ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 2, 2024

மனிதன் தன் நிலை உணர்ந்து வாழ்ந்திட வேண்டும்

மனிதன் தன் நிலை உணர்ந்து வாழ்ந்திட வேண்டும்

 

தெய்வப் பிறவி மனிதப் பிறவி என்ற பாகுபாடு பிறவியில் இல்லை
1.தேவனுக்கு அடுத்தது மனிதப் பிறவி என்கிறார்கள். தேவப் பிறவியாக யாரும் பிறப்பதில்லை.
2.வம்சவழி ராஜயோகம் என்ற நிலை கொண்டெல்லாம் பிறப்பது அடுத்த நிலை தான்.

உயிர் அணுக்கள் தோன்றிய நாள் முதலே சமமான நிலையில் தான் எல்லா உயிரணுக்களுமே ஜீவன் பெற்றன.

ஆண்டவனாகவும் மனிதனாகவும் பேயாகவும் மிருகமாகவும் மற்ற எல்லா ஜீவ ஜந்துக்களாகவும் ஆனதெல்லாமே
1.அச்சக்தியின் அருளில் சமமான நிலையில் வந்த உயிரணுக்கள் எல்லாம்
2.அதனதன் சுவாச நிலை கொண்டு தான் பல நிலை கொண்ட ரூபமெடுத்து ஜீவன் பெற்று வாழ்கின்றது.

சக்தியின் அருளில் சமமான நிலை கொண்டு உலக ஆரம்பத்தில் உயிர் பெற்ற நாம் எல்லோருமே… இன்று ஆண்டவனாகவும் மனிதனாகவும் மற்ற ஜீவராசிகளாகவும் இன்றைய உலகில் ஜீவன் பெற்று வாழ்வதெல்லாம்…
1.“நாம் அன்று எடுத்த… இன்று எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.நமக்கு நாமே தேடிக் கொண்ட நிலை தான் இன்றுள்ள எல்லா நிலைகளுமே.
3.நாம் இன்றுள்ள நிலையையாவது நிலை நிறுத்தி வாழ்வதற்கே இப்பாட நிலைகள் எல்லாம்.

ஆக… ஆண்டவன் பிறப்பு வேறு மனிதன் பிறப்பு வேறு என்ற மாறுபட்ட நிலை அச்சக்தியின் அருளிலிருந்து நாம் பெறவில்லை.

நாம் இன்று இந்நிலை பெற்று வாழ்வதுவே உண்மையை ஊன்றிப் பார்த்தால்
1.தெய்வ நிலையில் இருந்து மனித நிலைக்கு வந்தது தான்.
2.மனிதனின் நிலை கொண்டு நம் நிலையை நாம் உணர்ந்து “நாம் விட்டு வந்த தெய்வப் பிறவியை நாம் ஏற்கும் நிலை நமக்குள்ளது…”
3.தெய்வத்தின் தெய்வமாகக் கலந்துறவாடும் நிலையை ஏற்ற நாம் இந்த மனிதப் பிறவியிலேயே அப்பாக்கியத்தைப் பெற்று வாழ்ந்திட வேண்டும்.

மனிதனின் நிலை அறிந்து வாழ்ந்திட வேண்டும்.

காலமும் நேரமும் பார்த்து வருவது அல்ல. தன் நிலை உணர்ந்துதான் வாழ்ந்திட வேண்டும் வாழ்க்கையை.

மனிதன் தன் நிலையில் தன் சுவாசத்தையும் எண்ணத்தையும் கெடுத்துக் கொள்வதால் தான்… ஆண்டவனாகும் நிலையை மாற்றி ஆவி உலகில் அல்லல் பட்டு… பல ஜென்மங்கள்… பல ஜீவராசிகளின் ஜென்மங்களைப் பெற்றுச் சுற்றிக் கொண்டே உள்ள நிலை வருகிறது.

அந்நிலையை நாம் ஏன் பெற வேண்டும்…?