ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2023

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் கண்டுபிடித்த “பச்சிலை மூலிகைகளின் வீரிய சக்தி”

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் ஒரு மனிதனுக்கு வயிற்று வலி வருகிறது என்றால்
1.சில பச்சிலைகளை எடுத்துக் கையிலே உரசித் தேய்ப்பார்கள்.
2.தேய்க்கும் போது அந்த உணர்வுகள் இரத்தங்களுடன் கலந்துவிடுகிறது
3.அதாவது இன்று இன்ஜெக்ஷன் போடுகிற மாதிரி மேலே அரைத்துத் தேய்ப்பார்கள்.
4.அந்தப் பச்சிலையின் உணர்வுகள் இரத்தத்துடன் கலந்து அவன் வயிற்று வலிக்குக் காரணமானதை நீக்கி விடுகின்றது.
5.அந்த விஷத்தை ஒடுக்குகின்றது... வலி நீங்குகிறது.

அனுபவத்தில் அப்படி அறிந்தவர்கள் தான் அன்றைய மனிதர்கள். புலஸ்தியர் (புலனறிவால் நுகர்ந்தறிபவர்கள்) என்பர்கள்.

அறிந்ததைப் பதிவு செய்யும் போது தான் பதிவு செய்ததை மீண்டும் நினைவாக்கிக் கொள்கின்றான். அந்த நினைவின் தன்மை கொண்டு
1.தனக்கு எப்பொழுது ஆபத்துகளோ விபத்துக்களோ வருகின்றதோ
2.மிருகங்களிலிருந்தும் அறியாது வரும் நோய்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள இம்முறையைக் கையாண்டு வருகின்றனர்.

ஏனென்றால் காட்டு விலங்குகளுடன் இருக்கும் போது அந்த விஷத் தன்மை கொண்ட மிருகங்கள் தன்னைத் தாக்கிடாது பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

இப்படி அந்த விஷத்தை முறித்திடும் சக்திகள் தனக்குள் தெரியப்படும் பொழுது... இரவிலே உறங்கச் செல்லப்படும் பொழுது
1.விஷத்தை முறித்திடும் பல மூலிகைகளை அவர்கள் அரைத்துப் பூசி கொள்வதும்
2.தாங்கள் படுத்து இருக்கும் குகைகளுக்கு முன் அதைப் பரப்பி வைத்துக் கொண்டும் தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றார்கள்/.

சில காடுகளில் அத்தகைய புலையர்கள் இன்றும் இருக்கின்றார்கள். இவர்களின் மணத்தைக் கண்ட பின் யானைகள் விலகிச் செல்லும்... புலிகள் விலகிச் செல்லும்... விஷ ஜந்துக்களும் விலகிச் சென்று விடும்.

அது போன்றுதான் அக்காலத்தில் இத்தகைய பச்சிலைகளை அவர்கள் பாதுகாப்புக்காக வைத்துக் கொண்ட பின்... கணவன் மனைவியாக வாழ்பவர்கள் கர்ப்பமுற்றால் அந்தக் கருவில் இருக்கும் குழந்தைக்குத் தாய் நுகரும் உணர்வுகள் அனைத்தும் விஷத்தை முறிக்கும் ஆற்றலாகப் பெறுகின்றது.

அதே சமயத்தில் மின்னலை அடக்கிடும் சில பச்சிலைகளும் உண்டு. மின்னலால் தாக்கப்படும் போது அந்த அதை அவர்கள் வைத்திருப்பதினால் அதன் மணத்தால் அதிலிருந்து காக்கப்படுகிறார்கள்.

1.யார் இதை அனுபவத்தால் கண்டுபிடித்தார்களோ
2.மின்னலின் நிலைகளை மாற்றிடும் பச்சிலையை யார் அந்தக் காலங்களில் வைத்தனரோ
3.மின்னலின் தாக்குதலை அடக்கிடும் அந்தப் பச்சிலைகளை
4.அகஸ்தியன் என்று சொல்லும் அவருடைய தாய் தந்தையர்கள் உடலில் அரைத்துப் பூசியதனால்
5.தாய் அந்த மணத்தை நுகரப்படும் போது கருவிலிருக்கும் அகஸ்தியனுக்கு வீரிய சக்தியாக அது கிடைக்கின்றது

இரவிலே படுத்திருக்கும் போது பாதுகாப்பிற்காக அதைப் பரப்பி வைத்திருந்தாலும் மிருகங்களிடமிருந்து மட்டுமல்ல... மின்னல் தாக்கினால் அந்த விஷத்திலிருந்தும் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றார்கள்.

அப்படிப் பாதுகாக்கப்பட்ட அந்தப் பச்சிலையின் மணத்தை நுகர்ந்ததனால் தான் கர்ப்பமாகும் பொழுது கருவில் இருக்கும் அகஸ்தியனுக்கு அது கிடைக்கின்றது.
1.மின் கதிர்கள் வெளிப்படும் உணர்வினை நுகர்ந்து
2.அதன் உணர்வின் அறிவும் கருவிலேயே அவனுக்குள் விளைகின்றது
3.இப்படி விளைந்தது தான் அவனுக்குள் பேராற்றலாக வளர்கின்றது

இந்த மின்னல்கள் கடலில் தாக்கப்பட்டால் அது மணல்களாவதும் அதன் கீழ் ஒரு மீன் இனம் சென்றால் மின்னலின் அழுத்தம் தாக்கப்பட்டு அதற்குள் ஊடுருவி இது ஒரு கருத்தன்மை அடைந்து எலக்ட்ரிக் மீனாக மாறுகிறது.

எலக்ட்ரிக் மீனாக உருவான பின் “அதன் உணர்வின் அறிவாகி” அது பல வகைகளையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்ற மீனாக எப்படி வளர்ந்ததோ அதைப் போல் தான்
1.அகஸ்தியனும் அறிவின் ஆற்றலாக உருப்பெற்றான்.
2.மிகச் சக்தி வாய்ந்தவனாக மாறுகின்றான்.

இதை இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு). இதை நீங்கள் நினைவு கொண்டால்... உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் “சில கடுமையான விஷத் தன்மைகளிலிருந்தும்... நோய்களிலிருந்தும்... உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும்...”