ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 1, 2024

ஞானச் செல்வங்களுக்கு வழிகாட்டுகின்றோம்

1.புகழ் கொண்ட ஜீவன் பல்லக்கில் செல்கின்றது…
2.அதே ஜீவன் சிவத்தின் தன்மை நீக்கம் பெற்று “சவம்” எனப்படும் நிலையில் அதுவும் ஊர்வலம் செல்கின்றது.

இரண்டும் காரண பேதங்கள் என்றாலும்… சுமந்திடும் பல்லக்கு மூங்கிலால் உருவானதே.

கலைஞன் கை பட்டு இளந்தளிர் மூங்கில் அதன் பக்குவம் கொண்ட திடம் என்ற வளர்ச்சியில் அது வளைக்கப்படும் பாங்குகளில் வளைந்து… வளர்ந்து… பல்லக்கு உருவாக்கிடும் கலைஞனின் கைவண்ணத்திற்கொப்ப வளர்ந்து நிற்கின்றது.

வெட்டிடத் தழைக்கும் திழைவுறுகின்ற தன்மை தன்னிச்சையில் மூங்கில் உயர்ந்து வளர்ந்து நின்றாலும் பக்குவத்தின் வளர்ச்சி அற்ற தட்டை எனப்படும் மூங்கிலானது அது வளர்ந்துள்ள புதரின் கண்வாசம் செய்திடும் “இசை வண்டு” வளர்ச்சியின் திடமற்ற மூங்கில்களைத் துளைத்து விட்டு அதனுள்ளும் வாசம் செய்திடும்.

காற்றில் அசைந்திடும் அந்த மூங்கில்கண்
1.அதனுள் நுழைந்திடும் காற்று உண்டாக்கிடும் ஓசை… மூங்கிலை இசை பாட வைக்கின்றது.
2.ஆனால் வண்டு துளைத்த மூங்கில்கள் “இறுதி ஊர்வல நிலைக்கே…”
3.மற்றும் மனிதனின் தேவைப்படும் காரியங்கள் ஆற்றிடக் கொண்டு செல்கின்றான்.

கலைஞன் கைபட்டு உருவாக்கிட்ட பல்லக்கு… தேவ ஆராதனை பெற்றிடும் சிறப்பாகப் பரிணமித்து விளங்குகின்றது. அது போல் ஆத்ம பலம் கூட்டிடும் செயலாக ஜீவன் பெறுகின்ற சத்தியத்தின் சக்தி எனும் வளர்ப்பு பக்குவம் காட்டிடும் உனது பண்பை.

அன்று வேதாள மகரிஷி வேதாந்த நாதனுக்கு உரைத்ததைப் போல்
1.“வண்டு துளைத்திடாப் பக்குவம்” என்றே
2.ஆத்ம பலம் நாடிடும் உயர் ஞானச் சித்தின் நலம் விரும்பும் ஞானச் செல்வங்கள் பக்குவம் கொண்டிடவே
3.”கர்ம தியாகம்” வழி காட்டப்பட்டது
4.இந்தச் சொல்லை வியாசக பகவான் உரைத்தது.

அர்ஜுனனும் கிருஷ்ண பரமாத்மாவும் “நரநாராயண ஐக்கிய நிலை” என்றிட்ட சூட்சுமத்தை அன்று அந்த மகான் உரைத்த நிலையையே இன்று இந்தக் கலியில் அதனை முழுமைப்படுத்திக் காட்டியவர் ஐயப்பன்.

ஐயப்பன் உரைத்தது என்ன…?
1.சிவத்துக்குள் நான் இருக்கின்றேன்…
2.நாராயணன் உள்ளும் நான் இருக்கின்றேன்…!

மத பேதங்கள் கடந்திட்ட தெய்வ நிலை காட்டிடும் ஓர் சிறந்த தத்துவத்தை இந்தக் கலியிலும் மனிதன் கேடுறுத்துகின்றான்.

1.அவர் பெற்று வளர்த்திட்ட ஜோதிஸ்வரூப நிலையை என்றும் காணலாம்
2.அதிலே பல சூட்சுமங்கள் உண்டு…!