ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 10, 2023

கூர்படு சிந்தை கொள்

அன்பு அறிவாக நிலைகொள் என்றால் என்ன…?

“அன்பின் வடிவாக நிலை பெற்றிருப்பாய்…! என்று ஆசி வழங்கிடும் முதியோர் சொல்…” அறிவு மனம் குணம் மூன்றும் எண்ணத்தின் செயல் வழி என்றாலும் தான் எடுத்துக் கொள்ளும் குணங்கள் நிலைக்கொப்பத்தான் வாசனையால் ஆளப்படும்.

வான்மீகி கூறிய நீல வண்ணராமன்… தெய்வீக வடிவு…! என்பதெல்லாம் அறிந்த சொல்… ஆனால் அது மறைக்கப்பட்ட பொருள்.

அன்பு என்ற சொல்லின் கொள்ளப்படும் நிலை குணம் அக்குணங்களின் வாசனையாகிய மணம் அது வெளிக்காட்டும் ஒளியாக (நிறம்).

அன்பின் நிறம் என்ன தெரியுமா…?

அன்பின் அறிவு நீக்கமற நிலை கொள்ளும் செயலுறும் இயக்க சூட்சுமம். அன்பு தான் வான்மீகி மாமகரிஷி காட்டிய “நீல வண்ணம்…”
1.வீரம் விளைவித்த சாந்தமாக கண்ணின் ஒளி நீல வண்ணம் காட்டி
2.ஆத்ம சுடர் பிரகாசித்து… காண்பவரையும் உயர் ஞான வழி வரும் செயலாக ஆக்கும்.

சூரிய கிரகண கால நிகழ்வில்… கதிரவன் ஒளி கிரகணங்கள் பூமியில் பாய்ந்திடாத குறுகிய அந்தக் கால நேரத்தில் நீரில் நிறைந்திடும் நுண்ணிய விஷ அணுக்கள்… சூட்சும செயல் மென்மேலும் பல்கிப் பெருகி… நீர் சம்பந்தமான கடுமையான நோயாக… இந்த உலகம் எதிர் கொள்ளத்தான் போகின்றது.

கடுமையான விஷ மணத்தின் செயலில் உயிரையே உண்டுவிடும் நடைமுறை சாத்தியமும் உண்டு, அதற்காக அஞ்சிட வேண்டாம்…!

சூரியப் பிரகாசத்தினை எண்ணி ஈர்த்திடும் பக்குவ நிலை பெற்றிருக்கும் சரீரத்தில் எலும்பையே ஊடுருவி ஒளி அருளால் உள் செலுத்திப் பாதுகாப்புக் கவசமாக…
1.சகலமான ஒளி மண்டலவாசிகள் எனும் மகரிஷிகள் வழி வழியாக வந்திடும் ஞானச் செல்வங்கள்…
2.இந்த உலகத்தையே இரட்சித்துக் காத்திடும் செயலுக்கு “மாமருந்தாய்” அளித்துள்ளனரப்பா.

“சிவ சக்தியான ஒலி ஒளி” நீக்கமறச் செயல் கொண்டிடும் திறத்தில்… ஒலி கொண்ட சக்தி ஒளியுறும் சிவமாகக் கலந்திடும் கலப்பு… சிவ சக்தியின் இணையான நிலை விளக்க முறை செயல்படுத்திடும் நடைமுறையில் ஒலி கொண்ட சக்தி ஒளியாம் நிலை சிவத்துள் ஐக்கியமாகச் செயல்படும் தொழிலில்… “அறிவு சிவமாக அதனுள் இட்ட ஒளி சக்தியாகப் பரிணமிக்கிறது…”

மெய்ஞானச் சுடர்தல் வேதாள மாமகரிஷி அருளிச் செய்த சுடர் விளக்கமாக…
1.நீரை இறைப்பது ஏற்றம்
2.நீண்ட நெடு வயல்கள் என்பதே உலகம்
3.வயலில் விளைகின்ற பயிர்கள் அவைகளே ஞானம்… ஞானப்பயிர்.

கிணற்றில் நீர் நிறைந்திருக்கின்றது… அதுவே மனத்தின் பாங்கு அருள்.
1.ஜீவன் தந்திடும் ஒளிக் கதிர்கள் “நீர் ஒன்று இல்லாவிடில்…”
2.ஜீவன் என்றாலும் செயல் கொள்ளா நிலையில் உருவாக்கிடும் சக்தியின் பாங்கில்
3.அநித்தியமான சூடு மறைபொருளாக விளங்கி… பிரம்மம் (சிருஷ்டி) என்ற நிலை காட்டாது.

நீர் இறைத்து நெடுவயல் நீர் பாய்ச்சிச் செயல்படுத்திட ஓர் உபகரணம் தேவை. அதுவே “தியானம்” என்ற பெயர் பெறும் ஏற்றம்.

முயற்சி செயல் கொள்ளும் பொழுது ஏற்றத்தில் நீர் இறைக்கின்றாய். அந்தச் செயலின்றி நெற் பயிர் எப்படி விளையும்…?

தென்னை ஊன்றினாய் என்றால் தென்னை தான் விளைவாகும். அது போல் ஞானப் பயிர் வளர்த்திடும் கருவின் வலுவிற்கு வீரிய நல்வித்துக்களை ஊன்றிட வேண்டும்.

அந்தச் செயலுக்கே மாற்று அலை நிலைகள் திசை மாறிச் செலுத்திடத் துடிதுடிக்கும் எண்ணத்தின் பாங்குகள் வந்தாலும்…
1.ஞானியற்கு மேலாம் உயர்வெண்ண செயலில் செயல் கொண்டு
2.திட நிலை சங்கல்பம் பெற வைத்திட்டது எது…?

சிந்தை என்ற சொல் பெரும் பொருள் அறிவுறுத்தும் நிலையன்று… “கூர்படு சிந்தை கொள்” என்றே உரைத்திட்டோம்.

உறை பொருள்… மறைபொருள்… உட்பொருள்.