ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 27, 2023

நல்லதைப் பெற வேண்டும் என்று விரும்பினால் தீமை செய்வோரைப் பற்றிய எண்ணமே நமக்கு வரக்கூடாது

1.கிராமப்புறங்களில் இன்று படிக்காத மக்களாக இருந்தாலும்… கவனித்து ஒரு நிலை பெற்று…
2.சிலருடைய உண்மைகளைப் பேச்சிலிருந்து அறிந்து கொள்ளும் தன்மைகள் கொண்டுள்ளார்கள்.

கல்வி கற்றோரைக் காட்டிலும் கிராமத்தில் உள்ளவர் ஒரு சொல்லை கேட்ட பின் இவன் திருடன் இவன் திருடன் அல்லாதவன் என்ற நிலைகளைப். புரிந்து கொள்வார்கள்.

ஆனால் திருடன் என்ற நிலை வரப்படும் பொழுது அவனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உணர்வு வந்து விடுகிறது.
1.அந்தத் திருடும் அறிவை நீக்க வேண்டும்…
2.அவனை நல்லவனாக்க வேண்டும் என்று வந்தால் ஒழித்துக்கட்டும் உணர்வுகள் இங்கே வராது.

ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வரும் பொழுது அவன் அழின்றான். ஆனாலும் அவன் அழிந்த பின் அவன் வேகத்தின் உணர்வுகள் பரவுகின்றது. அதனால் தான் ஒரு அசுரன் இறந்தால் அதிலிருந்து பல அசுரர்கள் வருகிறார்கள் என்று காவியங்கள் காட்டுகின்றது.

ஒரு அசுரச் செயல் வளர்ந்து…
1.அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து விளைய வைத்து விட்டால்
2.அந்த அசுர உணர்வின் அணுக்கள் அதை நுகர்வோரையெல்லாம் அதே செயல்களைச் செயல்படுத்த ஆரம்பித்துவிடும்.

மகாபாரதத்தில் இராமாயணத்திலும் இது காட்டப்பட்டுள்ளது.

அந்த அசுரன் இறந்த பின் அவனுடைய உணர்வின் அலைகள் எவ்வாறு பரவுகின்றது…? கேட்டுணர்ந்தோருக்கும் இதே செயல்களை எப்படிச் செயல்படுத்துகின்றது…? இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் எப்படி விடுபட வேண்டும்…? என்று காவியப் படைப்பாக நமது ஞானிகள் கொடுத்துள்ளார்கள்

அதனை நாம் சற்றும் சிந்திக்கவில்லை.

இன்று நான் என்ன செய்தாலும் நாளை என்னவோ…! என்ற நிலையில் நாளைக்காகச் சேமிக்க வேண்டும் என்றால் மற்றவர்களை இம்சித்துத் தன்னைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது.

நாளை என்னவோ…? சரி நடப்பது நடக்கட்டும்…! என்று இருப்போரும் உண்டு. ஆனால் “நாளைக்குஸ் சேமிக்க வேண்டுமே” என்ற ஏக்கத்தில் உள்ளவர்கள் தன்னிடமிருந்து பறித்துச் சென்றுவிடுவார்களே… என்ற துன்பத்தைக் கொண்டு… அந்த பணத்தைச் சேமிக்கும் நிலை வருகிறது.

அப்படிச் சேமிக்கும் தன்மை வரும் பொழுது… அதை மற்றவன் பறிக்கும் தன்மை வருகிறது. இதைப் போன்ற உணர்வுகள் மனிதனுக்குள் மாறி மாறி… மனிதனுடைய சிந்தனையை அழித்திடும் நிலைகள் பரவி வருகின்றது.

ஆகவே இத்தகைய நேரத்தில் குருநாதருடைய உணர்வுகளைத் தான் இங்கே வெளிப்படுத்துகின்றோம்.
1.அவருடைய உணர்வுகள் தான் செயல்படுத்துகிறது… நான் பேசவில்லை…!
2.குரு அருளைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
3.அவர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்… அதையே தான் உங்களுக்குள்ளும் உணர்த்துகிறோம்

இன்று நல்லதை எண்ணி ஏங்கும் நிலைகள் அனைவர் உள்ளங்களிலும் தீமையான உணர்வுகள் புகுந்து அவருடைய நல்லதைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டுள்ளது… வேதனையில் துடிக்கின்றனர்.

1.நல்லதுக்காக ஏங்கும் அனைவரும் பிறர் செய்யும் தீமைகளை நுகர்ந்து நல்லதை வளர்க்க முடியாதபடி தடுக்கப்பட்டு
2.அதனால் கடும் நோயும் வேதனையும் வெறுப்பும் கொண்டு
3.என்ன வாழ்க்கை…? என்று கடைசி நிமிடத்தில் ஒதுக்கும் தன்மையை வருகின்றது.

அசுர உணர்வு கொண்டவர்களோ… மற்றவரைத் தாக்கித் தான் வாழ வேண்டும் என்று பிறரைத் துன்புறுத்தும் நோக்கிலேயே செயல்படுகின்றனர். மிருகங்கள் தன் பசிக்கு மற்றவைகளைக் கொன்று பூசிப்பது போன்று மனிதன் இரக்கம் இல்லாத மிருகமாக இன்று மாறிக் கொண்டுள்ளான்.

பிறரைத் தாக்கி அவரைக் கொன்று விட்டு அவன் செல்வத்தை அபகரித்து அதைக் கண்டு ரசித்து வாழுகின்றார்கள்… அவர்கள் மகிழ்ந்தே வாழ்கின்றார்கள்… அப்படி இருந்தால் மகிழ முடியும் என்ற நிலை தான் உருவாகி உள்ளது.

இது போன்ற நிலைகள் தான் இன்று அதிகரித்துள்ளது. இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

அதிலிருந்து காத்துக் கொள்ளும் சக்தியாகத்தான் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம். பதிவான நிலைகளை நீங்கள் எண்ணி ஏங்கி அந்தச் சக்திகளைப் பெற முடியும்.
1.காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து
2.உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய கொடிய துன்பங்களையும் அகற்ற முடியும்.

அதற்காகத்தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக உபதேசித்துக் கொண்டு வருவது.