ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 21, 2023

அத்திரி மாமகரிஷி நமக்குக் கொடுக்கும் "மெய்ஞான விழிப்பு"

1.உன்னைக் கண்டு திகைப்பின் வசம் ஆழ்த்திடக்கூடாது
2.இது வலைபடு பாசமாக உட்கிடந்த நிலை…! அந்நிலை நீக்கிடவே தவத்தின் கடுமை காட்டினோம் (அத்திரி மாமகரிஷி சொன்னது)

அஞ்சற்க…! யாரும் காண முடிந்திடாத நிலையே உமக்குக் காணும் வாய்ப்பு கிடைத்தது. “அதிபாசம்” கொண்டு செயல்படுகின்ற உலகோதய வாழ்க்கை முறை வலியினைப் போன்றது. அவ்வலை பாசமாக உட்கிடந்த நிலை.

உலகப் பிடிப்பினில் அகப்பட்டே விடுபடாத் தன்மையாக இருந்திட்டாலும்
1.பாசத்தின் வலையையே பாதுகாவல் எனப் போர்த்திக் கொண்டிட்டவன்
2.அவனுள் கிளர்ந்து எழுகின்ற அதி ஆவேச உணர்வுகள் நச்சு அரவம் (நஞ்சு கொண்ட பாம்பு) போல் தோற்றம் காட்டி…
3.தான் எங்கு வளர்ந்து… அந்த வளர்ச்சியின் முதிர்வை அடைந்ததோ…
4.சுவரில் எறிந்த பந்து திரும்பி வருவதைப் போல் அந்தக் குண நிலைகள் அவனையே தீண்டிட வருகின்றது.

ஆகவே…
1.வலைக்குள் விழிப்புடன் இருப்பது வேறு…
2.அதுவே (வலை) சாஸ்வதம்…! என எண்ணிப் பாதுகாவல் எனக்கொண்டு கிடந்து உறங்குகின்ற செயல் வேறு.

உலக வாழ்க்கையின் சுழற்சியில் சிக்கி அகப்பட்ட தன்மையையே உறங்குகின்ற செயல் என்று உரைக்கின்றோம்.

உலோகதய நிலையாக… அதன் பிடிப்பில் அகப்பட்டுவிட்ட மனது என்ன செய்யும்…?
1.தீதெண்ண குணங்கள் என்னும் நச்சரவம் தீண்டிட வருகின்றதே என்று
2.சங்கட உணர்வுகளை மேன்மேலும் வளர்க்கும் நிலை… அந்த நச்சரவத்திற்கே பால் வார்த்திடும் செயலினை ஒத்தது.

அந்தத் தீதெண்ண நச்சரவத்தை வளர்த்த செயலில்… அது மீண்டும் தீண்டிட வருங்கால்… பாசமெனும் பிடிப்பின் நிலையை மனிதன் “உலகோதய நாட்டம்” என்று எங்ஙனம் பலப்படுத்துகின்றான் தெரியுமா…?

அதிபாசம் எனும் உணர்வுகளின் தன்மையை…
1.ஒளியும் காற்றும் உள் சென்றிடாத் தன்மைக்குப் பலப்படுத்திடும் சுவர் எடுத்து…
2.அதையே சுகம் என அதனுள் கடந்து உறங்கிட்டாலும்…
3.நச்சரவம் வாழ்ந்திடும் புற்று… “எது தனக்குப் பாதுகாவல்” என எண்ணி மனிதன் உலகோதய நாட்டத்தில் செயல் கொண்டிட்டானோ…
4.அந்த இடமே புற்றாகக் கிளைத்து… அந்த நச்சுப்புற்றாக வளர்ந்துவிடுகிறது…!

ஆகவே… அதனுள் எழுகின்ற நச்சரவம் உன்னைத் தீண்டிடும் முன் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்.

1.அந்த நிலையை விட்டு வெளிவந்து பார்
2.தெய்வத்தன்மை பெற்றிடும் சிறப்பு ஒன்று கிட்டிடும்.

நல்ல சந்தர்ப்பத்தை இழந்துவிட்டால் மண்ணினுள் வாசம் செய்யும் பிராணியான எலி போன்று (காம விகார குணங்கள்) அதி பாசம் உட் சென்றிடவே வழி அமைக்கும்…. இதனை உணர்ந்து நீ நட…!