ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 8, 2023

கண்களைத் திறந்து பின் கண்களை மூடி… ஆத்ம சுத்தி செய்வது என்பது “மிக மிக வீரியமான சக்தி” – இது ஒரு பயிற்சி

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரம் ஆன அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கி… “கண்களைத் திறந்து தியானியுங்கள்…”
1.இப்பொழுது உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று “திரும்பத் திரும்ப” எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உங்கள் கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி உடலில் உள்ள ஜீவான்மாக்களும் ஜீவணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது
1.உங்கள் உடலில் புது விதமான உணர்வுகள் படரும்.
2.இரத்தங்களில் மிகச் சக்தி வாய்ந்த அந்த உணர்வுகள் கலக்கும்.
3.உங்கள் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்தும் உற்சாகம் பெறும்… வலிமையும் பெறும்.

மேலே சொன்ன மாதிரி இப்படி எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும். பழகிக் கொண்டபின்… உங்கள் வாழ்க்கையில் எப்பொழுது சலனமும்… சஞ்சலமும்… வெறுப்பும்… வேதனையும்… பகைமையான உணர்வுகளூம் உங்களுக்குள் தோன்றுகின்றதோ
1.அப்பொழுதெல்லாம் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
2.நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதைப் பெற வேண்டும் என்று கண்களைத் திறந்து ஏங்கித் தியானியுங்கள்.

அடுத்து கண்களை மூடி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
1.கண்களை மூடி உங்கள் நினைவை உடலுக்குள் தலையிலிருந்து கால் வரை மீண்டும் காலிலிருந்து தலை வரை செலுத்துங்கள்.
2.இப்படி ஒரு ரெண்டு மூன்று தடவை செய்தால் உங்கள் கவலைகள் அனைத்தும் நீங்கும்
3.அருள் உணர்வுகள் பெருகும் அதன் வழி உங்களுக்குள் மன வலிமை கிடைக்கும்
4.சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும்… பகைமைகளை அகற்றும்… மகிழ்ச்சி என்ற உணர்வுகளை தோற்றுவிக்கும்

தியானத்தில் எடுத்தவர்கள் இதே மாதிரி அவசியம் செய்து பழக வேண்டும்.

குறிப்பு:-
கண்களைத் திறந்து… அடுத்து கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஞானகுரு எடுக்கச் சொல்வதில் ஒரு முக்கியமான சூட்சமம் உள்ளது.
1.கண்களைத் திறந்து செய்யும் போது கேமராவில் படம் எடுக்கிற மாதிரி புருவ மத்திக்கும் விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்திற்கும் நினைவு செல்ல வேண்டும் (அதாவது படம் பிடிக்க வேண்டும்)
2.படம் பிடித்ததை… அந்த நினைவை… அப்படியே கண்களை மூடி… கண்ணால் சுவாசத்தின் வழி கூடி தலையிலிருந்து கால வரை செலுத்த வேண்டும்

மேலே சொன்ன SL NO 1, 2யும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் செய்து உடலுக்குள் செலுத்த செலுத்த… வட துருவத்தின் வழி விண்ணிலிருந்து வரும் ஆற்றல்கள் பனிப் பாறைகளாக உறைவது போல் துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் உடலுக்குள் இருக்கும் சகலத்திற்குள்ளும் உறையத் தொடங்கும்… அதாவது முலாம் பூசுவது போல் படரும்.

படரச் செய்யும் போது மூக்கு வழி செல்லும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சுவாசம்… உடல் முழுவதும் சுழன்று வருவதும்… அது வாயிலே உமிழ் நீராக மாறி… நம் அன்னக் குழாயிலிருந்து… ஜீரண உறுப்புகளிலிருந்து… தோல் மண்டலம் வரை கண்ணைத் திறந்து மூடி இப்படி மாறி மாறிச் செய்ய வேண்டும்.

இப்படி ஒரு பழக்கம் வந்து விட்டால்
1.“எத்தகைய கடுமையான நிலைகள் இருந்தாலும்… அதை நல்லதாக மாற்ற முடியும்…”
2.ஆத்மாவைச் சுத்தம் செய்ய வேண்டிய சரியான முறை இது தான்.
3.ஆத்மா மட்டுமல்ல உடலும் நலம் பெறும்… “மன பலம் மன நலம் அதிகமாகக் கிடைக்கும்…”