ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 29, 2023

அறுகோணக் கருவறை எழுதி... அதன் மீது முத்தலை சூலாயுதம் எழுது

அறுகோணக் கருவறை என்பதும் கர்ப்பவாசம் எனப்படுவதும் ஜீவன் கொள்கின்ற அணுக்களின் செயலாக நடைபெற்றிடும் ஓர் சிருஷ்டி..
1.சகல ஜீவன்களும் இதனுள் அடக்கம்.
2.சிருஷ்டிக்கும் காரண மூலம் அதன் செயலைக் காட்டுவதே முத்தலை சூலாயுதம்.

அறுகோணக் கருவறை சிருஷ்டிக்கும் நிலையில்... எண்ணத்திற்குகந்த பிறப்பிற்கு வந்திடும் உயிரணுக்கள்... ஈர்த்து நிலையாக நின்று உயர்த்திச் செயல்படுகின்ற சுழற்சி.

பஞ்சபூதங்களின் சேர்க்கையாய் உருக் கோலம் கொள்கின்ற அந்த உயிரணுக்கள் உலகின் ஜீவித வாழ்க்கை கொண்டு செயல்படும் ஜீவன்கள் தாவரங்கள் நீர் வாழ்பவை ஊர்வன உலவுகின்ற மிருகங்கள் பறக்கும் பறவைகள் மனிதன் என்பவையே அறுகோண சக்கரத்துள் உயிரணுக்களின் சிருஷ்டியாக ஜீவன் கொள்பவை.

1.முத்தலை சூலத்தின் வளைந்த பகுதி... சரீரத்தினுள் நுழைந்திடும் அணுக்கள்
2.சூலத்தின் கூர்மையான மையப்பகுதி... உயிரணுக்கள் அறிவின் தொடராக கர்ப்பவாசம் காக்கப்படும்
3.மற்றொரு வளைந்த பகுதி... ஜீவன் கொண்டு பிறப்பின் செயலாக வெளி வருவது.