ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 1, 2023

சப்தரிஷிகள் தேர்ந்தெடுக்கும் ஞானத்தின் வித்துக்கள்

குணங்களாக உள் அடக்கும் “ஓர் மறை பேறு” என்பதே மனித மனம் வளர்த்துக் கொள்கின்ற குண நலன்கள்… அகத்தின் அருட் சிந்தனையில் பிரகாசிப்பதே “உயர் ஞானம்…”
1.ஞானச் செல்வங்கள் (நீங்கள்) அகத்தின் அருள் செல்வத்தினை
2.உங்கள் சிந்தையில் பற்றுக…! என அன்பு கொண்டே அழைக்கின்றோம்.

காலமாம் வேக கதியில்… அனைத்துமே மறைதல் தத்துவம் பெறுகின்றது.

உயிர் சக்தி வலு கூட்டிக்கொள்ள இந்தச் சரீரமும் காக்கப்பட வேண்டும். நோயுற்ற ஒருவனைப் பிழைத்தெழ வைத்திடும் வைத்திய நூல் கற்று அதனைச் செயல்படுத்திக் காட்டிட்ட எத்தனையோ மருத்துவர்கள் உள்ளார்கள்.

இருந்தாலும் அவர்களும் காலத்தின் பிடியில் தான் சிக்கி உள்ளார்கள். உடலை விட்டு எப்படியும் பிரிந்து தான் ஆக வேண்டும்.

ஆனால்
1.மெய் ஞானத்தின் விழிப்பு கொண்டு உயர் ஆத்ம சக்தியை வலுக் கூட்டிய மாமகான்கள்
2.காலத்தால் இன்றும் அழியாது வாழ்ந்து வருகின்றனர்…

அவர்கள் செயல் கொள்கின்ற நிலை என்ன…?

காலில் அணியும் சலங்கை பார்த்திருக்கின்றாய் அல்லவா. உயர்ந்த உலோகத்தால் உருவாக்கப்படும் கால் சதங்கை ஒலிப்பது எவ்வாறு…?

பொருத்தமான பரல்கள் உள்ளிட்டு அமைக்கப்படும் அந்தச் சதங்கை வாய் ஒலிக்கின்ற ஒலி போல்…
1.இங்கே யாம் காட்டும் பொருளை
2.ஆத்ம பலம் கூட்டிடும் ஞானத்திற்கே காணுதல் வேண்டும்.

பொருந்தாப் பொருள் அமையப் பெற்ற சதங்கை எவ்வாறு ஒளி நாதத்தைக் காட்டாதோ அதைப் போன்றே
1.சரீரத்தின் அனைத்து அணுக்களும் “உயர் மின் நுண்காந்த அலைகளை…” ஈர்த்துக் கொண்டிடும் பக்குவம் இல்லை என்றால்
2.மனிதச் சரீரத்தை ஒளியாக்கிடும் சித்தன் நிலை குறைவுபடுமப்பா.

நாம் ஈர்க்கின்ற உயர் காந்த சக்தியை… சரீரத்தில் உள்ள அனைத்து அணுக்களும் பெற்று… உயிர் ஆத்ம சக்தியின் வலுவால் ஒலிக்கின்ற நாதமே பின் “விந்து கலையாகும்…”

அந்த நிலையின் பக்குவம் பெற்றுவிட்டால் “துடி முழவின்” (இசைக் கருவி) ஒலி கேட்டிருக்கின்றாய் அல்லவா. அத்தகைய முழங்கு நாதம்… சொல் (உன் சொல்) அறப்பெற்றிடலாம். இதையே சரீரத்தின் தொடர்பிற்கும் உணவினை உட்கொள்ளும் குணங்களாகக் காணலாம்.

உடல் பொருந்துகின்ற உணவினையே உட்கொள்ளல் வேண்டும் உணவின் குண மாறுபாட்டால் நம் சரீரத்திற்குள் பிற உயிர்த்தொகைகள் உட்கொள்ளும்… உணவின் குண விசேஷ வாசனையால் ஆட்கொண்டு உடல் வாழ்கின்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

சமைக்கப்படும் உணவில் அதன் வாசனைக்கொத்த உயிரணுக்கள் அசைகின்ற தன்மைகளையும் அதன் செயல்பாட்டையும் காட்டி இருக்கின்றோம். “இலையில் திகழ்கின்ற பிண்டம்…!” என்று உரைத்திருக்கின்றோம்.

அல்லாமே வாசனைகள் ஆகுகின்றன. ஆனாலும்
1.குணங்களின் வேகத்தை அது எத்தகையதாக இருந்தாலும்
2.ஆத்ம பலத்திற்கே அதைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

தொழில் புரியும் ஓர் தொழிலாளி… கருத்தொன்றி தொழில் நாட்டம் கொண்டிட்டால் பசி தாகத்தை உணர்வதில்லை. சிலர் பொருளைப் பெற்றிடும் வேகத்தால் உத்வேகம் ஊட்டப்பெறும் ஒன்றின் கருத்தால் பசியினை மறந்தும் தொழில் புரிகின்றார்கள்.

இப்படி வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ சம்பவங்களைக் காண்கின்றோம் அதுவும் கருத்தொருமித்த நிலை தான்.

அதே மனநிலையைத்தான் “இந்தத் தியானத்திற்குச் சிறிதளவேனும் செயல் கொள்ளுங்கள்…” என்று உரைப்பதெல்லாம்.

1.ஞானத்தின் வித்துக்களைத் தேர்ந்தெடுக்கும் வேகத்திற்கே சப்தரிஷிகள் செயல் கொள்கின்றனர்…
2.ஆக்கம் அனைத்தையும் காக்கும்.