ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 17, 2023

சாக்கடையில் அமரச் செய்து குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்தது

கடவுள் யார்…? உன் உயிரே உள் நின்று இயக்குகின்றது… நுகர்ந்த உணர்வே அது உள் நின்று கடவுளாக இயக்கும்… அது கடவுள் தான். உள் நின்று நுகர்ந்ததை எல்லாம் உணர்த்துவது “உயிர் தான் கடவுள்...”

உணர்ந்த பின்… ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை நீக்கத் தெரியவில்லை என்றால் “எது வலுவோ அதன் வழி தான் உன் வாழ்க்கை அமையும்…”

இன்றைய செயல் அடுத்த சரீரம். சாக்கடையில் அமரச் செய்து குருநாதர் இதைச் சொல்லிக் கொடுக்கின்றார்.
1.அவர் சொல்லச் சொல்ல அந்த சாக்கடை நாற்றமே பூராம் போய் விட்டது.
2.அந்தச் சாக்கடை நாற்றத்தைக் காணோம்… எங்கேயோ போகின்றது.

அப்போது தான் வான மண்டல உணர்வுகளை எடுத்து… ஒன்றை ஒன்று வென்று ஒன்றின் உணர்வுகள் ஒன்றுக்குள் ஆகி விஷத்தின் தன்மை தணிந்து ஞானத்தின் உணர்வுகள் ஒளியாகி எப்படி மாறுகின்றது…? என்று உணர்த்துகின்றார்.

வான மண்டலத்தில் உள்ளது எல்லாம் இந்த உடலுக்குள் உண்டு. இந்தப் பிரபஞ்சம் எப்படியோ உயிர் இந்த உடலான பிரபஞ்சத்தை உருவாக்கி உள்ளது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் எந்தெந்த உறுப்புகளின் வலுப்பெற்று தீமைகளை நீக்கும் சக்தியாகப் பெற்றதோ… அந்த வடிகட்டும் தன்மை நமக்குள் இல்லை என்றால் மீண்டும் கீழான நிலைகளுக்குச் சென்று விடுவோம்.
1.அதற்குத்தான் அந்த குரு பலம் வேண்டும் என்று சொல்வது
2.அருள் உணர்வுகளைச் சேர்த்து. அதன் துணை கொண்டு தான் தீமைகளை வடிகட்டுதல் வேண்டும்.

உயிரின் வலு கொண்டு.. குரு என்ற நிலைகள் கொண்டு அருள் ஒளியைக் குருவாக்கினால் அது குரு என்ற நிலைகள் கொண்டு இருளை நீக்கிப் பொருளைக் காணும் அந்த சக்தியை நீ பெறுவாய்.

அதே சமயத்தில் குருநாதர் போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டுவார்…!

ஏன் சாமி தட்டுகிறீர்கள் என்று கேட்டேன்..?

வேறு எவன்டா கேட்டான்…? நீ தான்டா கேட்கின்றாய்…! என்றார். ஏன் தட்டுகின்றேன்…? என்று கேட்கின்றாய்.
1.நான் டெலிஃபோன் செய்கின்றேன்… ஆண்டவனுக்குத் தந்தி கொடுக்கின்றேன்…!
2.இங்கே தட்டுகின்றேன்… காதில் படுகிறது உனக்குள் ஒளியாகின்றது,
3.அந்த உணர்வு இருளை நீக்குகின்றது என்று சொல்வார்.

போஸ்டில் தட்டுவதற்கு இப்படித்தான் விளக்கம் கொடுக்கின்றார்.

நாம் சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நஞ்சினை நம் உடல் பிரித்து அதை மலமாக மாற்றுகின்றது. இது எப்படி வந்தது…?

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி அத்தகைய சக்தி பெற்ற பன்றியின் உடலை உருவாக்கியது இந்த உயிர். பன்றியாகப் பிறந்தபின் தீமையைச் சுத்தமாகவே நீக்கிவிட்டு தீமை நீக்கக்கூடிய வல்லமை பெற்ற மனித உடலை உருவாக்கியது.

மனிதனின் ஆறாவது அறிவு கார்த்திகேயா. அதை நாம் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்…?

ஒருவர் திட்டுகிறார் என்றால்… திட்டியவனை விடுவேனா…? நான் என்ன செய்கிறேன் பார்…! என்று சொன்னால்
1.இந்த உணர்வின் தன்மை நம் ஆன்மாவிலே வலு சேர்ந்துவிடும்
2.வலு சேர்ந்த பின் தீமைகளாக உருவாகிவிடும்.

ஆகவே தீமைகளைப் பிளக்கக்கூடிய ஒரு சக்தி வேண்டுமல்லவா. அதற்குத்தான் குருநாதர் துருவ நட்சத்திரத்தின் உணர்வை “ஆழமாகப் பதிவு செய்தார்…”
1.இதை நினைவு கொள்… அதிலிருந்து அருள் ஒளிகள் வருகின்றது
2.அதை நீ எப்பொழுதெல்லாம் நினைக்கின்றாயோ அதை வைத்துத் தீமைகளை நீக்கப் பழகிக் கொள் என்றார்.

நான் வந்து துடைக்க முடியாது… நீ தான் துடைக்க வேண்டும் நான் இங்கே வாழ்ந்த நிலையில் தீமைகளை நீக்கி விட்டு நான் சென்று விடுகின்றேன். நாளைக்கு வரக்கூடிய தீமைகளை யார் துடைப்பது…? என்று உடலோடு இருக்கும் பொழுது குருநாதர் கேட்கின்றார்.

இந்த உடலில் நான் சிறிது நாள் வாழுகின்றேன்…. இந்த உடல் எனக்குச் சதம் இல்லையே.
1,உயிரோடு ஒன்றி சதமாக இருப்பதற்கு நான் போகின்றேன்
2.நீ இங்கே இருந்து என்ன செய்யப் போகின்றாய்…?
3.நான் அங்கிருந்து வந்து உன் தீமையைத் துடைப்பேனா…?
4.அந்த உணர்வுகள் விளைந்தது நான் அழிவதில்லை
5.இருளை ஒளியாக்கினேன்… அந்த ஒளியின் உணர்வு இங்கே பரவி உள்ளது… அதை நீ எடுக்கப் பழகிக் கொள்.