ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 24, 2024

கலி முடிந்து “கல்கி வரும் நேரம்”

கலி முடிந்து “கல்கி வரும் நேரம்”


ஜென்மத் தொடருடனே ஒவ்வொருவரும் வாழ்வது பலரும் சொல்லும் உண்மை நிலை தான். சொந்தம் என்பது எதுவப்பா…?
 
 பந்தங்களுடன் வாழ்கின்றோம். இவ் வாழ்க்கையில். ஆதியில் மனித உயிரணு மற்ற ஜீவராசிகளின் உயிரணு தோன்றியதை ஒரே நாளில் தோன்றியதாகவும் ஒரே நாளில் அனைத்து ஜீவராசிகளும் மடியப்போவதாகவும் உபதேசம் செய்கின்றார்கள்.
 
1.அனைத்து உயிரினங்களும் ஒரே நாளில் தோன்றியனவா…?
2.ஒரே நாளில் தோன்றியிருந்தால் சுற்றிக்கொண்டே உள்ள மண்டலங்களிலிருந்து பெறும் சக்திக்கெல்லாம்
3.ஒரு நாள் மட்டும் தான் படைக்கும் வேலையா…? பாக்கி காலங்களில் அதை வளர்த்துக் காக்கின்றதா…?
 
ஒவ்வொரு நாளும் பல மண்டலங்களின் தொடர்புடன் ஒன்றுக்கொன்று ஈர்த்துப் பல சக்திகளைப் பெற்ற சூரியன் அதன் ஒளிக்கதிரிலிருந்து தினமும் தினமும் என்பது மட்டுமல்ல ஒவ்வொரு நொடி நொடிக்கும் குறைவான நேரத்திலும் பல உயிரினங்கள் தோன்றித் தோன்றி வளர்கின்றன.
 
இந்நிலை உள்ள பொழுது ஒரு நாளில் தோன்றிய உயிரணுக்கள் எல்லாமே என்பதன் பொருள் என்ன…? ஆரம்பக் காலத்தில் இருந்த ஜீவராசிகளும் இப்போதைய ஜீவராசிகளும் ஒரே அளவுடனா உள்ளன…?
 
புதிய புதிய உயிரணுக்கள் வளர்ந்து கொண்டே தான் உள்ளன.
 
1.இவ்வுலகம் எந்த நிலையில் தோன்றிற்று…?
2.வருடக் கணக்கும் நாள் கணக்கும் என்னிட முடியுமாப்பா…?
3.இவ்வுலகம் மட்டும் தனியாக தானாகவா வளர்ந்தது…?
4.என்று தோன்றியது…? என்று அழிகின்றது…? என்று சொல்லும் சக்தி யாராலும் முடிந்திடாது.
 
அழியா உலகம் என்றேன். ஆனால் காலங்கள் தான் மாறி மாறி வருகின்றன. நாம் அதற்குச் சூட்டிய பெயர் தான் கல்கி கலி இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் மச்சாவதாரம் இப்படிப் பல நாமங்கள்.
 
எல்லா மண்டலங்களிலுமே உயிரினங்கள் உண்டு என்றிட்டேன் முதலில். ஒவ்வொரு மண்டலத்தின் தன்மையும் இது போல் தான் சுற்றிக் கொண்டுள்ளது
 
இன்று ஒரு நாட்டில் பனி பெய்கின்றது ஒரு நாட்டில் அதி வெப்பமும் சமமான நிலை ஒரு இடத்திலும் அதி மழை பெய்து கொண்டே உள்ள இடமும் குளிர்ந்த நிலை கொண்ட இடமும் இப்படிப் பல நிலைகளைக் கொண்ட இவ்வுலகினில் பாலைவனம் நீர் நிலை இப்படி ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு தன்மை உள்ளதன் விளக்கத்தை முதலிலேயே சொல்லி உள்ளேன்.
 
இந்நிலைகள் எல்லாம் இப்பொழுது உள்ள உயிரினங்களின் நிலையும் இப்படியே இருக்கப் போவதில்லை. கலி கடைசியில் உயிரினங்கள் எப்படி மாறிக் கல்கிக்கு வருகின்றன…? என்பதனைத் தான் நாம் அறிய வேண்டும்.
 
