ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 1, 2023

மின்னலையே ஒடுக்கும் பச்சிலையின் மகத்துவம்… புலஸ்தியர் கண்டது

ஒரு சமயம் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று எனக்குத் தெரியாமலே ஒரு பச்சிலையைக் கொடுக்கின்றார்… குருநாதர். மின்னலைப் பாருடா…! என்கிறார். உடனே அவருக்கும் எனக்கும் சண்டை வந்துவிட்டது.

அவர் கையிலே பச்சிலையை வைத்துக் கொண்டார்… என்னைத் தொடுகின்றார்… தொட்டுக் கொண்டு இப்போது மின்னலைப் பார்…! என்கின்றார்.

சாமி…! நான் பிள்ளை குட்டிக்காரன் நீங்கள் கூப்பிட்டீர்கள் என்று உங்களுடன் வந்து விட்டேன். மின்னலைப் பார்த்து என் கண்கள் பறிபோய் விட்டால் நான் என்ன செய்வது…? என்றேன்.

நான் சொல்வதைக் கேட்கின்றேன் என்று தானே என்னுடன் வந்தாய். இறக்கும் தறுவாயில் இருந்த உன் மனைவியை உடல் நலம் பெறச் செய்தேன் அல்லவா..! அந்த நேரத்தில் நான் சொல்வதைக் கேட்கிறேன் என்று தானே சொன்னாய்.

அப்படி என்றால் நான் சொல்வதை நீ இப்போது கேட்க வேண்டுமா இல்லையா…? என்று இப்படிக் கேட்கின்றார்.

அப்பொழுது நான் என்ன செய்வது…! வேறு வழி இல்லை.

அப்பொழுது தான் அந்த இடத்திலே என்னைத் தொடுகின்றார் மின்னல் பாய்கின்றது… அதைப் பார்…! என்று சொல்கின்றார்.

உதாரணமாக
1.வான் வீதியிலே விஷங்கள் ஓன்றுடன் ஒன்று தாக்கப்படும் பொழுது தான் மோதலாகின்றது
2.விஷம் தாக்கப்பட்ட பின் தான் வெப்பம் ஆகின்றது
3.விஷத்தின் தாக்குதலால் தான் நம் உயிரிலும் வெப்பம் உண்டாகிறது… அதனால் இயக்கமும் ஆகிறது.
4.ஆனால் அதிக விஷம் தாக்கப்படும் பொழுது இருளாகின்றது நம் உடலில் இருக்கும்

நம் உடலில் ஒவ்வொரு அணுக்களுக்கும் அதற்குண்டான விஷங்கள் உண்டு. ஆனால் விஷம் அதிகமாகி விட்டால் நாம் செயலையே மறக்கச் செய்துவிடும்.

நாம் உணவு உட்கொள்வதில் உப்பு சேர்த்தால் நன்றாக இருக்கும். உப்பு அதிகமாகி விட்டாலோ ஓ…ய் என்று வாந்தி வந்துவிடும்… சாப்பிட முடியாது. அளவை அறிந்து அதன் உணர்வு கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

அதைப் போன்று… மனிதன் இந்த வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும்…? என்பதற்காக இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

பின் அவர் சொன்ன முறைப்படி மின்னலைப் பார்க்கும் பொழுது ரொம்ப ஆனந்தமாக இருக்கின்றது.
1.அறிந்து கொள்ளக்கூடிய உணர்வுகள்… அறிவின் தன்மையாக எனக்குள் வருகின்றது
2.அந்த மின் கதிர்கள் எங்கெங்கே ஊடுருவிச் செல்கின்றதோ… வான மண்டலத்தையே பூராம் அறியும்படி செய்கின்றார்.
3.அதையெல்லாம் தெரியப்படுத்துகின்றார்… அறியக்கூடிய சக்தியும் எனக்கு வருகிறது.

ஆனால் முதலில் பச்சிலையைக் காண்பிக்கவில்லை அவரிடம் வைத்துக் கொண்டுதான் என்னைத் தொடுகின்றார். மின்னலைப் பார் என்று சொல்கின்றார்… நான் மாட்டேன்…! என்று சொல்கிறேன்.

1.உனக்குச் சக்தி கொடுப்பதற்காகத்தான் நான் இதைச் செய்கின்றேன்
2.இந்தப் பச்சிலையால் தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த அகஸ்தியனுக்குச் சக்தி கிடைத்தது
3.அதன் துணை கொண்டு தான் அவன் ஒளியாக மாறினான்.
4.அதே பச்சிலையின் உணர்வுகளை நீ எடுக்கப்படும் பொழுது…
5.அவன் பெற்ற உணர்வை நீ பெறும் பொழுது உனக்குள்ளும் தீமைகள் வளராது…
6.அந்த விஷத்தை முறிக்கும் சக்தி உனக்கும் கிடைக்கின்றது…! என்று என்னைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

அதன் பின் நான் மின்னலைப் பார்க்கின்றேன் அவர் சொன்னபடி நான் பார்த்து அந்த மின்னல்கள் இயக்கக் கூடிய உணர்வை நான் நுகரப்படும் பொழுது
1.என் இரத்தங்கள் முழுவதும் அது கலந்து… உடல் முழுவதும் அந்த இரத்தம் சுழலச் தொடங்குகின்றது.
2.என் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது.

எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற முறை கொண்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு “டைனோசர்” என்ற உயிரினங்கள் வாழ்ந்த இடங்களை அது புதையுண்ட இடங்களை எப்படிக் கண்டுபிடித்தார்களோ அதைப் போன்று
1.அகண்ட அண்டமும் அதனின் நிலைகளும் எப்படி விளைந்தது…? என்று அகஸ்தியன் அன்று கண்டான்…
2.அதன் உணர்வை நீ அறிய வேண்டாமா…? என்று கேட்கின்றார் குருநாதர்.
3.அதற்காக வேண்டித் தான் உன்னை மின்னலைப் பார்க்கச் சொன்னேன்
4.அதன் வழி நீ நுகர்ந்து கொண்ட பின் அந்த உணர்வு உனக்குள் வருகின்றது என்றார்.

இப்பொழுது என்னுடைய எண்ணங்கள் அதைப் பதிவு செய்யப்படும் பொழுது இந்தக் காற்றில் இருப்பதை அறிய முடிகின்றது… அந்த உணர்வை வைத்து நான் இப்போது பேசவும் முடிகின்றது.

பேசிய உணர்வுகளை இப்பொழுது நீங்கள் செவி வழி கேட்டு… படித்துத் தெரிந்து கொள்கின்றீர்கள். இதைச் சொல்லிக் கொண்டு வரும் பொழுது
1.அதைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால்… வசிஷ்டர்..
2.இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு பிரம்மம் (சிருஷ்டி) ஆகின்றது..

பத்தாவது நிலை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்தி தான் நமது உயிர்… இந்த மனித உடலை உருவாக்கி அதை ஆட்சி புரிகின்றது. மனித உடலில் விளைந்த ஆறாவது அறிவை வைத்து எப்படி இயக்க வேண்டும்…? என்று அந்த இடத்திலே விளக்கத்தைக் கொடுக்கின்றனர்.

அந்த உயர்ந்த சக்தியை நீ கவரப்படும் பொழுது வசிஷ்டர் பிரம்மகுரு… கவர்ந்து கொண்ட சக்தி… மனைவி அருந்ததி.
1.எந்த உணர்வின் சக்தி உனக்குள் அறிவாக வந்ததோ அந்த அறிவின் உணர்வுகள் உனக்குள் உருவாக்கப்பட்டு
2.அந்த அறிவின் துணை கொண்டு தீமைகளை நீக்கி “உள்பொருளின் உணர்வின் ஞானத்தை நீ அறிய முடியும்…” என்று காட்டுகிறார் குருநாதர்.

குருநாதர் காட்டியதை நீங்களும் அறிய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்லிக் கொண்டு வருகிறேன். காட்டுக்குள்ளும் மேட்டிற்குள்ளும் என்னை அலையச் செய்து இந்த உண்மையை அறியும் பழக்கத்தைக் கொண்டு வந்தார். ஒவ்வொன்றாக அனுபவத்தைக் கொடுத்தார்.

எத்தனையோ பேர் குருநாதரிடம் பழகினார்கள். இருந்தாலும் இந்த மாதிரித்தான் எனக்குக் காண்பித்தார். தெரிந்து கொண்டேன்… அதை வளர்த்தேன்… உங்களிடமும் அதை இப்போது பதிவு செய்கின்றேன்.

நான் காட்டிற்குள் அலைந்து திரிந்து பார்த்தேன். குருநாதர் வெளிப்படுத்திக் காட்டினார். துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெறுவதற்கு உங்களுக்குள் இதைப் பதிவு செய்கின்றேன்.

பதிவு செய்த பின் மீண்டும் எண்ணும் போது உங்களுக்குள் அந்த அறிவாக வந்து அகஸ்தியன் அக்ண்ட உண்மைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அது மட்டுமல்ல…!
1.அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கே நீங்கள் போக முடியும்.
2.அவன் துருவனாகி துருவ நட்சத்திரமாக ஆனது போன்று நீங்களும் ஆவதற்கு இது உதவும்.
3.அவன் செய்த அறிவுகள் எல்லாமே உங்களுக்கு வரும்.

உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி ஒன்றுபட்டு வாழ இது உதவும்.