ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 31, 2023

"கர்ம தியாகம்"

மனிதனின் நெற்றியும்... நெற்றிப்பொட்டில் அறுகோணக் கருவறை குணங்களும்... சிருஷ்டியையே... சிருஷ்டியைப் பிணைத்திடும் செயலும் காட்டப்பட வேண்டும்.
1.இந்த நிலை உணர்ந்து கொண்டால்
2.இவைகள் குவிப்பு "அகஸ்திய போக இடும்ப சூட்சம இரகசியங்கள்...!"

"மகரிஷிகளின் சர்வோதய சக்தி" வலுக்கூட்டும் கூட்டு தியானத்தின் போது கார்மேக வான் எழுந்த ஓசையுடன் விண் நீர் பெய்திடும் சூழலில்... தியானத்தின் ஈர்ப்பலையாக மின் நுண் காந்த சக்தி எனும் பதிவு படுத்திட்ட நிலை நிறைவின் போது... உபதேச உரையாக உரைத்திட்டதன் செயலில் "கர்ம தியாகம்" என்ற சூட்சமம் உள்ளது.

சூரியனை எண்ணி ஈர்த்திடும்... "ஓர் ஜெப மந்திரம் - கர்ண முறை வழி" என்று இரகசியப்படுத்தப்பட்டு உலகினுக்கு உரைத்திடாத் தன்மையாக வந்தது தான்.
1.ஆசான் சிஷ்யனுக்கு வெளியில் நீ இதை உரைத்திட்டால் உரைப்பவன் நரகம் எய்துவான்
2.ஆனால் இந்த வேத மந்திரம் கேட்பவன் சொர்க்கம் பெறுவான்.

இருந்தாலும் "இதை வெளியில் உரைத்திடாதே...!" என மொழிந்தார் ஆசான் தன் சிஷ்யனிடம்.

ஆனால் அப்பொழுது மௌனமாக அமர்ந்திருந்த அந்த சீடன் காலைப் பொழுதில் உயர்ந்த ஓர் மதில் மீது நின்று அனைவரையும் அழைத்தான்
1.எல்லோரும் நன்நிலை பெற்றிட வாருங்கள் என்று
2.அவன் ஆசானிடம் பெற்றுக் கொண்ட சூட்சும மந்திரத்தை "உலகறிய உரைத்தான்..."

ஆசான் கனன்று எழுந்து... அடா... என்ன காரியம் செய்தாய்...! இரகசியப்படுத்தப்பட்ட நிலையை உரைத்தாயே... ஏன்...? என்று கேட்கின்றார்.

சீடனோ... "கேட்டவர் அனைவரும் சொர்க்கம் புகுவர்" என உரைத்த ஆசானே...!
1.இதோ இத்தனை ஆத்மாக்களும் கடைத்தேறட்டும்...
2.நான் ஒருவன் மட்டும் கேட்பதில் "ஸ்ரீமன் நாராயணன் பதம் பெறுவேன்..." என்ற எண்ணத்தை
3.இதோ...! இங்கே குழுமி இருக்கும் சிரத்தை மிக்க ஆத்ம ஜீவன் ஒவ்வொருவரிலும் நான் அந்தப் பரந்தாமனையே காண்கின்றேன்.
4.இந்தக் "கர்ம தியாகம்" உள்ளன்புடன் உவந்த எனக்கு "என் நிலை செய்வதாகிலும் ஆகுக...! என்றே உரைத்திட்டான்.

அப்படி வெளிப்படுத்திய அந்தப் பெரியோர் இன்றும் ஒளி நிலை பெற்றிருக்கின்றனரப்பா.

அதே சமயத்தில்... மறைமுகப்படுத்துவது வளர்ச்சிக்கே...!

நுணுகி ஆய்வு செய்வதிடும் சிந்தனையின் வளர்ச்சி... பக்குவம் கொண்டிட்ட நிலையின் அடுத்த வளர்ச்சிக்கு "மகரிஷிகள் உவந்து வழிகாட்டுகின்றார்கள்..."

நீர் பாய்ச்சித் தானியங்கள் விளைச்சல் எனும் மகசூல் பெற்றிடும் ஓர் உழவன் "கேணியில் நீர் நிறைந்திருக்கின்றதே...!" என்று உட்கொண்டிடும் தேவைக்கு மேல் பாய்ச்சிட்டால்... வளர்ப்பின் பலன் செழிப்பைக் காட்டினாலும்... பெற்ற பயனைப் பெற்றுத் தந்திடும் சூட்சும நிலை காட்டிடாது.

1.பக்குவம் கண்டு உபதேசங்கள் அளிப்பதில் தடை ஒன்றுமில்லை.
2.மாமகரிஷிகள் ஆசிகள் என்றும் உனக்குத் துணை நிற்கும்.