உலகமே அழிகின்றது என்றாய்…! எப்படி அழியும் இவ்வுலகம்…? இவ்வுலகம் அழிந்து மற்ற மண்டலத்தின் மேல் போய் விழுமா…? இவ்வுலகம் இல்லாவிட்டால் சந்திரனும் செவ்வாயும் உயிர் வாழ முடியுமா…? செவ்வாயும் சந்திரனும் இல்லாவிட்டால் அதன் தொடர்புடைய மண்டலங்களின் நிலை என்ன…?
 
1.இவ்வுலகம் அழிகிறது என்றால்
2.சக்தியின் சொரூப நிலையே அழிய வேண்டும்.
 
சக்தியின் சொரூப நிலை அழிந்தாலும் சக்தியின் உயிர் பெற்ற மண்டலங்கள் எல்லாமே மண்டலங்கள் எல்லாமே என்பது அனைத்து மண்டலங்களும் ஜீவன் இல்லாமல் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து ஜீவனில்லாமல் இருக்கும் நாள் எதுவப்பா…?
 
அனைத்து மண்டலங்களும் ஜீவன் இல்லாமல் விழுந்தாலும் இப்பொழுது உள்ள உலகின் ஜடப்பொருள்கள் எல்லாம் எங்கப்பா செல்லும்…? அழிவு என்பதற்கே அர்த்தம் இல்லையப்பா…! காலங்கள் மாறுபடுகின்றன.
 
இப்பொழுது இக்கலி முடிகிறது என்கின்றோம். இக்கலி எப்படி முடிகின்றது என்பீர்…? இக்கலியில் உள்ள நிலை மாறுபடத்தான் சில இடங்களில் நில அதிர்வும் நெருப்புக் கோளங்களும் அதி மழையினால் வரும் சேதங்களும்.
 
இப்புமி ஈர்த்து வெளியில் கக்கும் நிலையில் இருந்துதான் ஒவ்வொன்றும் நடக்கின்றது.
 
இக்கலியில் வந்த மனிதர்களினால் அவர்கள் எண்ணத்தைக் கொண்டு வாழும் சுகத்திற்காகச் செய்த வினையான இச்செயற்கை என்னும் நிலை பல ஏற்படுத்தி விஞ்ஞானம் கொண்டே தன்னைத்தானே அழிக்கச் செய்த வினையப்பா.
 
இவ்வினையெல்லாம் பூமித்தாயின் உன்னத பொக்கிஷங்களைச் செயற்கைக்கு எடுத்து விட்டானப்பா திரவங்களாகவும் உலோகங்களாகவும்.
 
இவன் செயற்கைக்கும் இயற்கையை அழித்துத் தான் உண்டு பண்ணுகின்றான். முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன் ஒன்றை அழித்து ஒன்று சக்தி பெறுகிறது என்று.
 
இந்நிலை புரிந்ததா…?
 
பூமியில் உள்ள பொக்கிஷத்தை இவன் எடுத்ததினால் வந்ததின் வினை தான் இந்நிலையெல்லாம்.
 
முன் காலத்தில் கால நிலை ஒன்று போல் இருந்தது ஆடி மாதத்தில் காற்றும் ஐப்பசியில் மழையும் மார்கழியில் குளிரும் சித்திரையில் வெப்பமும் இப்படிக் காலநிலை ஒன்று போல் இருந்ததப்பா.
 
மனநிலை மாறுபடுகின்றது மனநிலை மாறிபடுகின்றது என்பதெல்லாம் இச்செயற்கைக்கு ஏங்கும் மனிதர்களின் ஆசைக்காக பூமித்தாயின் சக்தியைத் தோண்டி எடுத்ததின் வினையைச் செப்புகின்றேன்.
 
இவன் பூமியிலிருந்து செயற்கையாகப் பல சக்திகளை எடுத்ததினால் இப்பூமியின் தன்மையே மாறுபட்டு இப்பொழுது கடலாக உள்ள இடமெல்லாம் பாலைவனமாகி பாலைவனமாக உள்ள இடமெல்லாம் கடலாகிச் சுற்றிக் கொண்டே உள்ள பூமித்தாய்
1.ஒரு நொடியில் ஏற்படுத்தும் சிறு அசைவினால் உண்டாகும் நிலையால் இக்கால நிலை மாறி கலி முடிந்து கல்கி வரும் நிலை.
2.அதன் ஆரம்ப நிலை நான் இப்பொழுது சில இடங்களில் நடந்திடும் இக்கோர நிலையெல்லாம்.
3.இவ்வினையெல்லாம் ஆண்டவன் செய்யவில்லை அவனவனே செய்ததுதான்.
4.இனியும் வருவது இதன் தொடர்ச்சி தான்.