ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 9, 2017

ஒன்றுமறியாத பச்சிளம் குழந்தைகளுக்கும் ஏன் கொடுமையான நோய்கள் வருகின்றது?

“சந்தர்ப்பவசத்தால்” தாய் தந்தையர்கள் வேதனைப்பட்டுக் கடுமையாக ஏசிப் பேசுவதைக் குழந்தைகள் கூர்ந்து கவனித்தால் அந்த உணர்வுகள் அவர்களுக்குள் ஆழமாகப் பதிந்துவிடுகின்றது.

பதிந்த உணர்வுகள் இரத்தத்திலே கலந்து அணுக்களாக விளைந்து அந்த உணர்வுகள் பின்பு வேகமாகி சில குழந்தைகளுக்கு ரத்தக் கேன்சர் வருவதைப் பார்க்கலாம்.

அதே சமயத்தில் கருவாகி குழந்தை கருவுக்குள் வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது இதே போன்று வேதனைப்படும் சொற்களைக் கேட்டு உணர்வின் தன்மை வேகமாக வளர்த்துக் கொண்டால், குழந்தைக்குள் நஞ்சாக விளைகின்றது.

அந்தக் குழந்தை பிறந்த பிற்பாடும் வேதனையின் நிலைகள் குழந்தையின் உடலில் உருவாகி அது அடிக்கடி அழுவதும் கடைசியில் இளம்பருவம் வரும் பொழுது ரத்தக் கேன்சராகி விடுகின்றது.

இதைப் போன்று நமது வாழ்க்கையின் நிலைகள் நாம் எதை எண்ணினோமோ விஷம் எதிலே பட்டாலும் அதனில் செயலாக்குவது போல் மனிதருடைய வாழ்க்கையில் இத்தகைய நிலைகள் வளர்ந்து அறியாத குழந்தைகளின் உடலிலும் விளைந்து விடுகின்றது.

இந்த உணர்வுகள் ஊழ்வினையாகப் பதிவு செய்யப்பட்டு அது சிறுகச் சிறுக விளைந்து காலத்தால் இந்த வினைகள் கேன்சரை உருவாக்கும்.

எரிச்சலான பேச்சுக்களைக் குழந்தைப் பருவத்தில் பேசியிருந்தால், அல்லது கருவுக்குள் இருக்கும் பொழுதே இத்தகைய உணர்வுகளால் தாக்கப்பட்டு இருந்தால் அது உடலில் பதிந்து கொண்டு
1.சில குழந்தைகளுக்கு நீர் வடியும்.
2.ஒரு பக்கம் புன்னகை வந்து கொண்டிருக்கும்.
3.இதற்கு எந்த மருந்து கொடுத்தாலும் குணமாவதில்லை,

ஆனால் இது கிரந்தி அல்ல. “தாய் எடுத்துக் கொண்ட உணர்வுகள்” கருவிற்குள் ஏற்பட்ட உணர்வுகள் ஒன்றுடன் ஒன்றுபடும் பொழுது உணர்வின் தன்மை உடலைக் கரைக்கின்றது.

தாயின் கருவிற்குள் எடுத்துக் கொண்ட உணர்வு விளைந்து விளைந்த கருவின் தன்மையோடு குழந்தை பிறக்கின்றது.

குழந்தையின் உடலில் பதிந்த உணர்வின் நிலைகளை அந்த வீட்டில் உள்ளவர்கள் பின்பற்றும் பொழுது குழந்தைக்குத் தோல் வியாதியாக மாறுகின்றது.

எண்ணத்தால் நஞ்சு கொண்ட நிலைகள் தொடர்ந்தால், அந்த அணுவின் தன்மை விளைந்து பின் வரும் நாள்களில் குன்ம நோயாக விளைகின்றது.

தாய் கருவுற்றிருக்கும் வீட்டில் தொடர்ந்து கொடூரமான நிலைகளில் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அதை அந்தத் தாய் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தால் நிச்சயம் பிறக்கும் குழந்தை “அங்கஹீனமாகவோ.., மூளை வளர்ச்சி குன்றியோ.., அல்லது குறைப்பிரசவமோ” ஆகும்.

இதைப் போன்ற நிலைகள்
1.நாம் தவறு செய்யாமலேயே நமக்குள் தீங்கு விளைவிக்கும் தன்மையாகி,
2.மனித உணர்வுக்குள் விளைந்த சிந்தித்துச் செயலாற்றும் திறன் பெற்ற
3.ஆறாவது அறிவை மழுங்கச் செய்து
4.ஐந்து அறிவு கொண்ட மிருக நிலைக்கு நம்மை மாற்றுகின்றது.

இதிலிருந்து எல்லோரும் மீளவேண்டும் என்பதற்குத்தான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இட்ட கட்டளைப்படி அனைவருக்கும்
1.அவர்களுக்குள் அறியாது சேர்ந்த ஆறாவது அறிவுக்குள் பட்ட நஞ்சினை நீக்கி,
2.மெய் உணர்வைக் காட்டிடும் உணர்வின் அலைகளாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் விளையவேண்டும் என்று

3.யாம் சதா தவமிருந்து கொண்டிருக்கின்றோம்.