெற்றால் தான்
2.நாம் விண் செல்ல முடியும் என்ற நிலைக்கு வந்தார்.

அரச நிலையைத் துறந்து காடு வனம் என்ற நிலைகளில் திரிந்து, ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் பெற்றார். அத்திரி (மாமகரிஷி) அரசனாக வாழ்ந்தார். பின் உணர்ந்தார். பின் தன் நிலைகளை அறிந்தார்.

ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்று மக்கள் மத்தியிலே ஊடுருவி வந்து  ஒவ்வொரு மக்களையும் மகிழச் செய்து
1.அந்த மகிழ்ச்சியான எண்ணத்தைத் தான் சுவாசித்து
2.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி 
3.தன் உயிராத்மாவின் நிலைகளை ஒளியாக மாற்றிச் சென்றவர் அத்திரி மாமகரிஷி.
4.இன்றும் சப்தரிஷி மண்டலத்தின் அங்கமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

ஆகவே மெய் என்றும் அழிவதில்லை. அதன் ஒளியின் சுடர் கொண்டு என்றும் பொங்கிக் கொண்டேதான் இருக்கும்.

மெய்யுணர்வின் தன்மையால் மெய்யைக் காக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டு இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். மெய் ஒளியை அனைவரும் பெறுவோம்.


அத்திரி மாமகரிஷிகளின் அருளைப் பெற்று நம் பேச்சால் மூச்சால் மக்கள் அனவரையும் மகிழச் செய்வோம்.