ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 22, 2017

நம் அவசர உணர்வால் வரும் தீமைகளிலிருந்து விடுபடும் மார்க்கம்

 
அழுக்குத் தண்ணீரிலே நன்னீரை ஊற்றும் பொழுது முதலில் கலங்கலாக இருக்கும். நன்னீர் அதிகமானபின் கலக்கத்தின் தன்மை சிறிது தெளியும்.

இதைப் போன்று உங்களுக்குள் எத்தனையோ உணர்வுகள் உங்கள் வாழ்க்கையில் அழுக்கு உணர்வாக இருப்பின் அழுக்கு நீரில் அருள்ஞான நீரை விடும்பொழுது உங்களுக்குள் மனம் தெளியும் நிலைகள் வருகின்றது.

அதனால்தான் நேரத்தைக் கொஞ்சம் அதிகமாக எடுத்துக் கொள்கின்றோம்.  துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பின் தன்மையை ஒவ்வொரு அணுக்களிலும் உங்களுக்குள் இணையச் செய்து கொண்டிருக்கின்றோம்.

1.“உங்கள் நினைவாற்றலை” ஒவ்வொரு உணர்வுகளும் நமக்குள் எப்படி இயங்குகின்றது? என்றும்
2.அந்த நினைவுடன் அருள் ஞானியின் உணர்வைக் கலந்து
3.உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உணர்வும் பெற இணைக்கின்றேன்.

உங்களுடைய அழுத்தத்தின் நிலைகளை (எண்ண உணர்வுகளை) அளவுகோலாக வைத்து
1.ஒவ்வொரு உணர்வுகளிலும்.
2.வாழ்க்கையில் எதிர்நிலை வருகின்றதென்றால் காலத்தை அளக்கும்.
3.இதற்கு என்ன செய்யவேண்டும்? என்ற சிந்தனை வரும்
4.பருவம் வரும் பொழுது சொல்லுவோம் என்று விலகிச் செல்லும்.
5.காலத்தை விரயமாக்காது.

நாம் உயர்ந்த தத்துவத்தை வைத்திருக்கிறோமென்று அவசரமாகப் போகிறவரிடம் சொன்னால்… “சரி…சரி…” என்பார்கள். ஏற்றுக் கொள்ளும் தன்மை, இல்லாது போய்விடும்.

இதுவெல்லாம் உங்களுக்குள் அனுபவரீதியில் கொடுப்பதற்காகத் தான் யாம் எதை எடுத்தோம்…? எப்படிச் செய்தோம்…? எதனுடைய உணர்வுகள்…? என்று காட்டியது.

நீங்கள் பிறருக்கு உபதேசிக்கும் பொழுது, எவ்வழியில் சொல்லுதல் வேண்டும்? இந்த உபதேசங்களைக் கேட்ட நீங்கள் ஒவ்வொரு கால நேரத்தையும் யாம் உபதேசித்த வழியில், பயன்படுத்துதல் வேண்டும்.

ஒரு கம்ப்யூட்டரில் அழுத்தத்தின் தன்மை கொண்டு எலக்ட்ரானிக்கை அழுத்தியபின அந்த உணர்வுகள் கால நேரம் வரும் பொழுது அழுத்தத்தின் உணர்வுகள் தீமையைத் தள்ளி விட்டுச் செயல்படுகின்றது.

இதைப் போன்றுதான் உங்கள் அழுத்தத்தின் உணர்வுகள் ஏற்புடையதாக வரும்பொழுது இதனுடைய அழுத்தம், தீமையை நீக்குகின்றது. நல்லவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தீமையை நீக்குகின்றது.

ஆகவே உபதேசத்தைக் கேட்கக்கூடிய நேரங்களில் வரும்போது கால மணியை அந்த அழுத்தத்தை நமக்குள் பதிவு செய்து கொண்டு அதனை நமக்குள் ஏற்புடையதாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற உணர்வைப் பதிவாக்கிக் கொண்டு உட்கார்ந்தால் நினைவு வேறு எங்கும் போகாது,

இந்த உணர்வு அருள்ஞான உணர்வின் அழுத்தமாகும்.

சீர்புடையதும் சீர்பற்றதும் இந்த உணர்வுகளைத் தனக்குள் மாற்றி ஒவ்வொன்றும் சொல்லும் பொழுது இதற்குள் மாற்றியமைத்து நமக்குள் பக்குவப்படும் நிலைகள் வரும். 

அந்தப் பக்குவ நிலை ஏற்படுத்துவதே குருவின் தன்மை.