ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 4, 2024

இந்தப் பிரபஞ்சம் அழிவதற்கு முன் ஒளியின் சரீரமாக நாம் மாற வேண்டும்

இந்தப் பிரபஞ்சம் அழிவதற்கு முன் ஒளியின் சரீரமாக நாம் மாற வேண்டும்


நாராயணன் என்று சூரியனைச் சொன்னாலும் லட்சுமி நாராயணா…! அதாவது
1.காந்தத்தால் ஈர்க்கப்பட்டு மோதலில் ஏற்படுவது வெப்பமும்
2.தான் நுகர்ந்து கொண்ட உணர்வின் தன்மை அணுத்தன்மையாக மாறி அது இயற்கையில் இணைந்து வாழும் சூரியனாக வாழ்கின்றது.
 
ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டான் நாராயணன் என்றும் இங்கே கூறப்படுகின்றது. ஆதிசேஷன் என்பது விஷம். ஆதியிலே நாளடைவில் விஷம் ஆகும் பொழுது விஷமற்றதை அது தாக்கி அதிலே வெப்பத்தை உருவாக்குகின்றது.
 
1.வெப்பம் உருவானால் தான் இரண்டறக் கலக்கும் தன்மை வரும்
2.விஷம் எதிலேயும் ஊடுருவிச் செல்லும் தன்மை பெற்றது.
3.விஷம் விஷமற்றதைத் தாக்கி ஊடுருவும் பொழுது வெப்பத்தின் தணல் கூடுகின்றது
4.ஊடுருவும் தன்மை வரும் பொழுது ஈர்க்கும் சக்தியும் அங்கே வருகின்றது.
5.ஈர்க்கும் சக்தியும் வெப்பத்தை உருவாக்கும் சக்தியும் இந்த விஷத்திற்குத் தான் உண்டு.
 
வெப்பத்தால் உருவான நிலைகள் விஷத்தின் தன்மை அடைந்தாலும் அதே அணுவின் தன்மை மோதப்படும் பொழுது இயக்கச் சக்திக்கு உறுதுணையாக இருக்கின்றது.
 
ஏனென்றால் பௌதீக முறைப்படி விளக்கம் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
 
நான் படிக்காதவன் தான் நமது குருவும் படித்தவரல்ல. உணர்ந்தறிந்து நுகரும் ஆற்றலைப் பெற்றவர். அகஸ்தியன் படித்தவன் அல்ல…! அகண்ட அண்டத்தினுடைய சக்தியும் தனக்குள் வளர்த்து விளைய வைத்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டவன்.
 
1.அவனின்று வரும் உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சப்படும் பொழுது
2.ருண்ட உலகமாக மாறும் இந்தப் பிரபஞ்சத்திலிருந்து ஒளியின் சுடராக என்றும் நிலை கொண்டு வாழ முடியும்
3.நம்பிக்கை உள்ளோர்கள் இந்தச் சக்தியைப் பெறலாம்.
 
அல்லது இந்த உடலின் வாழ்க்கை தான் சதம் என்று நிலையில் சென்றால் இந்த உணர்வின் தன்மை கொண்டு இருள் சூழும் நிலைக்கே அழைத்துச் சென்று மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும் உயிர்.
 
அதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் விடுபட வேண்டும்.
 
இதற்கு முன் நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அருள் ஒளியின் உணர்வுகளை இப்பொழுது பதிவாக்கப்படும் பொழுது அதனுடைய நினைவாற்றல் வந்தால் இந்த உணர்வின் இயக்கமாக மாற்றி உங்களில் உள்ள தீமைகளை மாற்றிடும் வல்லமை பெறுகின்றீர்கள்…! அத்தகைய வல்லமை பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.
 
ஏனென்றால் கற்காதவன் (என்னுடைய) உணர்வுக்குள் குருநாதர் அதைப் பதியச் செய்யும் போது அதை நுகர்ந்து… உணர்வின் அறிவாக எனக்குள் அதனின் இயக்கச் சக்தி வந்தது.
 
அதே உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி அதனுடைய செயலாக்கங்களாக உங்களுக்குள்ளும் உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.
 
நான் வெறும் வார்த்தையாகப் பேசவில்லை குரு அருளின் உணர்வுகள் உங்களுக்குள் அதைப் பதிவு செய்கிறது. அதன் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை மாற்றி ஒளி பெறும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும்.
1.அருள் ஒளியைப் பற்றுடன் பற்றி பிறவி இல்லாத நிலை அடைந்து
2.ஒளியின் சரீரமாக நாம் மாற வேண்டும் - இந்தப் பிரபஞ்சம் அழிவதற்கு முன்.
 
வேதனை உணர்வு கொண்டால் மனிதல்லாத ரூபத்தை மாற்றி நரக வேதனைப்படும் உயிரினங்களாக உயிர் மாற்றிவிடும் மனித உடலை இழந்து விடுவோம்.
 
அப்படிப் பிறந்தாலும் அசுர செயல்களை செயல்படும் உணர்வாகத் தான் மாற்றும். ஆகவே இன்றைய விஞ்ஞான உலகின் பேரழிவிலிருந்து நாம் மீள்தல் வேண்டும் எமது குரு அருளால் நஞ்சிலிருந்து நீங்கள் மீட்கப்பட வேண்டும்…”
 
ஒவ்வொரு உணர்வுகளிலும் பல கோடி வித்தன்மை கொண்டு கவர்ந்து வந்தாலும் விஷத்தை ஒடுக்கிய அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் செலுத்தப்படும் பொழுது ஒவ்வொரு நினைவாற்றலும் நீங்கள் நுகரும் பொழுதே அதை ஜீவ அணுவாக “ஒளியாக” மாற்றும் தன்மை வருகின்றது.
 
அருள் ஒளி பாய்ச்சி உணர்வின் தன்மையை இணைக்கப்படும் பொழுது அது வலு இழக்கும் தன்மை வருகின்றது
1.அதனால் தான் இணைத்தே உங்களுக்குள் அருள் உணர்வை நுகரச் செய்கின்றேன்.
2.ஒளியான வீரிய அணுவாக உங்களுக்குள் விளைய வேண்டும்
3.தீமைகளை அடக்கும் வல்லமை நீங்கள் பெற வேண்டும்
4.தீமையற்ற உடலை உருவாக்க வேண்டும்
5.பிறவி ல்லா நிலை அடைந்த அருள் ஒளியை உங்களுக்குள் பெருக்க வேண்டும்
6.அருள் வழியில் நீங்கள் இதைக் கடந்து செல்ல வேண்டும்
7.விண்ணிலே ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அரவணைப்பில் நீங்கள் செல்ல வேண்டும்.
 
அப்போது நச்சுத் தன்மைகள் அங்கே கரைக்கப்படுகின்றது. உங்களுக்குள் மோதும் உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெறுவீர்கள். அந்த நிலை உருவாக்கத்தான் இதைத் தெளிவாகக் கூறுகின்றேன் (ஞானகுரு).